Vingyaana Vaayilkal - Part 2
By Sivan
()
About this ebook
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Read more from Sivan
Aal Kadathal Rating: 0 out of 5 stars0 ratingsEzhai Padum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsHomer - Odessey Rating: 1 out of 5 stars1/5Karamazov Sagotharargal Rating: 0 out of 5 stars0 ratingsIzhantha Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNana Rating: 0 out of 5 stars0 ratingsHitchcock Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAazhkadalin Adiyil… Rating: 0 out of 5 stars0 ratingsBuddha Jathaga Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsCasterbridge Nagara Mayor Rating: 0 out of 5 stars0 ratingsTom Sawyer Rating: 5 out of 5 stars5/5Mobydick Rating: 3 out of 5 stars3/5Ooz Nagarin Mayavi Rating: 0 out of 5 stars0 ratingsPrabu Maandi Cristo Rating: 0 out of 5 stars0 ratingsUlagangalin Porattam Rating: 1 out of 5 stars1/5Kalivarin Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsAthisiya Ulagil Alice Rating: 0 out of 5 stars0 ratingsBhoomiyin Maiyathai Nokki Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsRobin Hood Rating: 0 out of 5 stars0 ratingsKannukku Theriyatha Manithan Rating: 0 out of 5 stars0 ratingsRobinson Kudumbam Rating: 0 out of 5 stars0 ratingsRobinson Crusoe Rating: 1 out of 5 stars1/5Genjiyin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsGeorge Eliot's Atrankaraiyora Aalai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vingyaana Vaayilkal - Part 2
Related ebooks
Siruvarin Sindhanaikku Rating: 0 out of 5 stars0 ratingsBuddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsManathul Manitham Rating: 0 out of 5 stars0 ratingsAzhwarkalai Aarathippom Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsThathu Arinthathum Ariyathathum Rating: 0 out of 5 stars0 ratingsUratha Sindhanai Rating: 0 out of 5 stars0 ratingsSilapathigarathil Ara Kotpaadu Rating: 0 out of 5 stars0 ratingsSetril Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsமின்னலாய் வா விவேக்! and கற்பிழந்த கார்பன் காப்பிகள் Rating: 0 out of 5 stars0 ratingsMinnalaai vaa vivek Rating: 4 out of 5 stars4/5Vetri Muzhakangal Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratingsEngey Pogirom? Rating: 0 out of 5 stars0 ratingsYaanaikku Uthaviya Erumbugal Rating: 0 out of 5 stars0 ratingsUngal Uyarvu... Ungal Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsArivuraigal Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsSunduvin Sanniyasam Rating: 0 out of 5 stars0 ratingsKarippu Manikal Rating: 0 out of 5 stars0 ratingsSinthanai Sigarangal Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsSaarana Iyakka Thanthai Baden Powell Rating: 0 out of 5 stars0 ratingsDeiva Tamil Ezhathile... Rating: 0 out of 5 stars0 ratingsIthu Engal Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Vidivelli Thanthai Periyar Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsMore + Rasam = Munnetram Rating: 0 out of 5 stars0 ratingsArumbugal Uyarvil Namathu Pangu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Vingyaana Vaayilkal - Part 2
0 ratings0 reviews
Book preview
Vingyaana Vaayilkal - Part 2 - Sivan
http://www.pustaka.co.in
விஞ்ஞான வாயில்கள் - பாகம் 2
Vingyaana Vaayilkal - Part 2
Author:
சிவன்
Sivan
For more books
http://www.pustaka.co.in/home/author/sivan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
பணம் பிறந்த கதை
பணம் இல்லாத காலம்
முற்காலப் பணம்
காகிதப் பணம்
கள்ள நோட்டுகள்
நமது நாட்டில் பணம்
வங்கிகள்
சேதமான பணத்தை என்ன செய்கின்றனர்?
பணப்பை
பணம் பற்றிய சில செய்திகள்
சம்பளம்
கல் பணக்காரர்
போர் நாணயம்
நாணயத்தில் முகம்
பணமற்ற நாடுகள்
பன்றித் தலை நாணயம்
பிளாஸ்டிக் நாணயம்
கனமான நாணயம்
கனம் குறைந்த நாணயம்
நாணயங்களும் முத்திரைகளும்
ராணுவப் பணம்
மதிப்புக் குறைவான நோட்டு
அரசாங்கம் வெளியிட்ட கள்ள நோட்டு
ரூபாயும் பைசாவும்
இன்றும் பண்டமாற்று…
மிகப்பெரிய செக்
நோட்டு அடிக்கும் வங்கிகள்
நாணய உயரம்
டெலிவிஷன் எப்படி வேலை செய்கிறது?
கலர் டெலிவிஷன்
ஆன்ட்டெனா
ஒளிபரப்பின் பின்னணி
பல வடிவங்களில் டெலிவிஷன்
டெலிவிஷனின் மற்றும் சில உபயோகங்கள்
நமது நாட்டில் டெலிவிஷன்
டெலிவிஷன் பற்றிய சில செய்திகள் டெலிவிஷன் விற்பனை
முதல் செய்தி வாசிப்பு
முதல் விளம்பரம்
மிகப்பெரிய டெலிவிஷன்
மிகச் சிறிய டெலிவிஷன்
நீ...ண்…ட டெலிவிஷன் நிகழ்ச்சி
அதிகம் பேர் பார்த்த காட்சி
குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்
அறிவிப்பாளர்கள்
முதல் அறிவிப்பாளர்
ஐயோ டெலிவிஷனா!
டெலிவிஷன் பார்க்க…
50 கோடி டெலிவிஷன்கள்
சாதனையாளர்
டெலிவிஷன் கல்லூரி
உயர்ந்த விளம்பரக்கட்டணம்
கம்பியூட்டரின் வரலாறு
கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்கிறது?
கம்ப்யூட்டரின் மூளை
கம்ப்யூட்டரின் ரகசியமொழி
கம்ப்யூட்டரில் மோசடிகள்
கம்ப்யூட்டர் புரோகிராம்
கம்ப்யூட்டர் வியாபாரம்
கம்ப்யூட்டரின் பயன்கள்
கம்ப்யூட்டரால் வேலைவாய்ப்பு அதிகரிக்குமா? குறையுமா?
கம்ப்யூட்டர் வார்த்தைகள்
விலை வித்தியாசம்
மூன்று தலைமுறைகள்
மிகச்சிறிய கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டரின் மூளைத்திறன்
கம்ப்யூட்டருக்கு உதவியவர்கள்
முதல் புரோகிராமர்
சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்
ஆள் மாறாட்டம்
சில அறிவியல் துறைகள்
சில தகவல்கள்
விஞ்ஞான வாயில்கள் - பாகம் 2
இந்தப் புத்தகம்…
என்னைப் பொறுத்தவரையில் இந்த ‘விஞ்ஞான வாயில்கள்’ (இரண்டாம் பகுதி) வித்தியாசமான ஒன்று. கடந்த காலத்தின் - விஞ்ஞான வாய்ப்பு வசதிகள் கருவிகள் ஏதுமற்ற நமது அன்றைய வாழ்க்கைக்கும், விஞ்ஞான வசதிகள் நிறைந்த இன்றைய வாழ்க்கைக்கும் நடுவே ஓர் இடைவெளி உண்டு. அதை ஒரளவு குழந்தை வாசகர்களுக்கு விளக்கி நிரப்புவதே இதன் நோக்கம்.
செளகரியமான நமது இன்றைய நிலையிலிருந்து, வசதிகள் மிகவும் குறைவான - ஆனால், அதைத் தங்களது அறிவுத் திறத்தால் ஈடுசெய்த ஒரு காலகட்டத்துக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வது, அல்லது அவர்களை அதை உணரச் செய்வது என்பது சிறுவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒன்றாகக் கருதுகிறேன்.
ஒருகணம் யோசித்துப் பார்த்தால் நமக்கு ஒர் உண்மை தெரியும்.நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகை ஒரு கணம் தனியாக இருந்து கவனித்தால், நாம் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களும் நமக்கு முந்தைய மற்றும் சமகால மனிதர்களின் சிந்தனை மற்றும் கற்பனைகளின் விளைவு. அதாவது அவர்களது கடுமையான உழைப்பின் மூலம் பிறந்த கண்டுபிடிப்புகள் என்பது புரியும்!
இப்படி யோசிப்பதாலேயே நமக்கு இன்னொரு கோணமும் புலப்படும். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் நமது வாழ்க்கைக்கு எவ்வளவோ உதவி செய்து, தங்களை அடையாளப்படுத்தி யுள்ளனர்.
அந்த வகையில், நாம் நம்மை அடையாளப் படுத்திக் கொள்ளவோ, வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக எதையாவது செய்திருக்கிறோமா என்ற கேள்வி எழும். அப்படி மனத்தில் எழுந்தாலே நாமும் சமூகத்துக்குப் பயனுள்ள எதையாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். முயற்சிப்போம். இதுவே சமூகம் சார்ந்த ஒர் உணர்வை நமக்குள் ஏற்படுத்தப் போதுமானது. சொந்தவாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள நாம் எவ்வளவோ போராட வேண்டியுள்ளது. பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இத்தனைக்குமிடையில் நம்முள் இப்படி ஒர் எண்ணம் தோன்றினால் அது எவ்வளவு மரியாதைக்கு உரியது!
இன்றைய சிறுவர்களான நம்மிடையே எத்தனையோ, விஞ்ஞானிகள், மகான்கள், அரசியல் தலைவர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள் பிறந்து ஒளிந்திருக்கலாம். அவர்கள் வெளிப்பட வேண்டுமானால், மேற்குறிப்பிட்ட முறையிலான சிந்தனை அவசியம். அப்படிப்பட்ட முகம் தெரியாத எதிர்கால சமூகப் பொறுப்பும் உணர்வும் உள்ள மனிதர்களுக்கு நமது முன்கூட்டிய நல்வாழ்த்துக்கள்.
இதன் முதல் பகுதியில் 'உலகம் பிறந்த விதம்' மனித இனத் தோற்றம் ‘காலம் கணித்தகதை’ எழுத்து மற்றும் புத்தகங்கள் பிறந்த கதை ஆகியவை இடம் பெற்றுள்ளன. இரண்டாவது பகுதியான இதில் பணம் பிறந்த கதை, ‘டெலிவிஷன் பிறந்த கதை', 'கம்ப்யூட்டர்கள் பிறந்த கதை, போன்றவற்றுடன் விஞ்ஞானிகளும் அவர்களது கண்டுபிடிப்புகளும், இந்திய விஞ்ஞானிகளின் ஒரு பட்டியலும் இடம் பெற்றுள்ளன. இன்டர்நெட் பிறந்த கதை"யுடன் முற்றுப் பெறுவதாக இருந்த இந்தப் புத்தகம், இடப் பற்றாக்குறை காரணமாக அது தவிர்க்கப்பட்டுள்ளது.
எனவே குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதமாக ‘இன்டர்நெட் பிறந்த கதை' மற்றொரு தனிப் புத்தகமாக வெளியாகிறது.
இந்தப் புத்தகத்துக்குப் பதினெட்டு ஒவியங்களை வரைந்து கொடுத்த பிரபல ஒவியர் திரு.ஜெயராஜ் அவர்களுக்கும், அட்டைப்படம் வடிவமைத்துத் தந்த ஒவியர் திரு.ராஜா அவர்களுக்கும், தாராள மனத்துடன் இதை வெளியிடும் ‘கண்ணபிரான் நூலக உரிமையாளர் திரு.மானாமதுரை மாசி அவர்களுக்கும், வாங்கிப் பயன்படுத்தும் நூலகத் தாருக்கும், தேடிப்பிடித்து வாசிப்பில் ஈடுபடும் சமகாலக் குழந்தை வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தோழமையுடன்
சிவன்
தொலைபேசி எண்: 4837681
சென்னை - 78.
பணம் பிறந்த கதை
பணம் இல்லாத காலம்
‘பணம் என்ற ஒன்று இந்த உலகத்தில் இல்லவே இல்லை' என்பதாக ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள. அதாவது ரூபாய, டாலா, பவுணட, நாணயம் இப்படிப்பட்ட எதுவுமே இல்லாத ஒரு நிலையை! உண்மையிலேயே அப்படிப்பட்ட ஒரு நிலை நமது பூமியில் இருக்கத்தான் செய்தது. அப்படியானால் அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்த மக்கள், தங்களுக்குத் தேவையான பொருள்களை எப்படி வாங்கினர்?’ என்கிற கேள்வி உங்களுக்குத் தோன்றவே செய்யும்.
இதற்குப் பதில் சொல்வதானால், நமது இன்றைய தேவைகளில் பெரும்பாலானவை அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு உண்மையான தேவைகளாகவே இருக்கவில்லை. தற்காலத்தில் பயன்படுத்தும் மின்சாரம், மின்சாரப் பொருட்கள், மின் விளக்குகள், தொலைக்காட்சி, வானொலி, மின்விசிறி, வாகனங்கள் போன்ற எதுவுமே அக்காலத்தில் கண்டுபிடிக்கப்படவே இல்லையே!
அன்றைக்கு வாழ்ந்திருந்த மனிதர்களின் தேவைகள் மிகக் குறைவாகவே இருந்தன. அன்று விவசாயம் என்பது ஏறத்தாழ தொண்ணுாறு சதவிகித மக்களின் தொழிலாக இருந்தது. உண்பதற்கான உணவுப் பொருள், முக்கியத் தேவையாக இருந்தது. அடுத்ததாக உடுக்கத் தேவையான உடைகள். இது தவிர, வீட்டு உபயோகத்திற்குத் தேவையான சில பொருள்கள். பெரும்பாலான பொருள்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டன. தங்களிடமில்லாத - தேவையான பொருள்களைப் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்ள அவர்களுக்கு ஒரு வழியிருந்தது.
உதாரணமாக, குமாருக்கு ஒரு பசுமாடு தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். குமாரிடம் நெல் நிறைய உள்ளது. தன்னிடமுள்ள நெல்லை எடுத்துக்கொண்டு குமார், பசுமாடு வைத்திருப்பவரிடம் போவார். 'உங்கள், பசுவிற்கு விலையாக இத்தனை மூட்டை நெல் தருகிறேன்’ என்பார். பசுமாட்டை வைத்திருப்பவருக்கு நெல் அதிகமாகத் தேவைப்படலாம். உடனே அவர் குமாரிடமிருந்து நெல்லை வாங்கிக்கொண்டு, அதற்குப் பதிலாக பசுமாட்டை அவரிடம் தருவார்.
இந்த முறை எவ்வளவு சுலபமாக இருக்கிறது என்று பாருங்கள்! தம்மிடமுள்ள பண்டத்தைப் பிறருக்குக் கொடுத்து, பிறரிடமுள்ள பண்டத்தை மாற்றி வாங்கிக் கொள்ளும் இந்த முறையைப் பண்டமாற்று என்று குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் இந்த முறையைப் பார்ட்டர் என்று அழைக்கின்றனர். இந்த ஆங்கில வார்த்தை, எந்த மொழியின் மூலத்திலிருந்து உண்டானது என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. இத்தாலிய மொழியில் ‘பார்ட்டரே’ என்ற ஒரு சொல் உண்டு. பிரெஞ்சு மொழியில் பார்ட்டர் என்ற ஒரு சொல் உள்ளது. இந்த இரண்டு சொற்களுக்கும் விற்பனை என்பதுதான் பொருள். எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு மொழியில் ஏதோ ஒன்றிலிருந்து இந்த ஆங்கில பார்ட்டர் உருவாகியிருக்க வேண்டு மென்று கருதப்படுகிறது.
இருப்பினும் இந்தப் பண்டமாற்று முறையில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. உதாரணமாக பசுமாடு வைத்திருப்பவருக்கு நெல் தேவைப்படவில்லை யென்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பதிலாக நான்கு ஆட்டுக்குட்டிகள்தான் தேவைப்படுகிறது. ஆனால், நெல், வைத்துள்ள குமாருக்குப் பசுமாடுதான் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்யலாம்?
நெல் வைத்துள்ள குமார், ஆடு வளர்ப்பவரிடம் சென்று தன்னிடமுள்ள நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக நான்கு ஆட்டுக்குட்டிகளை முதலில் வாங்க வேண்டும்; பிறகு இந்த நான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுபோய் பசுமாடு வளர்ப்பவரிடம் கொடுத்து, அதற்குப் பதிலாகப் பசுமாட்டைப் பெற்றுக்கொள்ள