Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vellai Nirathiloru Vaanavil
Vellai Nirathiloru Vaanavil
Vellai Nirathiloru Vaanavil
Ebook115 pages44 minutes

Vellai Nirathiloru Vaanavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580114202234
Vellai Nirathiloru Vaanavil

Read more from Hamsa Dhanagopal

Related to Vellai Nirathiloru Vaanavil

Related ebooks

Reviews for Vellai Nirathiloru Vaanavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vellai Nirathiloru Vaanavil - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    வெள்ளை நிறத்திலொரு வானவில்

    Vellai Nirathiloru Vaanavil

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    வெள்ளை நிறத்திலொரு வானவில்

    1

    இளசுகள் நடுவில் முழு நிலவாய் ஒளிர்ந்தாள் துஷ்யந்தி அவள் நேர்த்தியான அலங்காரமும் நளினமும் அவளை தேவதையாக்கி மற்றவர் பார்வையை ஈர்த்துக் கொண்டிருந்தன. அவளைத் தனியே பார்ப்பது கடினமாய் இருந்தது தியானேஸ்வரனுக்கு இப்போது விட்டால் அவள் முதல் இரவு அறைக்குள் போய்விடுவாள். எப்படிப் பேச முடியும்?

    அதற்குள் சொல்லி ஆக வேண்டும். தியானேஸ்வரனுக்குத் தவிப்பாய் இருந்தது.

    அலங்காரம் நடைபெறும் அறைப் பக்கம் போனாலே இளம் பெண்களின் கேலியும் கிண்டலும் கூவி அழைத்தன. நின்று கேட்டுப் போகச் செய்தன. தொள தொள பைஜாமா, ஜிப்பாவிலிருந்த தியானேஸ்வரன் இந்த மூன்று நாட்களில் கறுத்து இனைத்துக் களைத்துவிட்டிருந்தான். ஒரே தங்கையான துஷ்யந்திக்கு தந்தைக்கு தந்தையாகவும் தாய்க்குத் தாயாகவும் இருந்து மணமேடைக்கு அனுப்புவதென்றால் சாதாரணமா?

    நெற்றியில் புரண்டு விழும் சுருள் முடியைத் தள்ளிவிட்டபடி, மீசை முறுக்கியபடி அலங்காரம் நடைபெறும் அறைக்கு வெளியே நின்றான். என்னதான் தமையனாக இருந்தாலும் அங்கே பெண்களிடையே சர்வ சாதாரணமாய் போய் நிற்க முடியாது. கூச்சம் தடை விதித்தது. அவனும் இளைஞன்தான் என்பதை பருவம் குத்திக் காட்டிற்று.

    தோழிகள் அருவியாய் சிரித்தனர். கூட்டத்தினிடையே மலர் விநியோகம் செய்திருந்த விலாசினி இவனைப் பார்த்துவிட்டாள். எழுந்து வெளியே வந்தாள்.

    ஏதாவது வேணுமா தியானு.

    விலாசினியின் முகம் இவனைப் பார்த்ததில் மலர்ந்தது. விழிகளில் பவர் ஸ்டேஷனே நிர்மாணம் கண்டிருந்தது.

    துஷ்கிந்திக்குத் திருமணம் நடந்துவிட்டதால் இனிமேல் தங்கள் வழியில் குறுக்கிட யாரும் இல்லை என்கிற நிம்மதி அவள் முக்மெங்கும் தெரிந்தது. தியானேஸ்வரன் மெல்லிய குரலில் சொன்னான்

    துஷ்யந்திகிட்ட நான் கொஞ்சம் பேசணுமே.

    வரச் சொல்றேன் பேசுங்களேன்.

    நெற்றியில் அடித்துக் கொண்டான் தியானேஸ்வர். இன்னும் குரலைத் தழைத்தான்

    தனியாக பேசனும் அவளை வரச் சொல்றியா.

    விலாசினியின் நெற்றியில் சிந்தனை முடிச்சுக்கள்.

    உன். போய் மாடியில் இருங்க அனுப்பறேன்.

    விலாசினி உள்ளே போய்விட்டாள்.

    தியானேஸ்வரனுக்கு வியர்த்தது. கைத் துண்டால் துடைத்தபடி மாடி படிகளில் ஏறினான். மாப்பிள்ளை சிரிப்புடன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிகிறது. படித்தவன். நல்ல வசதி படைத்தவன். இவர்களுக்கு நிகரான பணம் படைத்தவன். எல்லாவற்றிலும் இவன் தேர்வு ஏ ஒன்தான். ஆனால் இது இந்த…

    தியானேஸ்வருக்குத் தங்கையிடம் கட்டாயம் பேச வேண்டும் என்கிற தவிப்பு தங்கை ஏதாவது உளறி விட்டால் இவன் பிரயத்தனங்கள் அத்தனையும் வியர்த்தமாகிவிடும். தங்கையே எதிலும் யதார்த்தமானவள். பிடிவாதமானவள். அவளை இந்த அளவு மாற்றியதே பெரிய விஷயம்….

    அலங்கரிக்கப்பட்ட தந்தப் பதுமை போலிருந்த துஷ்யந்திக்கு உரக்க அழைக்கவோ பேசவோ முடியாத நிலை படிகளில் விரைந்து ஏதும் அண்ணனைத் தொடர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானாள் அவள்.

    மொட்டை மாடியில் காற்று சில்லென்று உடலைத் தொட்டு இதம் சொல்லிற்று.

    வானில் நட்சத்திர புஷ்பங்கள் மட்டுமே கண்ணடித்துக் கொண்டிருந்தன. நிலாத்துண்டோ ஒய்வு எடுக்கப்போய் இருந்தது. மேகத் திரைகள் தாறுமாறாய் இழுக்கப்பட்டு திறக்கப்பட்டன. எதற்கு அழைத்தாய் என்று கேட்க முடியாமல் வானத்தில் எதையோ ஊன்றித் தேடுபவள் போல பார்த்துக் கொண்டிருந்தாள் துஷ்யந்தி அவள் அழகிய முகத்தில் வேகமாய் மூச்சுக்காற்று இழுக்கப்பட்டதால் மார்பு ஊஞ்சலாடிற்று.

    கைப்பிடிச் சுவரோரம் சாய்ந்து கீழே பார்த்தான். தோட்டத்தில் தலைதூக்கி நின்ற அத்தனை மரங்களிலும் மின் விளக்குகள் பூத்திருந்தன. எல்லாம் செல்லத் தங்கையின் திருமணத்திற்காக…

    அங்கே என்னைக் காணலைன்னு தேடுவாங்க. என்னன்னு சொல்லு.

    அவள் கோபத்தையும் வெறுப்பையும் அண்ணா என்று உச்சரிக்காததில் காட்டினால். அவனுக்கு புரிந்தது. அதை பெரிது படுத்தவில்லை எப்போதும் போல.

    துஷ்யந்தி, நம்ம அம்மா அப்பா இருந்து செய்ய வேண்டியதை தான் தனியா இருந்து செய்துட்டேன்…"

    தெரியுது… சொல்லு….

    துஷ்யந்தி மாப்பிள்ளை தங்கமானவர். படிச்சவர், அவர்கிட்ட…

    இதெல்லாம் உன் கணிப்பு… பர்ஸ்ட் விஷயத்துக்கு வா. உன்னோட விருப்பம் நிறைவேறியாச்சு… அப்புறம் இன்னும் பாக்கி என்ன இருக்கு.

    இல்லை துஷி இனிமேதான் எல்லாம் ஆரம்பம். அதுக்குத்தான் அழைச்சேன் துஷி

    சொல்லு என்பது போல வெறுப்புடன் பார்த்தாள் அவள்.

    இன்னிக்கு என் செயல் அனேக்கு வெறுப்பா இருக்கலாம் துஷி எது செஞ்சாலும் அது உன் நன்மைக்காகத்தான் செய்வேன்.

    போதுமே உபதேசம் என் ப்ரண்ட்ஸ் தேடி வந்துருவாங்க.

    பிரணவ் கிட்ட எதையும் சொல்லிராதே.. முறைத்தாள் அவன். கண்களில் நெருப்புச் சுடர்கள் தெறித்து விழுந்து விடுவது போன்ற உக்கிர பார்வை.

    உன் நன்மைக்காகத்தான் சொல்றேன் துஷ்யந்தி.

    அவளிடமிருந்து ஒரு சின்ன முனகல்.

    நம்ம குடும்ப கெளரவம் மரியாதை எல்லாம் உன்கிட்டத்தான் இருக்கு அதைப் பேணி காக்கறதும் தூக்கி நடுத்தெருல வீசறதும் உன் கையிலேதான் இருக்கு.

    இதைத்தானே சொல்ல அழைச்சே. புயலில் மலர்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவது போல அவள் இதழ்கள் முனகின.

    எதையும் சொல்லிராதே துஷ்யந்தி.

    அவள் கைகளைப் பிடித்துக் கெஞ்சினான் தியானேஸ்வர்.

    அவள் வெடுக்கென கைகளைப் பறித்துக் கொண்டாள்.

    "சொல்லியும் ஒன்றுதான். சொல்லாம இருந்தும் ஒன்றுதான். சொல்லி

    என்ன ஆகப்போறது."

    நம்ம அம்மா மேலே ஆணையா நீ சொல்லக்கூடாது துஷ்யந்தி."

    உளறாதே. இதைச் சொல்லவா என்னை அழைச்சே என் ப்ரண்ட்ஸ்ங் கேலி பண்ணுவாங்க. உன் விருப்பம்போல இனிமே எல்லாம் நடக்கும். சந்தோசப்படு நல்லா சந்தோஷப்படு

    "உளறாதே துஷி, உனக்காக இத்தனைப் பெரிய பங்களாவைக் கட்டி குடுத்திருக்கேன். எனக்காக ஒதுக்கி வச்ச சொத்து மதிப்பை விட உனக்காக

    Enjoying the preview?
    Page 1 of 1