Anuradha Ramananin Sirukathaigal Part - 1
4.5/5
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Puthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Koondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsAambalai Rating: 5 out of 5 stars5/5Anna Rating: 5 out of 5 stars5/5Uravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Vera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Salanam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Karkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsParuva Vayasum... Paal Manasum... Rating: 5 out of 5 stars5/5Nila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Kaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsNadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Uthama Thirudi Rating: 5 out of 5 stars5/5
Related to Anuradha Ramananin Sirukathaigal Part - 1
Related ebooks
Saathaga Paravai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Neram Rating: 5 out of 5 stars5/5Thottil Sugam Rating: 5 out of 5 stars5/5Mohana Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsSumai Rating: 0 out of 5 stars0 ratingsPachonthigal Rating: 0 out of 5 stars0 ratingsMannukku Vandha Nila Rating: 0 out of 5 stars0 ratingsUravukkendru Virintha Ullam Rating: 1 out of 5 stars1/5Amma, Amma Rating: 5 out of 5 stars5/5Thoda Thoda Thodarum Rating: 5 out of 5 stars5/5Pokiri Mama Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhkai Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsAnna Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsSarppa Pali Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalil Nee Oru Kaviyam Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyil Irangum Vimanangal Rating: 5 out of 5 stars5/5Vetti Vergal Rating: 5 out of 5 stars5/5Paruva Vayasum... Paal Manasum... Rating: 5 out of 5 stars5/5Mella Vilagum Irul Rating: 0 out of 5 stars0 ratings23 - m Padi Rating: 5 out of 5 stars5/5Payirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Arali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratingsNerunji Mull Rating: 0 out of 5 stars0 ratingsSivasankari Sirukathaigal Irandam Thoguppu Rating: 5 out of 5 stars5/5Kannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Nandhini Rating: 0 out of 5 stars0 ratingsSandhiya Rating: 5 out of 5 stars5/5
Reviews for Anuradha Ramananin Sirukathaigal Part - 1
2 ratings0 reviews
Book preview
Anuradha Ramananin Sirukathaigal Part - 1 - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
அனுராதா ரமணனின் சிறுகதைகள்
பாகம் - 1
Anuradha Ramananin Sirukathaigal
Part - 1
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
அனுராதா ரமணனின்
சிறுகதைகள்
பாகம் - 1
அனுராதா ரமணன்
முன்னுரை
என் அன்பான வாசகர்களுக்கு,
வணக்கம். நலம், நலம்தானே... பூம்புகார் பதிப்பகம், என்னுடைய இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை, மூன்று பெரும் தொகுப்பாக வெளியிட்டு, அதன் மூலம் உங்களுக்கும், எனக்குமிடையே வலுவானப் பாலத்தைக் கட்டியுள்ளது. அதற்காக நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன்...
ஒவ்வொரு தொகுதியிலும், சுமார் எண்பது சிறுகதைகள்... எடுத்து வைத்துக் கொண்டு ஒரே மூச்சில் படிப்பதென்பது சாத்தியமில்லை. முதலாவது கை வலிக்கும்...
ஆனாலும் அந்தச் சுமை, அதன் வலி உங்களுக்கெல்லாம் பிடிக்கும் என்றே நம்புகிறேன்... தவமிருந்து பெற்ற குழந்தை, கொஞ்சம் 'கழுக் மொழுக்’கென்று இருந்தால், அதற்காகத் தோளில் சுமக்காமல், கீழே போட்டு விடுவோமா என்ன...
மெல்லப் படியுங்கள்… நிதானமாய் படியுங்கள்... அப்படிப் படிக்கும் போது தெரியும்; அனுராதா ஒன்றும் பிறவி கதாசிரியை இல்லை என்று... ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும் போதும் உணர்வீர்கள்... என் சுவாசத்தை உழைப்பை, கனவுகளை, கற்பனையை...
பெரிய இலக்கியமெல்லாம் இல்லை. ஆனாலும் 'குப்பை’ என்று எந்தக் கதையையும் தள்ளிவிட முடியாது... காரணம், ஒவ்வொன்றிலும் சராசரி மனிதனின் சாமான்ய வாழ்க்கை இருக்கிறது. சத்தியத்தின் த்வனி இருக்கிறது.
இப்படியெல்லாம் எழுத வேண்டும் என்றோ - இப்படித்தான் என் எழுத்து அமைய வேண்டும் என்றோ நான் பெரிதாக ஏதும் திட்டங்கள் போட்டதில்லை.
ஆனால் - நான் எழுத வந்த இந்த இருபத்தியேழு வருடங்களில், கிட்டத்தட்ட ஆயிரம் சிறுகதைகளுக்கு மேலேயே எழுதியிருக்கிறேன்…
காரணம் - சிறுகதை எழுத எனக்கு மிகவும் பிடிக்கும்... நாவல், தொடர்கதைகளை விடவும் சிறுகதையில் நான் சுதந்திரமாக உணர்வேன். முன்பெல்லாம் தொடர்கதையின் ஒரு அத்தியாயம் எழுதி முடித்து விட்டு, அடுத்த அத்தியாயம் எழுதப் போகும் முன் - ஒரு சிறுகதை எழுதுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தேன்...
'சிறுகதை' - என்பது எழுத்தாளருக்கு ஒரு சவால் மாதிரி. ‘நறுக்’காக, 'சுருக்’காக, அதே சமயம் 'கருக்’காக எழுத வேண்டும்.
இன்றைய இளம் எழுத்தாளர்கள் நாலு சிறுகதை எழுதினவுடனேயே, நாவல், தொடர்கதை என்று எழுதப் போய் விடுகிறார்கள்...
என்னவோ - சிறுகதை எழுதுவது என்பது குமாஸ்தா பதவி போலவும், நாவல் எழுதுவது – ‘மானேஜர் பதவி’ போலவும் நினைக்கிறார்கள்...
சிலர் வெளிப்படையாகச் சொல்லவே சொல்லியிருக்கிறார்கள்.
‘எத்தனை நாள்தான் சிறுகதை எழுத்தாளனா இருக்கறது. நாவலாசிரியரா உயர வேணாமா…’
- இதைக் கேட்டு, சிரித்திருக்கிறேன் நான்.
சிறுகதைகள் மூலம்தான் ஒரு எழுத்தாளன் வாசகர் மனதில் அழுத்தமாய், சீக்கிரமாய் இடம் பிடிக்க முடியும்...
காரணம் - வாசகர்கள் ஒரு பத்திரிகையை வாங்கியதும் முதலில் படிப்பது சினிமா, அடுத்து புரட்டுவது அரசியல்; மூன்றாவது ஜோக்ஸ்; நாலாவது சிறுகதை. ஐந்தாவது, ஆறாவதாய்தான் தொடர்கதைகளைப் படிக்கிறார்கள்.
என்னைப் போல பலருக்கு, வாரா வாரம் தொடர்கதையைக் காத்திருந்துப் படிக்கப் பொறுமை இருக்காது. அவர்கள் மொத்தமாக இதே கதை - பதிப்பகத்தில் புத்தகமாக வெளிவந்தவுடன்தான் படிப்பார்கள்.
‘அது சரி. ஆயிரத்துக்கு மேல் சிறுகதைகளை எழுதி விட்டு, இருநூற்று சொச்சத்தைத்தானே தந்திருக்கிறாய்... மீதி எங்கே?’
இப்படி நீங்கள் கேட்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்… என்ன செய்வது… பல கதைகள் தனித் தனித் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன... இன்னும் சில ஒரு பிரதி கூட என்னிடமில்லை. சிலவற்றுக்கு ஆரம்பமும், முடிவும் இல்லை. அடிமுடி காணாதப் பரம்பொருள் மாதிரி - புரிபடாமல் இருக்கின்றன...
ஆனாலும் அவைகளை அப்படியே விடுவதாக உத்தேசமில்லை. எப்படியும் திரட்டி, இதே பூம்புகார் பதிப்பகத்தினரிடம் தரத்தான் போகிறேன். அதுவரையில் நீங்கள் பொறுமை காக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
சாதாரணமாய் ‘முன்னுரை' என்றால் - உள்ளே உள்ள சரக்கைப் பற்றி கோடி காட்ட வேண்டும். இந்தக் கதையை எழுதிய போது... என்றோ, அல்லது இக் கதை பத்திரிகையில் வெளியான போது... என்றோ நான் சில வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். அதுதான் முறை; சம்பிரதாயம்...
ஆனால் -
இங்கே அதுமாதிரியான அறிமுகமெல்லாம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்...
ஆரம்ப கால எழுத்துக்களில் பல கதைகளில் நான்' இருக்கிறேன்... பிற்கால எழுத்துக்களில் - ஒரு சில கதைகளில் ‘நானும்’ இருக்கிறேன்...
ஆனாலும், அப்போதும் சரி; இப்போதும் சரி… கதையோ, கட்டுரையோ, நாவலோ - எதை எழுதினாலும், எந்தப் பத்திரிகைக்கும் எழுதினாலும் முழு மனதுடன், ஆத்மார்த்தமாக, எந்தவிதப் பிசுக்காரமும் இன்றி எழுதுகிறேன்… எழுதிக் கொண்டிருக்கிறேன். கடைசிவரை இப்படித்தான் எழுதவும் செய்வேன்.
எதைச் செய்தாலும் முழுமையாக, கவனம் சிதறாமல் செய்ய வேண்டும். அது எழுத்தானாலும் சரி, சமையலானாலும் சரி; வீட்டைக் கூட்டிப் பெருக்கி மெழுகினாலும் சரி... நம்மால் எந்த அளவுக்கு நன்றாகச் செய்ய முடியுமோ... அதைச் செய்து விட வேண்டும். வஞ்சனை கூடாது. ஒர வஞ்சனை - இந்த பத்திரிகை ஒசத்தி; இது இரண்டாம் பட்சம் என்கிற ஒர வஞ்சனை - கூடவே கூடாது.
இதைத்தான் என் தாரக மந்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.
என் வாசகர்களில் சிலருக்கு எனது அழுத்தமான ஸீரியஸ் டைப் கதைகள் பிடிக்கும்... இன்னும் சிலருக்கு நான் எழுதும் நகைச்சுவைக் கதைகள் பிடிக்கும்...
‘என்ன இருந்தாலும் 'சிறை’தான் மேடம் 'டாப்’ என்பார்கள் சிலர்...
'சிரிக்க சிரிக்க எழுதத்தான் யாருமே இல்லே அனு... நீங்களாவது சிரிப்பைத் தொடருங்க... அதுதான் உங்களோட ஸ்பெஷாலிடியே' என்பார்கள் சிலர்...
என்னைப் பொறுத்தமட்டில் -
எனக்கு, என்னுடைய எல்லாத் தரப்பு வாசகர்களையும் பிடிக்கும்...
ஒரு வீட்டில் ஏழெட்டு குழந்தைகள் இருந்து, ஒன்று இட்லியும் காரச் சட்னியும் கேட்க, இன்னொன்று, 'இட்லி மாவையே முறுகலாகத் தோசை சுட்டுத் தா' என்று கேட்க - மூன்றாவது, இரண்டும் வேண்டாம், தயிர் சாதம், என்றால்... அம்மாக்காரி, குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்றபடி செய்வதில்லையா...
அதுபோலத்தான் நானும்,
உங்கள் முன் வைத்துள்ள இம்மூன்று தொகுப்புகளிலும் - சில கதைகளில் காரம் அதிகமாக இருக்கலாம்; சர்க்கரைக் கட்டியாக இனிப்பாகவும் இருக்கலாம்; பாகல் கசப்பாகவும், புளிப்பு கொஞ்சம் தூக்கலாகவும் கூட இருக்கலாம்...
எது, யாருக்குப் பிடித்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!
இத் தொகுப்புகளுக்கான சிறுகதைகளை பத்திரமாய் பாதுகாத்து, வரிசைப்படுத்தி, நான் இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் இருந்தபோதுகூட, இப்பணியை மிக நேர்த்தியாகச் செய்த என் உதவியாளரும், மிக நல்ல நண்பருமான திரு. சர்ச்சில் பாண்டியனுக்கு ‘நன்றி’ என்கிற மூன்றெழுத்துச் சொல் போதாது... ஆனாலும் இதை விட்டால் வேறு வார்த்தை கிடையாது... மிக்க நன்றி!
இத் தொகுப்புகளுக்கு மிகச் சிறந்த வண்ணம் மேலட்டை ஒவியத்தைத் தயாரித்த திரு. ஷியாம் அவர்களுக்கும், பூம்புகார் பதிப்பகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இப்படிக்கு,
என்றும் அன்புடன்,
அனுராதா ரமணன்
அனுராதா ரமணனின் சிறுகதைகள்
பாகம் - 1
பொருளடக்கம்
1. கனவு மலர்கள் கருகும்போது
2. நான்கு சுவர்களுக்கு நடுவில்
3. தேவதரிசனம்
4. சொந்த வீடு - வாடகை மனைவி
5. 'பகல்’ செத்துப் போச்சு...
6. இலக்கியவாதி சந்தித்த இருபது வயசுப் பெண்
7. உயரத்தில் இருந்து பார்க்கும் போது.
8. கணபதி குருக்கள் பொய் சொல்கிறார்.
9. தவம்
10. சிசுஹத்தி
11. நீங்கள் அறியாத ‘ப்ரியாவின்’ கதை
12. இரவல் வெளிச்சத்தில் ஒரு நிலா
13. சிறை
14. பாவ சங்கீர்த்தனம்
15. பார்க்கக் கூடாது
1
கனவு மலர்கள் கருகும்போது
நீங்க தொங்கத் தொங்கத் தாலியைக் கட்டிண்டு 'வீட்டுக்காரரே தெய்வம்’னு கும்பிடற பெண்மணியா?
இல்லே, ‘அவரே போயிட்டார், இனிமே நமக்கெதுக்கு இந்தச் சுகமெல்லாம்? எப்போ என்னையும் அவர் தன்கிட்டே அழைச்சுக்கப் போறாரோ'ன்னு விரக்தியா, சம்புடத்துலேருந்து விபூதியை எடுத்துப் பூசிண்டு, கோயில்லே 'தட்சிணாமூர்த்தி’ சந்நிதியிலே காலத்தைக் கழிக்கிற விதவையா?
‘இது என்னக் கேள்விங்கறேளா?’
நான் எதுக்குக் கேட்கறேன்னா - நீங்க மேலே சொன்ன இரண்டு விதத்துலும் சேர்ந்தவ இல்லே!
இது என்ன பேத்தல்ங்கறேளா?
அது அப்படித்தான்!
எல்லாரும் என்னை விதவைங்கறா. ஆமாம் பின்னே சொல்ல மாட்டாளா?
உங்களுக்கு ஒண்ணும் புரியலையா!
கொஞ்சம் இருங்கோ. முகத்தை நன்னா அலம்பிண்டு 'பளிச்’சுனு பவுடர் போட்டு நெத்தியிட்டுண்டு வந்து சொல்றேன். எனக்கு எல்லாம் டயப்படி செஞ்சுண்டாகணும். எல்லாத்தையும் முடிச்சுண்டு இந்த மாடிப் படிக்கட்டுலே வந்து உட்கார்ந்துண்டுடுவேன். அப்புறம் நிம்மதியா எல்லாத்தையும் விவரமாகச் சொல்றேன்.
இந்த மாடிப்படி இருக்கே... இதுல எனக்கு நினைவு தெரிஞ்சதுலேருந்து, என் வாழ்நாள்ல முக்காவாசியைக் கழிச்சிருக்கேன். சொப்பு வச்சு விளையாடினது, ‘டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்’னு ராகம் போட்டு நர்ஸரிப் பாட்டைப் பாடினது, ‘மும்தாஜின் நினைவுக்காக ஷாஜஹான் தாஜ்மகாலைக் கட்டினார்’னு உருப்போட்டது... அப்புறம் அம்மா, அப்பாவுக்குத் தெரியாம ‘ஹெரால்ட் ராபின்ஸனை’ கெமிஸ்டிரி புத்தகத்துக்குள்ளே ஒளிச்சுவச்சுப் படிச்சது... எல்லாம் இந்த மாடிப்படியிலேதான்.
ஒரு நாள்...
அப்ப எனக்கு என்ன வயசிருக்கும்னு சரியா ஞாபகமில்லை. பதினாறு, பதினேழு வயசிருக்கும்.
எதிர்த்தாத்து லீலாவுக்கு அன்னிக்கு மாப்பிள்ளை அழைப்பு. விடிஞ்சா கல்யாணம். மாப்பிள்ளை அழைப்புக் கும்பலோட வந்த நான், எங்க வீடு வந்ததும் கொஞ்சம் வேகமா முன்னாடி வந்து, இந்த மாடிப் படிக்கட்டுலே உட்கார்ந்து, இந்த ஊர்வலத்தைப் பார்க்கறேன். நேரே பார்க்கறதைவிட, இந்த மாடிப்படி ஜன்னல் வழியா பார்க்கறதுலே ஒரு ‘திரில்’ உண்டு எப்பவுமே.
என் அம்மா ஆரத்தி கரைச்சிண்டு வந்து அந்தக் காருக்கு முன்னாடிக் கொட்டறா.
என்ன மதுரம்... உன் பொண்ணு கல்யாணம் எப்போ?
யாரோ கல்யாணக் கூட்டத்திலே ஒரு மாமி, அம்மாவைக் கேட்கறா.
அவளுக்கு இப்ப என்ன அவசரம்? விடிய விடிய இன்னும் பதினேழே ஆகலையே
அம்மா பதில் சொல்றா.
நான் அந்த மாப்பிள்ளையைப் பார்க்கறேன்.
ஒரு நாள்... எனக்கும் இது மாதிரி ஒருத்தர் வருவார் - இல்லையா?
அவர் எப்படி இருப்பார்?
கறுப்பா, சிவப்பா?
இதோ லீலாவுக்கு வரப்போறவர் மாதிரி 'சிடு சிடு’ன்னு இருப்பாரோ?
என் மனசுக்குள்ளே நான் அழகுன்னு ரசிக்கிற ஒவ்வொரு லட்சணத்தையும் ஒண்ணாச் சேர்த்து ஒரு உருவமாக்கறேன்.
இது எப்படி முடியும்கறேளா? முடியும்!
கண்ணிரண்டையும் மூடிண்டு கொஞ்சம் கொஞ்சமா... சுருட்டையான கிராப்பு, கூரான மூக்கு, மாநிறம்... மூக்குக் கண்ணாடி (அவர் நிறையப் படிக்கிறவர்) செதுக்கின மாதிரி முகவாய், சிரிச்சுண்டே இருக்கிற உதடு, அப்படி சிரிக்கறப்போ லேசா கன்னத்துலே விழறக் குழி, தீர்க்கமான, குறும்பான, புத்திசாலித்தனமானப் பார்வை கொஞ்சம், நினைச்சுப் பார்த்து, அந்த நினைப்பிலேயே உருவாக்கினவரை, இந்தக் காரில் உட்கார்த்தி வச்சுப் பார்த்து ரசிச்சுண்டிருந்தேன்.
ரொம்ப ஜோரா, ரொம்ப அமர்த்தலா என் அவர் கார்லே உட்கார்ந்திண்டிருக்கார் நான் இதோ இந்த ஜன்னல் வழியா இப்பப் பார்க்கறேனே, அது மாதிரிப் பார்த்துண்டிருக்கேன்.
அவரும் என்னைப் பார்க்கறாரோ?
அதோ சிரிக்கிறார்! லேசா மூக்கைச் சுருக்கி, உதட்டைக் குவிச்சு, எனக்கு ‘அழகு’ காண்பிக்கிறார். எனக்கு சிரிப்பும் பொங்கிண்டு வருது.
இந்தூ - வாடி, கல்யாண ஆத்துலே இலை போட்டாச்சு. சாப்பிட்டுட்டுப் படுக்கலாம். விடிஞ்சா ஆறு மணிக்கே முகூர்த்தம். அம்மா என்னைக் கூப்பிடறா.
நான் வாரிச் சுருட்டிண்டு எழுந்திருக்கிறேன். ஊர்வலம் இரண்டு வீடு தாண்டி போயிண்டிருக்கு அதே 'சிடு சிடு’ன்னு மாப்பிள்ளை முகம். முள்ளம் பன்றி கிராப்பு.
பின்னே, லீலாவோட அகத்துக்காரர் என் அவர் மாதிரி ஆயிடுவாரா? நான் எனக்குள் சிரிச்சுண்டே படியை விட்டு இறங்கி வர்றேன். மனசு மாத்திரம் அந்த என்னோடக் கதாநாயகனோடயே அடம் பிடிச்சுண்டு மாடிப்படியிலேயே உட்கார்ந்து இருக்கு.
அம்மாவோடப் போய் பந்தியிலே உட்கார்றேன்.
ஆமா... அந்த அவர் - அதுதான் என்னோட மானசீக ஹீரோ - அவர் பேர் என்ன?
‘ராகவன்…? ம் ஹூம் நன்னாவேயில்லை!’
‘ரமேஷ்? சட், சின்னப் பையன் மாதிரி இருக்கு!’
‘சங்கர்? ரொம்ப ஆர்டினரி நேம்.’
‘மண்டையைப் போட்டுக் குடைச்சிண்டிருந்தேன்.’
'ஏய்! என்ன யோசனை? இலையைப் பார்த்துச் சாப்பிடு...! அம்மா இடிக்கிறாள்.
டேய் சத்யா! எங்கே போயிட்டான் இந்த சத்யன்?
யாரோ ஒரு ஜிப்பா மாமா பந்தியை விசாரிச்சுண்டே கத்தினார்.
சத்யன்! சத்யா... சத்யகுமாரா? சத்ய மூர்த்தியா? எதுவோ ‘சத்யன்’ - இது நன்னாயில்லை?
‘சத்யா'ன்னு செல்லமாக் கூப்பிடலாம். அழகா இருக்கும்.
என்னோட ஹீரோ பேர் ‘சத்யன்'தான்!
என்ன சிரிக்கறேள்?
இப்படித்தான் - இந்தப் பெயரோடத்தான் - என்னோட அவர் எனக்குள்ளே வளைய வர ஆரம்பிச்சார்.
நான் சொல்லிப் பார்த்துப்பேன்.
‘இந்துமதி - சத்யன்'
‘மிஸஸ். சத்யன்'
ஒரு குழந்தைக்கு புதுசா ஒரு பொம்மை கிடைச்சா, ராத்திரி பாதித் தூக்கத்துலேகூட இருக்கான்னு அதைத் தடவிப் பார்க்குமே அது மாதிரி, நட்ட நடு ராத்திரியிலேகூட, இந்த ‘சத்யனை’ லேசா முனகிப் பார்த்துப்பேன்.
இந்த சத்யன் இருக்காரே, ரொம்பப் பொல்லாத மனுஷர்! எப்போ என்னோட இந்த மாதிரிக் கற்பனையிலே வந்து கண்ணாமூச்சி விளையாடறதுன்னு இவருக்கு ஒரு நேரம் காலமே கிடையாது. நினைச்சப்போ வருவார்.
காலேஜ்லே அந்த குண்டு லெக்சரர் - அவ பேர் என்ன - ரமாமணியா? - அவ இலக்கணத்தை 'லோ லோ'ன்னு மாரடிச் சிண்டிருப்பா. இவர் கற்பனையிலே வந்து விடுவார்.
'ஏய் இந்து!’
‘என்னவாம்,