Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Patchai Poiyum Sivappu Unmaiyum!
Patchai Poiyum Sivappu Unmaiyum!
Patchai Poiyum Sivappu Unmaiyum!
Ebook127 pages1 hour

Patchai Poiyum Sivappu Unmaiyum!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402158
Patchai Poiyum Sivappu Unmaiyum!

Read more from Rajesh Kumar

Related to Patchai Poiyum Sivappu Unmaiyum!

Related ebooks

Reviews for Patchai Poiyum Sivappu Unmaiyum!

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Patchai Poiyum Sivappu Unmaiyum! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    பச்சைப் பொய்யும் சிவப்பு உண்மையும்

    Patchai Poiyum Sivappu Unmaiyum

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    பச்சைப் பொய்யும் சிவப்பு உண்மையும்

    1

    மருத்துவ அதிர்ச்சிகள்

    ஒரு மனிதனுக்கு மரணம் எப்படி வரும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று.

    மனிதன் உடனடியாய் இறப்பது ஹார்ட் அட்டாக் மூலம்தான் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் CPR என்ற மின்னல் வேக மரணமும் ஏற்படுவதுண்டு.

    CPR என்பதின் விரிவாக்கம் கார்டியோ-பல்மனரி ரீசஸ்டிசியேஷன். சி.பி.ஆர். வர என்ன காரணம்?

    பூஜையறையிலிருந்து வெளியே வந்தாள் தெய்வநாயகி. உதடுகளிலிருந்து ‘யாதேவி சர்வ பூதேஸீ லட்சுமி ரூபேண’ என்கிற லட்சுமி ஸ்தோத்திரம் ஸ்பஷ்டமாய் உதிர்ந்து கொண்டிருக்க ஹாலுக்குள் நுழைந்தாள்.

    ஐம்பது வயது தெய்வநாயகிக்கு எண்பது கிலோ எடையுள்ள உடம்பு. ஒரு தடவை மாடிப்படி ஏறினாலே வியர்த்து விறுவிறுத்துப் போய் சோபாவுக்குச் சாய்ந்து ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படியான ஆரோக்கியம். பி.பி.யும், சுகரும், கொலஸ்ட்ராலும் அவளுடைய உடம்பை நிரந்தரமாய்க் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு இருபத்திநாலு மணி நேரமும் பிஸியாய் இருந்தது.

    ஹாலில் உட்கார்ந்து அன்றைய டைம்ஸ் ஆஃப் இண்டியாவை புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்த ஞானமூர்த்தி மனைவியைப் பார்த்ததும் பேப்பரைத் தாழ்த்தினார்.

    என்ன தெய்வா... பூஜை முடிஞ்சுதா?

    ம்... முடிஞ்சுது...

    எனக்குப் பசிக்குது... இன்னிக்கு பிரேக்பாஸ்ட் என்ன?

    கோதுமை ரவை உப்புமா ரெடியாய் இருக்கு. வேலைக்காரி ரெண்டு நாளா வரலை... என்னாலேயும் விதவிதமாய் டிஃபன் பண்ண முடியலை... இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க...!

    தெய்வநாயகி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஞானமூர்த்தியின் செல்போன் ஒலித்தது.

    இந்தப் பசி நேரத்துல யார்ன்னு தெரியலையே...?

    தெய்வநாயகி சிரித்தாள். நீங்க ஒரு சி.பி.ஐ. ஆபீஸராய் 25 வருஷ காலமாய் சர்வீஸ் பண்ணி போன வாரம்தான் ரிடையர் ஆனிங்க. விஷயம் தெரியாத உங்க ஃப்ரண்ட்ஸ் பல பேர்க்கு இப்பத்தான் விஷயம் தெரிஞ்சிருக்கும். இனி ஒரு பத்துப் பதினைஞ்சு நாளைக்கு இப்படித்தான் நேரம் கெட்ட நேரத்துல போன் வரும். தவிர்க்க முடியாது. அட்டெண்ட் பண்ண வேண்டியதுதான். தட்டுல உப்புமாவைப் போட்டு வைக்கிறேன். வந்து உட்கார்ந்து சாப்பிட்டுகிட்டே பேசுங்க...

    ஞானமூர்த்தி செல்போனை எடுத்துக் காதுக்குப் பொருத்தி மெலிதாய்க் குரல் கொடுத்தார்.

    ஹலோ!

    மிஸ்டர் ஞானமூர்த்தி? ஒரு பெண் குரல் கேட்டது.

    எஸ்.

    "குட் மார்னிங்... ஸார்! நாங்க ‘நவபாரதம்’ டி.வி சேனலில் இருந்து பேசறோம்... என் பேர் ஜெயக்கொடி... ப்ரோக்ராம் எக்ஸிக்யூட்டீவ்வாய் ஒர்க் பண்றேன். எங்க டி.வியில் ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் ஏழு மணி'யிலிருந்து ஏழரை வரைக்கும் ‘இவர்கள் வித்தியாசமானவர்கள் என்கிற ஒரு நிகழ்ச்சி பண்றோம்.

    "எத்தனையோ பேர் எத்தனையோ துறைகளில் பணிபுரிந்தாலும் அதில் சிலர் மட்டும் வித்தியாசமாய்ச் செயல்பட்டு மற்றவர்களோட கவனத்தைக் கவர்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை இனம் கண்டு பேட்டி எடுத்து ஒளிபரப்பறோம்.

    அந்த வகையில் சி.பி.ஐ. என்னும் குற்றவியல் துறையில் 25 வருஷங்களாய்ப் பணி புரிந்து சில நாட்களுக்கு முன்பாய் ஓய்வு பெற்றுவிட்ட உங்களை எங்களுடைய நவபாரதம் டி.வியின் சார்பாய்ப் பேட்டி எடுக்க விருப்பப்படறோம். அதுக்கு உங்களுடைய ஒத்துழைப்பும் சம்மதமும் வேணும்.

    ஞானமூர்த்தி கேட்டார்.

    இது எது மாதிரியான நிகழ்ச்சின்னு சொன்னீங்க?

    இவர்கள் வித்தியாசமானவர்கள்.

    நான் எதுல வித்தியாசப்படறேன்...? கடந்த 25 வருஷ காலமாய் சி.பி.ஐ.யில் ஒரு அதிகாரியாய் சர்வீஸ் கொடுத்து வழக்கம் போல் மத்தவங்க எப்படி ரிடையர்ட் ஆனாங்களோ அதே மாதிரிதான் ரிடையராகி வீட்ல உட்கார்ந்திருக்கேன்...

    மறுமுனையில் அந்தப் பெண் ஜெயக்கொடி சிரித்தாள்.

    ஸார்! நாங்க காரணம் இல்லாம உங்களைச் செலக்ட் பண்ண மாட்டோம். உங்களுடைய சர்வீஸ் காலத்துல நீங்க அரசியல்வாதிகளுக்குப் பயப்படாம நேர்மையான முறையில் பணியாற்றியிருக்கீங்க. செல்வாக்கு மிக்க ஒரு அரசியல் தலைவர் வீட்டுக்கு - கைது வாரண்ட்டோடு - மற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் போகத் தயக்கம் காட்டியபோது நீங்க தைரியமா அவரைக் கைது பண்ணப் போனீங்க.

    ஞானமூர்த்தி சிரித்தார். சுப்ரீம் கோர்ட் அந்த அரசியல் தலைவரைக் கைது பண்ணச் சொல்லி பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. முறையான கைது வாரண்ட் கையில் இருந்தால் யார் வீட்டுக்கு வேணும்னாலும் போலாமே? என்னைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது. குற்றம் யார் பண்ணியிருந்தாலும் அவங்களைக் கைது பண்ணத்தானே சி.பி.ஐ. இருக்கு!

    யூ.மே பி கரெக்ட் ஸார்...! பட் எங்களோட பார்வையில் அது ஒரு துணிச்சலான விஷயம் ஸார்.

    இட்ஸ்... ஓ.கே... தாங்க்ஸ் ஃபார் யுவர் கமெண்ட்

    அப்புறம்... ஸார்...

    சொல்லும்மா...!

    இன்னொரு விஷயத்திலும் நீங்க உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டினீங்க!

    அது என்ன விஷயம்?

    போன வாரம் நீங்க ரிடையரான போது உங்க டிபார்ட்மெண்டைச் சேர்ந்த அதிகாரிகள் உங்களுக்குப் பிரிவுபசார விழாவும், பாராட்டு விழாவும் நடத்த முன்வந்த போது, வேண்டாம்னு சொல்லி மறுத்ததோடு இல்லாம, உங்களுடைய உபயோகத்துக்காகக் கொடுத்து இருந்த காரைக் கூடப் பயன்படுத்திக்காம ஆபீஸிலிருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு வீடு போய் சேர்ந்தீங்களாமே?

    "ஆமா! அதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு? சாயந்தரம் ஆறு மணி வரைக்கும் ஒரு அரசு ஊழியனாய், சி.பி.ஐ. அதிகாரியாய் இருந்தேன். ஆறு மணிக்கு மேல் ஒரு விநாடி அதிகமாயிட்டாலே நான் ஒரு முன்னாள் அரசு ஊழியன். அதுக்கப்புறம் அரசு சம்பந்தப்பட்ட எந்த ஒரு சலுகையையும் அனுபவிக்க எனக்கு உரிமையில்லை. அதனால்தான் அரசாங்கம் எனக்குக் கொடுத்த காரை பயன்படுத்திக்காம என்னோட சொந்தப் பணத்தில் ஆட்டோ பிடிச்சு வீடு வந்து சேர்ந்தேன்...

    "அது மாதிரி பிரிவுபசார விழா என்கிற பேர்ல பணத்தைச் செலவு பண்ணி மீட்டிங் போடறதோ அந்த மீட்டிங்கில் எனக்கு மாலையைப் போட்டு, தஞ்சாவூர் தட்டைக் கையில் கொடுத்து,

    Enjoying the preview?
    Page 1 of 1