Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anuradha Ramananin Sirukathaigal Collection - 4
Anuradha Ramananin Sirukathaigal Collection - 4
Anuradha Ramananin Sirukathaigal Collection - 4
Ebook245 pages1 hour

Anuradha Ramananin Sirukathaigal Collection - 4

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002048
Anuradha Ramananin Sirukathaigal Collection - 4

Read more from Anuradha Ramanan

Related to Anuradha Ramananin Sirukathaigal Collection - 4

Related ebooks

Reviews for Anuradha Ramananin Sirukathaigal Collection - 4

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anuradha Ramananin Sirukathaigal Collection - 4 - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    அனுராதா ரமணனின் சிறுகதைகள்

    தொகுதி - 4

    Anuradha Ramananin Sirukathaigal

    Collection – 4

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அம்மா, அம்மா!

    2. பாவம், மாலுக்குட்டி

    3. தெய்வம் நேரில் வரும்...

    4. நடைமுறை காவியம்

    5. இருட்டில் ஒரு யுத்தம்!

    6. அண்ணா

    7. அது

    8. வயதான போதி மரம்

    9. விவஸ்தை வேண்டாமோ?

    10. சுமை

    11. மோகம் என்னும் நாடகம்

    12. இந்த நேரத்தில் இது - தேவைதான்!

    13. வேற வழி தெரியலே…

    14. நடிப்புச் சுதேசிகள்...

    15. ஒசை

    1. அம்மா, அம்மா!

    அவளுக்குக் குழந்தை மனசு, சின்னச் சின்ன விஷயங்களிலேயே திருப்தியடைஞ்சுடற சுபாவம். ஆனா, அந்தச் சூட்சுமம், ஏனோ மன்னி ரெண்டு பேருக்கும் தெரியல்லே.

    மைதிலியை மணந்த புதிதில், ராகவன் கூறிய வார்த்தைகள்!

    இதை மட்டுமா கூறினான்? இவர்கள் இருவரும் என்றைக்கு, ஒரு வண்டியில் பூட்டிய மாடுகளாய்ச் சேர்ந்து வாழத் தீர்மானித்தார்களோ, அன்றிலிருந்து இன்றுவரையில் ராகவனது பேச்சும், மூச்சும் இதுதான்.

    என்னை நீ ஸ்பெஷலா கவனிச்சுக்கணுங்கறதெல்லாம் இல்லே மைதிலி. எங்கம்மாவைக் கவனிச்சுக்கோ, போதும்.

    ஒரு நாள் கடற்கரையில் பிறந்த வார்த்தைகள் இவை.

    மைதிலி, புன்னகையுடன் கேட்டுக் கொண்டாள். அவளுக்கு, அவனுடைய தவிப்பு புரிந்தது. அண்ணாக்களும் மன்னிகளும் அம்மாவை நடத்தும் விதத்தில் அவன் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதும் புரிந்தது…

    ஒரே அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்த்தும், மைதிலியை மணக்க வேண்டும் என்கிற நினைப்பு, கொஞ்சங்கூட ராகவனுக்குக் கிடையாது.

    மைதிலிதான் கேட்டாள்.

    அதுவும் எப்படி?

    ஒரு நாள் அவள் தனக்கு வரும் ஜாதகங்களைப் பற்றியும் தன் சகோதரர்கள், தங்கள் சக்திக்கு மீறிச் செலவழிக்கத் தயாராக இருப்பதைப் பற்றியும், கல்யாணத்துக்குப் பிறகு வேலை பார்க்கத் தனக்கு விருப்பம் இல்லாதது பற்றியும், திருமணமான பிறகும் தன் வயசான அப்பாவை, அடிக்கடி போய்ப் பார்த்துவிட்டு வர, கணவர் அனுமதிப்பாரா என்பது பற்றியும், பேசிக்கொண்டே, பேருந்து நிலையம் நடந்தவள் 'சட்’டென்று நின்று அவனை ஏறிட்டுப் பார்க்கிறாள்.

    விழி முனையில் குறும்பு சுடர் விட்டுப் பிரகாசித்தது.

    நீங்களும், நானும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?

    ஸ்தம்பித்து நின்று விட்டான் ராகவன்.

    அம்மாவைக் கேட்கணும் மைதிலி. இதுவரைக்கும் இப்படியொரு நினைப்பே தோணினது கிடையாது எனக்கு.

    அப்போதும் அவள் புன்னகை செய்தாள்.

    அவசரமில்லே. அம்மாவைக் கேட்டுப் பதில் சொல்லுங்கோ. அம்மாகிட்ட எதையும் மறைக்க வேண்டாம். என் வயசு, படிப்பு, விருப்பம், வயசான அப்பா இதுலே எதையும் விட்டுட வேண்டாம்.

    அவள் தன் பஸ் வந்ததும் ஏறி விட்டாள்.

    ராகவன் வீடு போய்ச் சேர்வதற்குள் மைதிலி போட்ட சின்ன விதை விருட்சமாகிவிட்டது.

    மறுநாள் விடிகாலையில், அம்மாவின் கையால் காபி வாங்கிக் குடிக்கும்போது, தயங்கித் தயங்கிச் சொல்ல ஆரம்பித்தான் ராகவன்.

    அவன் முழுசும் சொல்லி முடிக்கும் வரையில் பேசாமல் இருந்தாள் அம்மா.

    ரொம்பப் படிச்ச பொண்னோ?

    உம். டபுள் டிகிரி. ஆனா, கொஞ்சம் கூடப் படிச்ச கர்வம் கிடையாது.

    எதுக்குக் கேட்கறேன்னா பி. யு. சி.யும், பி. ஏ.வும் படிச்சுட்டே என்னைச் செக்குல வச்சுத் திரிக்கிறா. நீதான் பார்த்துண்டேயிருக்கியே? உன் கல்யாணத்துக்கு அப்புறமாவது, எனக்கு ஒய்வு கிடைச்சா சரி. நீ யாரை வேணுமானாலும் பண்ணிக்கோ. நம்ம குலமா இருக்கணும். அதுதான் முக்கியம். உன் கல்யாணத்துக்கு அப்புறம், தனியாப் போறச்சே, உங்ககூட என்னையும் அழைச்சுண்டு போயிடுங்கோ. கஞ்சியோ, கூழோ நீங்க போடறதைச் சாப்பிட்டுண்டு ஒரு மூலையில் விழுந்துகிடக்கேன்.

    இதைச் சொல்லும்போதே அவள் அழுது விட்டாள்.

    ராகவனுக்குத் தெரிந்து, அந்த வீட்டுக்கு மருமகளாக வந்த இருவருமே அம்மாவை மதிக்கவில்லைதான்.

    மதிப்பதில்லை என்றால், எடுத்தெறிந்து பேசுவதெல்லாம் கிடையாது. மாமியாருக்கு உதவியாய்க் காய் நறுக்கிக் தரக்கூட ஒருத்தியும் முன் வரமாட்டாள்.

    புருஷன்மார்களும் இதைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

    அம்மா சமைத்துக் கொண்டேயிருப்பாள். பெரியவன் வாசலில் மோட்டார் சைக்கிளை மிதித்துக் கொண்டே சொல்லுவான்.

    அம்மா நான் அவளைக் கொண்டு போய் மாம்பலத்துல விட்டுட்டு, அங்கேயே சாப்பிட்டுட்டு ஆபீசுக்குப் போறேன்.

    மாம்பலம், அவன் மாமனார் இருப்பிடம். இவன் இதைச் சொல்லும்போது, இவன் பெண்டாட்டி இடுப்பில் குழந்தை, சின்னப் பிளாஸ்டிக் பையில் ஃபீடிங் பாட்டில் சகிதம் மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறியிருப்பாள்.

    சாப்பிட்டுட்டுக் கிளம்புங்களேன். சமையலாயிடுத்து.

    எங்கே சாப்பிட்டா என்ன?

    சரி, அவ மறுபடி எப்போ வருவா?

    அம்மா, மருமகளைக் கேட்காமல் பிள்ளையின் முகத்தைப் பார்த்துக் கேட்பாள். இதற்குள், பிள்ளையின் முகம் தக்காளிப் பழமாய்ச் சிவந்து விடும்.

    எப்ப வந்தா என்ன? இங்கே வந்து என்ன புரட்டப் போறா?

    அதுக்கில்லேடா, கார்த்திகை வர்றது. வீட்டுல விளக்கேத்த வேண்டியவ.

    ஆமா. பெரிய விளக்கு ஏத்தணும். நீயே ஏத்திட்டுப் போ.

    முனகிக் கொண்டே போய்விடுவான் அவன்.

    இரண்டாவது மருமகள், இதைவிடவும் ஒரு படி மேலேயே போய் விடுவாள்.

    இவளைப் புருஷன்தான் கொண்டு போய்ப் பிறந்த வீட்டில் விடவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவளே கிளம்பி விடுவாள். மாதா மாதம் வரும் மூன்று நாள் வைபவத்துக்காகப் போவாள். அது முடிந்ததும், பிறந்தகத்தில் அவளுடைய தங்கையோ, அம்மாவோ இதே வைபவத்தைக் கொண்டாடு வார்கள். இதிலேயே பதினைந்து நாட்கள் ஓடிவிடும். இதற்குப் பின் இவள் புகுந்த வீட்டுக்குக் கிளம்புகிற அன்றைக்குப் பார்த்து, இவளுடைய இரண்டு வயசுப் பிள்ளை கீழே விழுந்து காலை ஒடித்துக் கொள்ளும்; இல்லாவிட்டால் கொதிக்கிற எண்ணெயில் விரலை விட்டு அமர்க்களப்படுத்தும்; சைக்கிளை மேலே தள்ளிவிட்டுக் கொள்ளும்; வீட்டில் சிறங்கு, சொறிக்கு வைத்திருக்கும் களிம்பை வழித்து விழுங்கி ஊரைக் கூட்டும்.

    இந்தக் கல்யாணங்களுக்காக இருபது நாள் ஒடிவிடும்.

    ஆக மொத்தம் கரண்டி அம்மாவின் கையில்தான். ராகவனிடம் அவள் எதிர்பார்ப்பது எல்லாம், தன்னை உட்கார வைத்துச் சோறு போடும் ஒரு மருமகளைத்தான்.

    இதுபற்றிச் சில முறை தன் சகோதரர்களிடம் பேசியிருக்கிறான் அவன்.

    கார்த்தாலே எழுந்துண்டா ராத்திரி படுக்கற வரைக்கும் அம்மா செக்குமாடா உழைக்கறப்ப எப்படி மன்னியாலே...

    த்சு…!

    பெரியவன் கையை வீசித் தம்பியை அடக்கினான்.

    இத பாரு, நீயும் நானும், இவனும் ஆபீசுக்குப் போயிடறோம். அப்புறம் நாள் முழுக்க அம்மாவோட தொண தொணப்பைச் சகிச்சுக்கறதெல்லாம் உன் மன்னிகள்தான். அம்மா பேசறதைக் கேட்டுண்டு குதிக்காதே! அவளுக்கு எப்பவுமே யாரையாவது குறை சொல்லிண்டே இருக்கணும். இவா, சமைக்கறதுக்காக உள்ளே புகுந்தாலும் மடி, ஆசாரம் சமைக்க வரல்லேன்னாலும் நானே செய்ய வேண்டியதாயிருக்குன்னு அலுத்துப்பா நாட்டுப் பெண்கள் எல்லாம் வர்றதுக்கு முன்னாடி இருந்த அம்மா வேற, இப்ப வேற.

    எப்படியும் உனக்குக் கல்யாணம் ஆகத்தானே போறது? பார்க்கறோம், உன் பொண்டாட்டியாலே அம்மாவை அனுசரிச்சுண்டுப் போக முடியுதான்னு.

    அவன் சவால் விடுவது போலச் சொன்னான். ராகவன் அப்போதே தீர்மானித்து விட்டான். தனக்குக் கல்யாணம் ஆன பிறகு, அம்மாவை அவள் விருப்பப்படி உட்கார வைத்து கோவில், குளத்துக்கு அனுப்பி, நிம்மதியாக இருக்கவிட வேண்டும் என்று.

    முன்பின் தெரியாதவளை மணந்து கொண்டு, அவள் தன் தாயை மதிக்க வேண்டுமே என்று கவலைப்படுவதை விடப் பழக்கமான மைதிலியிடம் தன் நினைப்பைப் பகிர்ந்து கொள்வது எத்தனையோ மேல் என்றுதான் தோன்றியது அவனுக்கு.

    அம்மாவின் சம்மதத்துக்குப் பிறகு, திருமணத்துக்கு முதல் நாள் வரையில் ராகவன், மைதிலியிடம் சின்னதாய் ஒரு காதல் வசனம் கூடப் பேசவில்லை. அம்மா, அம்மா, அம்மாதான்.

    அண்ணாக்கள் சொன்னார்கள், அம்மா மாறிட்டான்னு. அம்மா சொல்றா, என் பிள்ளைகள் மாறிட்டான்கள்னு. நிஜமாவே, கல்யாணத்துக்கு அப்புறம் இவனுங்கதான் மாறிட்டான்கள்.

    அப்பா இருந்தவரைக்கும் அம்மாவை ஒரு குழந்தை மாதிரியே பார்த்துண்டார். அம்மாவுக்குப் புடவையிலேயிருந்து ஒரு முழம் பூ வாங்கிண்டு வர்றது வரைக்கும் எல்லாமே அப்பாதான்.

    இத்தனை பெரிய குடும்பத்துல மூணு பொண்களுக்குக் கல்யாணம் பண்ணி, மூணு பிள்ளைகளைப் படிக்க வச்சு, நடுவுல எத்தனையோ பிரச்னைகள்! எல்லாத்தையும் அவர் ஒண்டியாய்ச் சமாளிச்சார் அம்மாவை ஒரு நாள்கூடக் கண்கலங்க விட்டதேயில்லை அவர்.

    அவர் போனதுக்கு அப்புறமே அம்மாவுக்கு ஒரு பயம் வந்துடுத்து. தன்னை இனிமே யார் கவனிச்சுக்கப் போறான்னு? இந்தப் பசங்களும் எடுத்தெறிஞ்சு பேசிடறான்களா? தினமும், நான் ஆபீசுலேயிருந்து வந்ததும், அவ பக்கத்துல உட்கார்ந்து அவ சொல்றதையெல்லாம் பொறுமையாக் கேட்டு, சமாதானமா நாலு வார்த்தையாவது சொன்னாத்தான் பாவம், அவளுக்கு நிம்மதி...

    மைதிலி அப்பொழுதே தீர்மானமாகக் கூறினாள்.

    என்னாலே, உங்க அம்மா மனசு கஷ்டப்படாதபடி பார்த்துக்க முடியும். மாமியாரை, மாமியாராப் பார்த்தாத்தானே கஷ்டம். அம்மாவா பாவிச்சுட்டுப் போறேன். எனக்கும் ‘அம்மா'ன்னு கூப்பிட யாரு இருக்கா?

    சமையல் ஒண்ணும் பெரிய விஷயமில்லே. எனக்கு நன்னாச் சமைக்கணும், நாலு பேர் நம்ம சமையலைச் சாப்பிட்டுட்டு நன்னாயிருக்குன்னு பாராட்டணும்னு எல்லாம் ரொம்ப ஆசை. எங்க வீட்டுல கூட என் சமையலுக்கு ரொம்பவும் பாராட்டுக்கள் உண்டு.

    நான் வேலைய விடறதே, ஒரு பொறுப்பான குடும்பத் தலைவியா இருக்கணும்கற ஆசையிலதான். அம்மாவும் இத்தனை நாள், அடுப்பங்கரையைக் கட்டிண்டு அழுதாச்சு; இனிமே நான் பார்த்துக்கறேன். எங்க வீட்டுல பத்துப் பேருக்குச் சமைக்கறேன். நம்ம மூணு பேருக்குச் சமைக்க மாட்டேனா என்ன?

    ராகவனுக்குப் பெரிய மலையை இறக்கி வைத்தாற் போல இருக்கிறது. ஒவ்வொரு முறையும் மைதிலி சொன்னதையெல்லாம் அம்மாவிடம் வந்து சொல்லும்பொழுது, அவள் சின்னதாய்ப் புன்னகை செய்வாள்.

    இப்பவே பிடிச்சு ஆகாசக் கோட்டை கட்ட நான் தயாரா இல்லே. ஏற்கனவே ரெண்டு தடவை அடிபட்டுட்டேன். கல்யாணமாகட்டும் பார்க்கலாம்.

    கல்யாணத்துக்கு முன்னாலேயே வேற ஜாகை பார்த்துடுடா, இங்கே அவ வந்தா, பெரியவ ரெண்டு பேரும் நடந்துக்கறதைப் பார்த்து, அவளும் அப்படியே என்னை அலட்சியப்படுத்த ஆரம்பிச்சுடுவா.

    ராகவன் அம்மா சொன்னபடி செய்தான்.

    சின்னதாய், சிமிழ் மாதிரி வீடு; புத்தம் புதிது. கல்யாணத்துக்கு முன்பே, மைதிலி அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து, ராகவனின் தாயிடம் பேசிவிட்டுப் போவாள். அப்படிச் சில நாள் அவள் தொடர்ந்து வராமலிருந்தாலும் அம்மா தவித்துப் போவாள்.

    ஏண்டா அவ வரல்லே?

    புடவை வாங்கப் போகணும்னு சொல்லிண்டிருந்தா. போயிருக்காளோ என்னவோ?

    அடுத்த நாள், அவள் வரும்போதே குறும்பாய்க் கண்களைச் சிமிட்டியபடி சொல்வான் அவன்.

    ரெண்டு நாளா, நீ வரல்லையேன்னு அம்மா தவிச்சுப் போயிட்டா.

    அவளும் அந்தக் குறும்பில் எள்ளளவும் குறையாமல் கேட்பாள் :

    அம்மா மட்டும்தானா? நீங்க இல்லையா?

    நானுந்தான், அம்மாவும்தான்.

    இந்தச் சிரிப்பும் குதூகலமும் மைதிலி இந்த வீட்டில் மருமகளாய்க் காலடி எடுத்து வைத்த பின் எங்கே ஒடி ஒளிந்தன?

    கல்யாணத்துக்கு முன் வரையில் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அம்மா, ஏன் இப்படி முகத்தைத் துக்க வீட்டில் இருப்பது போல வைத்துக் கொண்டிருக்கிறாள்?

    இத்தனைக்கும் மைதிலி சொன்ன சொல் தவறாமல், எல்லாக் காரியங்களையும் தானேதான் செய்கிறாள். மாமியாரை 'அம்மா’ என்று வாய் நிறையக் கூப்பிட்டு, அவள் என்ன சொல்கிறாளோ அதன்படிதான் செய்கிறாள்.

    திருமணமாகி, இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே சின்னதாய் ஒரு சலசலப்பு.

    எங்கோ வெளியே போய்விட்டு வீடு திரும்பிய ராகவன் மைதிலியின் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டான்.

    என்ன மைதிலி?

    ஒண்ணுமில்லே.

    இல்லே. உன் முகமே சொல்றதே. என்ன ஆச்சு சொல்லு?

    நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நம்ப ரெண்டு பேருக்கும் நடுவுல மூணு வயசுதான் வித்தியாசம் இருக்குன்னு அம்மாகிட்ட சொல்லலியா?

    சொன்னேனே. அதுக்கு என்ன இப்ப?

    உங்களுக்கு, உங்களைவிட ஏழெட்டு வயசு சின்னப் பொண்களோட ஜாதகமெல்லாம் வந்ததாமே?

    இது என்ன கூத்து? என்னோட கல்யாண சம்பந்தமான பேச்சே, நீ என்னைக் கேட்டதுக்கு அப்புறந்தான் ஆரம்பமாச்சு. அப்பா இருந்தப்ப ஒண்ணு ரெண்டு ஜாதகம் வந்திருக்கலாம். நான்தான் 'கல்யாணத்துக்கு அவசரம் இல்லை இப்ப'ன்னு சொல்லிட்டேன்.

    வேலைக்குப் போற பெண்தான் வேணும்னு சொல்லிண்டிருந்தேளா?

    ராகவன் சற்றுத் தயங்கினான். பிறகு, மெல்ல அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

    ரெண்டு பேருமாச் சம்பாதிச்சா இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கலாமோன்னு நினைச்சதுண்டு. ஆனா, ஒரு சில தறைகளை நினைச்சுண்டே, எனக்குக் கிடைச்சிருக்கிற பெரிய புதையலை நான் இழக்க விரும்பல்லே மைதிலி.

    நீங்க என்னைப் புதையலா நினைக்கலாம். ஆனா அம்மா நினைக்கலே வந்தவுடனேயே நான் அம்மாவைப் பத்திப் புகார் சொல்றதா நினைக்காதீங்கோ. இன்னிக்குக் கல்யாணம் விசாரிக்க வந்தவா முன்னாடி அம்மா அப்படிப் பேசியிருக்கக் கூடாது.

    என்ன பேசினா?

    இதைவிட ஒசத்தியான ஜாதகங்கள் எல்லாம் வந்ததாம். ஒருத்தர் இருபத்தஞ்சு பவுன் போடறேன்னு ஒத்தைக் கால்லே நின்னாராம். அந்தப் பொண் வேலைக்குப் போறாளாம். ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் சம்பளமாம். சிவப்பா ஒல்லியா, போட்டோவுல பார்க்கவே பொண் ரொம்ப நன்னாயிருந்தாளாம். நீங்க அப்ப எல்லாம் எதுவுமே பிடி கொடுத்துச் சொல்லலையாம்.

    பிறகு?

    கல்யாணத்தின் போதுகூட, எங்க மனுஷா, உங்க சொந்தக்காராளைச் சரியாக் கவனிக்கலையாம். ஆடம்பரமாக் கல்யாணத்தைப் பண்ணிட்டாப்பல ஆச்சா? ராகவனோட அப்பா ஒவ்வொரு கல்யாணத்தையும் பண்ணிய நேர்த்திய விடவா? மனுஷாளை மதிக்கத் தெரியணும். முகூர்த்தத்தின்போது, உறவுன்னு சொல்லிக்கக்கூடிய முக்கியப்பட்ட மனுஷா ஒருத்தர் கூடச் சாப்பிடலேன்னு சொல்லிண்டேயிருந்தா அம்மா.

    அப்படியா, நான் கேட்கறேன் அம்மாவை.

    ஐயோ, வேண்டாம். அப்புறம் நான் சொல்லித்தான் கேக்கறேள்னு நினைப்பா, அப்புறம் என்னைக் கண்டாப் பிடிக்காமலேயே போயிடும்.

    ராகவன் இதைக் கேட்டுக் கொண்டு சும்மாயிருக்கவில்லை. அன்றிரவு முழுக்கத் தூக்கம் வராமல் தவித்தான்.

    எல்லாரையும் போல, அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1