Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyiroduthan Vilaiyaduven!
Uyiroduthan Vilaiyaduven!
Uyiroduthan Vilaiyaduven!
Ebook89 pages39 minutes

Uyiroduthan Vilaiyaduven!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well known for his detective and thriller stories. These Novel collection is published in many popular magazines.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402155
Uyiroduthan Vilaiyaduven!

Read more from Rajesh Kumar

Related to Uyiroduthan Vilaiyaduven!

Related ebooks

Reviews for Uyiroduthan Vilaiyaduven!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Uyiroduthan Vilaiyaduven! - Rajesh Kumar

http://www.pustaka.co.in

உயிரோடுதான் விளையாடிவேன்!

Uyiroduthaan Vilayaduvaaen!

Author:

ராஜேஷ் குமார்

Rajesh Kumar

For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

உயிரோடுதான் விளையாடிவேன்!

1

குளிர்சாதனம் பொருத்தப்பட்டிருந்த அந்த அலுவலக அறை ஊட்டியாக மாறியிருந்தது. இருபதடிக்கு இருபதடி என்ற அளவுகளில் மிகப்பெரிய அறை. கண்களை உறுத்தாத ஊதா நிற உயர்தர பெயிண்ட் பூச்சு. கண்ணாடி ஜன்னல்களை வருடும் திரைச்சீலைகள். குற்றால அருவிவால் போஸ்டராய் மாறி, சுவரின் ஒரு பக்கத்தை அடைத்துக் கொண்டிருந்தது.

‘பளபள’வென்று - தேக்குக் கதவில் வினித்குமார் பி.டெக், எம்.பி.ஏ., மானேஜிங் டைரக்டர் என்ற ஆங்கிலப் பித்தளை எழுத்துக்கள் புடைப்பாய்த் தெரிய, கம்பெனியின் வளர்ச்சி பற்றிய வரைபடம் ஒன்று பலவித நிறக் கோடுகளால் ஓடியிருந்தன.

கனமான கண்ணாடி வேய்ந்த மேசைக்கு அப்பால் - சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் வினித்குமார், வயது முப்பதுக்குள். மெலிதான நீலவர்ண சபாரி உடையில் தன் தேகாப்பியாச உடம்பை நுழைத்திருந்தான். சதைப்பிடிப்பான சதுர முகம். வலது கண்ணுக்கு மேல் - நெற்றியில் சின்னதாய் ஒரு காயத் தழும்பு. அந்தத் தழும்பு கூட அவனுடைய முகத்திற்கு அழகாக இருந்தது. டிரிம் செய்யப்பட்ட தலைமுடி, வலது கையில் முழுக்கை சர்ட்டின் பரப்புக்குக் கீழே தங்க பிரேஸ்லெட் மின்னியது. எந்த நேரமும் கண்களைக் கவ்வியிருக்கும் குளிர் கண்ணாடி - அலுவலக நேரங்களில் மட்டும் மேசையின் மீது மல்லாந்திருக்கும்.

கோப்புகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வினித்குமார், தன்னுடைய இடது கையைத் தன்னிச்சையாய் நீட்டி இண்டர்காம் ரிசீவரை எடுத்து ஒரு எண்ணை டயலில் சுழற்றினான்.

மறுமுனை முணுமுணுத்து ரிசீவர் எடுக்கப்பட்டது.

மிஸ்டர் முரளிதரன்...?

எஸ்.. சார்..

இன்னிக்கு என்ன தேதி...?

முப்பது சார்...

மாத அறிக்கை இன்னும் என் மேசைக்கு வரலை. என்னாச்சு..?

தயார் பண்ணிட்டிருக்கேன் சார்...

என்னது...? தயார் பண்ணிட்டிருக்கீங்களா..? நாற்பது நாளா..? நேத்திக்குச் சாயந்தரமே என்னோட மேசைக்கு அறிக்கை வந்திருக்கணும்... பேர்ன நிமிடம் வரைக்கும் வரலை. வாடிக்கையாளர் சர்வீஸ் ஃபைலை ரெண்டு நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன். அதுவும் வரலை... என்ன வேலை செய்றீங்க..? இந்த ஆபீசுல வேலை நடக்குதா இல்லையான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு...

வினித்குமார் படபடவென்று பொரிந்து தள்ள, மறுமுனையில் இருந்த மானேஜர் முரளிதரன் சற்றே தணிந்த குரலில் சொன்னான்.

மன்னிக்கணும் சார்... எப்படியோ தாமதம் ஆயிடுச்சு...! இன்னும் பத்து நிமிடத்துல நீங்கள் கேட்ட அறிக்கையை அனுப்பி வைக்கிறேன்.

முதல்ல அதைச் செய்யுங்க...

ரிசீவர் மறுமுனையில் - இரண்டாய் உடைபடுகிற மாதிரி வைக்கப்பட - முரளிதரன் பெருமூச்சு விட்டான்.

பக்கத்து மேசையில் உட்கார்ந்திருந்த ஸ்டெனோ லீலாவதி சிரித்தாள் மெள்ள, என்ன சார்... எம். டி. ரொம்ப சூடா இருக்கார் போலிருக்கே..?

ஆமா..! அறிக்கை இன்னும் மேசைக்கு வரலையாம். புடிச்சுக் காய்ச்சுட்டார்... சொன்ன முரளிதரன் அழைப்பு மணியைத் தட்ட பியூன் எட்டிப் பார்த்தான்.

சார்

அக்கவுண்டன்ட்டை வரச்சொல்லு...

அடுத்த நிமிடம் அக்கவுண்டன்ட் கோபால்சாமி, நெற்றியில் அழியாத திருநீறு பட்டையோடு - மூக்குக்குக் கீழே துளியுண்டு மீசையை வைத்துக் கொண்டு முரளிதரன் முன்பு நின்றிருந்தார்.

"அறிக்கை எம்.டி. மேசைக்கு ஏன் இன்னமும் போகலை...?

Enjoying the preview?
Page 1 of 1