Aavipen Anandhi
()
About this ebook
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Read more from Arnika Nasser
Thirumarai Nabimozhi Islamiya Neethi Kathaigal - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsThulla Thudikka Rating: 0 out of 5 stars0 ratingsThrill Thrill Dynamite Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Devathai Rating: 0 out of 5 stars0 ratingsOnbadhu Uyirgal Rating: 3 out of 5 stars3/5Thimingala Vettai Rating: 1 out of 5 stars1/5Kodaikanal Marmam Rating: 5 out of 5 stars5/5Aabathu Mandalam Rating: 5 out of 5 stars5/5Nee Kolaikarana? Rating: 5 out of 5 stars5/5Clydescope Mugamoodi Rating: 5 out of 5 stars5/5Kanavugaludan Nadamadu Rating: 0 out of 5 stars0 ratingsKaialavu Boogambam! Rating: 2 out of 5 stars2/5Ratha Samuthiram Rating: 0 out of 5 stars0 ratingsThakku Minnaley Thakku Rating: 5 out of 5 stars5/5Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsSoonyakara Kizhavi Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Santhippu Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsNodiku Nodi Rating: 0 out of 5 stars0 ratingsGramathu Nila Rating: 0 out of 5 stars0 ratingsElipori Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Santhippu Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMarana Kaadu Rating: 0 out of 5 stars0 ratingsKirumi Rating: 0 out of 5 stars0 ratingsKizhakku Kadarkarai Saalai Rating: 2 out of 5 stars2/5Mummy Rating: 1 out of 5 stars1/5
Related to Aavipen Anandhi
Related ebooks
Aasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsVazhndhu Kattuvom Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Painkili Rating: 0 out of 5 stars0 ratingsDurga Rating: 0 out of 5 stars0 ratingsManithargal Paathi Neram Thoongukirargal Rating: 5 out of 5 stars5/5Puyalai Oru Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsKanavu En Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsNandha Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Aaruyire... Rating: 0 out of 5 stars0 ratingsThavamirunthean! Varam Tharuvai… Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsViraivil Vibareetham Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Roja Rating: 5 out of 5 stars5/5Mutru Peratha Athiyayam Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Pani Vizhum Malar Vanam! Rating: 0 out of 5 stars0 ratingsThaandathe Thandikkapaduvai Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsUthaya Nila Rating: 0 out of 5 stars0 ratingsஅதிகாரப் பிச்சை..! Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Oru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம் Rating: 0 out of 5 stars0 ratingsThorkathe Thozha Rating: 0 out of 5 stars0 ratingsAntharathil Sundari Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar! Rating: 3 out of 5 stars3/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsEppozhuthum Un Ninaivu! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Aavipen Anandhi
0 ratings0 reviews
Book preview
Aavipen Anandhi - Arnika Nasser
http://www.pustaka.co.in
ஆவிப்பெண் ஆனந்தி
Aavipen Anandhi
Author:
ஆர்னிகா நாசர்
Arnika Nasser
For more books
http://www.pustaka.co.in/home/author/arnika-nasser
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
ஆவிப்பெண் ஆனந்தி
1
சென்னையின் மைலாப்பூர் பகுதியில் வாரன் ரோட்டில் அமைந்திருந்தது மல்லிகை விலாஸ்!
பங்களாவைச் சுற்றி நிறைய மரங்கள் நிமிர்ந்திருந்தன. போர்டி கோவில் அப்பாவின் புதிய கார் ஸான்ட்ரோ
நின்றிருந்தது. சிவப்பு நிறம்.
வீட்டுத்தலைவர்அப்பாதனசேகரன். வயது 40. கம்ப்யூட்டர் படித்தவர். நடிகர் ராஜேஷ் சாயலில் இருப்பார். கோபமே காட்டாதத நிதான பொறுமை மனிதர் அவர் அவரைப் போல ஒரு அப்பா யாருக்கும் கிடைக்காது.
அம்மா வித்யா. வயது 36. இளங்கலை தாவரவியல் படித்தவள். நடிகை பாத்திமா பாபு சாயலில் இருப்பாள். கண்டிப்பானவள். பிரமாதமாக சமைப்பாள்.
மூத்தவள் உஷா. வயது13, எட்டாம் வகுப்பு படிக்கிறாள். ரத்தச் சிவப்பு நிறம். மத்திம உயரம். சுருக்கமாக வர்ணித்தால் ஜூனியர் ஐஸ்வர்யா ராய்.
இரண்டாமவள் மோகனா. வயது 10. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். மாநிறம். சின்ன வயது சிம்ரன் சாயல்.
வீட்டோடயே தங்கி பணிபுரியும் 60 வயது வேலைக்காரி. பெயர்காமாட்சி. நடிகை காந்திமதி சாயல்.
வெல்வெட்
வளர்ப்பு பொமேரியன் நாய்க்குட்டி.
மல்லிகை விலாஸ்
க்குப் புதிய அங்கத்தினர் இன்று மாலை வருகை, அப்பா தனது மகள்களிடம் கூறினார்.
வரது யாருப்பா?
வெல்வெட் மாதிரி ஒன் மோர் நாயா?
-துடுக்காய் வினவினாள் மோகனா.
செல்லமாய் முறைத்தார் அப்பா.
இல்லை...
- நிறுத்தி அழுத்தமாக உச்சரித்தார். வரப்போறது ஆனந்தி!
போன மூணாவது வருஷம் வந்து வால்தனம் பண்ணிட்டுப் போன எலிவால் ஆனந்தியா? இப்ப எதுக்கு வர்றா? அதுவும் சம்மர் ஹாலிடேஸ் முடிஞ்சு?
என்றாள் உஷா.
அவள் என் தங்கை பெண். உங்கள் இருவருக்கும் அத்தை மகள். அவளுக்கு எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து போக முழு உரிமை இருக்கிறது பொண்ணுகளா!
எத்ன நாள் தங்குவா டாடி?
நிரந்தரமா தங்கப் போரா. இனிமே எனக்கு மூணு மகள்கள். அவள, நீங்க சொந்த சகோதரியா பாவிக்கணும்!
கஷ்டம்!
- உஷா.
‘அவ இங்க நிரந்தரமா தங்க வர என்ன காரணம் டாடி?" - மோகனா.
திடீரென்று அப்பாவின் முகம் சோகத்தில் மூழ்கியது.
ஆறு மாசத்துக்கு முன்னாடி உங்க அத்தையும், மாமாயும் கார் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்கம்மா. ஆனந்தி அனாதையா நின்னா. ஹாஸ்டல் ல சேத்து படிக்க வைச்சேன், அங்க ஏதோ ப்ராப்ளம்…
என்ன ப்ராப்ளம் டாடி?
அது உங்களுக்குத் தெரிய வேண்டாத விஷயம். அவளைகூட்டிட்டு வந்து உங்க ஸ்கூல்ல சேர்க்கப் போறேன். அவ மனசில ஏற்பட்டு இருக்கிற காயங்களை நீங்கள்தான் ஆத்தணும் அன்பைக் காட்டி!
கவலையே படாதீங்க டாடி. எங்க கைவசம் நிறைய பர்னால், பேன்ட்எய்ட், ஹாண்டி பிளாஸ்ட்கள் உள்ளன. ஆனந்தி காயத்தை காண்பிச்சாள்னா அது மேல டெட்டாலை கொட்டி பேன்ட் எய்டை ஒட்டிர்ரோம்!
- கிண்டலடித்தாள் மோகனா.
குறும்பு பேசாதே!
எல்லாம் சரி; அவ எந்த ரூம்ல தங்குவா?
வினவினாள் உஷா.
வீட்டுக்கு மூத்தவ தான் விட்டுக் குடுக்கணும். ஆனந்தி உஷா ரூம்ல தான் தங்கப் போறா...
ஒகே டாடி... ஆனா ஒரு கண்டிஷன்!
என்ன்?
என் அறையில இருக்கிற கம்ப்யூட்டரை ஆனந்தி தொடக் கூடாது!
நோ... நோ... வீட்ல எது இருந்தாலும் மூணு சம பாகம் தான்…
தந்தை, மகள்கள் உரையாடலைக் கேட்டுச் சிரித்தாள் வேலைக்காரக் கிழவி. அம்மாவும் ஜோடி சேர்ந்தாள்.
காமாட்சி, நீ என்ன சொல்ற?
வேலைக்காரக் கிழவியிடம் அபிப்ராயம் கேட்டார் அப்பா.
நான் சொல்றதுக்கு என்ன இருக்குது எஜமான். ரெண்டு அறுந்த வால்களோடு மூணாவது அறுந்த வால் கூட்டு சேரப் போகுது. அவ்வளவு தான்!
ஆனந்தியை யார் கூட்டிட்டு வரப்போறாங்க டாடி?
எனது அலுவலகத்தில் எனக்குக் கீழ் பணிபுரியும் உதவியாளர் ஆனந்தியை கூட்டி வர நேத்தே திருச்சிக்குப் போய்ட்டார். சாயந்திரம், நானும் அம்மாவும் கார்ல ரயில்வே ஸ்டேஷன் போய் ஆனந்தியை ரிசீவ் பண்ண வேண்டியது தான்.
‘வெல்வெட்’டை எடுத்துக் கொஞ்சினாள் உஷா.
நாங்க ஸ்டேஷனுக்கு வர வேண்டாமா?
– மோகனா.
வேணாம்!
ஏன்?
ரயில்வே ஸ்டேஷனை தாம்தூம் பண்ணி ரெண்டாக்கிருவீங்க குட்டிப் பிசாசுகளா!
என்றவர் பேச்சை முடித்துக் கொண்டார்.
அலுவலகம் கிளம்பினார்.
அம்மா சமையலறைக்குப் போனார்.
உஷாவும், மோகனாவும் யோசனை பண்ணிய படியே உஷாவின் அறைக்குள் புகுந்தனர்
மாலை-
அப்பாவும், அம்மாவும் ஆனந்தியை அழைத்து வரக் காரில் கிளம்பினர்.
உஷாவும், மோகனாவும் குளித்து தலைவாரி புத்தாடைக்கு மாறினர். உஷாவும், மோகனாவும் ஜீன்ஸ், டிசர்ட்டில் பளபளத்தனர்.
‘வெல்வெட்டும் புதிய அங்கத்தினர் வரவுக்காக போர்டிகோவில் பரபரத்தது.
நேரம் கரைய கரைய இரு சகோதரிகளின் பதட்டமான எதிர்பார்ப்பு கூடியது.
வெளிகேட்டில் ஹாரன் ஒலித்தது. கூர்க்கா இரும்புக் கேட்டைத் திறந்து விட்டான். கார் சறுக்கியபடி போர்டிகோவில் வந்து நின்றது.
உஷாவும், மோகனாவும் தடதடவென ஓடி வந்தனர்.
அப்பா முதலில் வெளிப்பட்டார். அடுத்து அம்மா வெளிப்பட்டாள். மூன்றாவதாக பல நிமிடங்கள் கழித்து மெது மெதுவாய் இறங்கினாள் ஆனந்தி.
மூன்று வருடங்களுக்குமுன் பார்த்த எலிவால் ஆனந்தியா இவள்? நம்பவே முடியவில்லையே!
இப்போதைய ஆனந்திக்கு வயது 12. ஏழாம் வகுப்பு படிப்பவள். உலகப் புகழ் பெற்ற ஒவியர் லியானர்டோ டாவின்ஸி வரைந்த மோனாலிஸா போலிருந்தது ஆனந்தி முகம்.
அழுந்த மூடியிருக்கும் உதடுகளுக்குள் ஆனந்தமும், சோகமும் ஒருசேரத் தெரிந்தது.
சுருள் சுருள் தலைகேசம். பின்னங்கால் வரை இறங்கி தழைத்திருந்தது.
ஆனந்தியின் நிறம் கறுப்பும் இல்லை; சிவப்பும் இல்லை; மாநிறமும் இல்லை. புது மாதிரியான மஞ்சள் கலந்த சிமிண்ட் நிறம்.
குள்ள உருவம். உயரம் நாலரை அடி இருப்பாள்.
பெரிய அகன்ற உயிர்ப்பான மர்மமான செய்திகள் சொல்ல விழையும் கண்கள்.
கீழ்தொடை வரை நீண்டிருந்தன கைகள்.
உஷாவும், மோகனாவும் ஆனந்தியிடம் ஓடினர்.
ஹேய் ஆனந்தி! எப்டிடி இருக்க?
முதலில் உஷா பாய்ந்து ஆனந்தியைக் கட்டியணைத்துக் கொண்டாள். கோவில் பிரகாரங்களில் ஒரு வாசனை அடிக்குமே அந்த வாசனை ஆனந்தியின் உடலிலிருந்து அடித்தது.
இவர்களின் அழைப்பையும், அணைப்பையும் உதாசீனப்படுத்தினாள் ஆனந்தி.
ஆனந்தியின் பயணச் சுமைகளை காமாட்சி தூக்கி வந்தாள்.
‘என்னடி பேசவே மாட்டேங்கற!?’
இதற்கும் ஆனந்தி தில் கூறவில்லை.
அவளைக் கொஞ்ச நேரம் விடுங்கடி, பயணக் களைப்பாய் இருக்கும். குளிச்சு வேற ட்ரஸ் பண்ணட்டும். உஷா! ஆனந்தியை உனது ரூமுக்கு கூட்டிட்டுப் போ.
‘வெல்வெட்’ ஆனந்தியை முறைத்து முறைத்து ‘வவ் வவ்!’ என குரைத்தது. ஆனந்தி முதலில் பொறுத்துக் கொண்டவள் பின் திரும்பி ‘வெல்வெட்’டை முறைத்தாள். நடுநடுங்கி ஊமையானது.
ஆனந்தியை அழைத்துக் கொண்டு தனது அறைக்குப் போனாள் உஷா.
இனி இந்த ரூம்ல தான் நீதங்கப் போற!
ஆனந்தி அறையை நோட்டமிட்டாள் வெறுமை படிந்த முகத்துடன்.
கம்ப்யூட்டரைப் பார்த்ததும் பட்டன்களைத் தட்டி மெளசை அமுக்கினாள்.
உனக்கு கம்ப்யூட்டரை இயக்கத் தெரியுமா ஆனந்தி?
‘உண்டு’ ‘இல்லை’ என நேரடி பதில் இல்லை. இறுக்கமான மவுனம்.
உஷாவுக்கு கோபம் பொங்கியது. இருந்தாலும் அடக்கிக் கொண்டாள்.
ஆனந்தி குளிக்கப் போனாள்.