Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhoologam Ananthathin Ellai
Bhoologam Ananthathin Ellai
Bhoologam Ananthathin Ellai
Ebook151 pages2 hours

Bhoologam Ananthathin Ellai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Nagasubramanian Chokkanathan (born January 17) better known by his pen name N.Chokkan is a Tamil Writer who has written two novels and nearly 100 short stories. His works has been translated into other Indian languages. Apart from this, he has written columns in several Tamil magazines. His interest for writing came from his blind aunt for whom he used to read a lot of books. His love for Books then made him to write few detective stories,which are not yet published.His first short story was published in 1997. His entry into Non-fiction area was kick started by a publishing house approaching him to write Biography of Sachin Tendulkar.He then wrote Biographies of famous Businessmen,Politicians and people who shaped the world.The list includes Narayana murthy, Azim Premji, Dhirubhai Ambani, Walt Disney, Charlie Chaplin,to mention a few.
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580105001847
Bhoologam Ananthathin Ellai

Read more from N. Chokkan

Related authors

Related to Bhoologam Ananthathin Ellai

Related ebooks

Related categories

Reviews for Bhoologam Ananthathin Ellai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhoologam Ananthathin Ellai - N. Chokkan

    http://www.pustaka.co.in

    பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

    Bhoologam Ananthathin Ellai

    Author:

    என். சொக்கன்

    N. Chokkan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/n-chokkan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

    என். சொக்கன்

    உள்ளே ...

    பயணம் தொடங்குமுன் ...

    1. ஜப்பான்: விருந்தோம்பல்

    2. ஹாலந்து: சுத்தம்

    3. ஜெர்மனி: நேரம் தவறாமை

    4. சீனா: கடின உழைப்பு

    5. வெனிசுலா: அழகு உணர்ச்சி

    6. அமெரிக்கா: சொந்தக் காலில் நிற்கும் முனைப்பு

    7. ஃப்ரான்ஸ்: காதல் தேசம்

    8. ஸ்வீடன்: மகளிருக்கு மரியாதை

    9. தாய்லாந்து: கொண்டாட்டம்

    10. ஜமைக்கா: உடலினை உறுதி செய்

    11. பூடான்: எல்லோருக்கும் சந்தோஷம்

    12. ஐஸ்லாந்து: அமைதிப் பூங்கா

    13. சிங்கப்பூர்: நம்மால் முடியும்

    14. கியூபா: ஆரோக்கிய வாழ்க்கை

    பயணம் தொடங்குமுன் ...

    உலகில், இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. அவற்றில் எத்தனை, நமக்குத் தெரியும்?

    விரல் விட்டு எண்ணிப் பார்த்தால், பத்தோ, இருபதோ தேறும், கொஞ்சம் வரலாறு, புவியியல் படித்தவர்கள், பொது அறிவு ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால் முப்பது, நாற்பதைத் தொடுவார்கள், அதற்குமேல், ரொம்பக் கஷ்டம்!

    ஆக, நமக்குப் பெயர்கூட அறிமுகமில்லாத எத்தனையோ நாடுகள் உலகமெங்கும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் வெவ்வேறுவிதமான மனிதர்கள், குணங்கள், பழக்கவழக்கங்கள், புதுமைகள், புரட்சிகள், இனிமைகள்.

    இந்தியா என்றால், 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று பெருமையோடு சொல்கிறோமில்லையா? அதுபோல, இந்த தேசங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு அம்சமாவது இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிடமும் நாம் பாடம் படித்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள் சிலதாவது தென்படுகின்றன.

    பல நாடுகளை, அவற்றின் சிறப்பம்சங்களை இந்தப் புத்தகம் விரிவாகத் தொட்டுச் செல்லும், வார்த்தைகளின்வழியே ஓர் உலகப் பயணம் இது!

    இந்தக் கட்டுரைகளின் சுருக்கமான வடிவம் 'மல்லிகை மகள்' மாத இதழில் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளிவந்தது. பூகோளக் குறிப்புகளாகமட்டுமே நமக்கு அறிமுகமாகியிருக்கும் நாடுகளைச் சமூகவியல் பார்வையில் பார்த்து, அந்தந்த நாடுகளின் மக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய நல்ல விஷயங்களை விவரித்த இந்தத் தொடரை எழுத உற்சாகம் அளித்தவர் 'மல்லிகை மகள்' ஆசிரியர் திரு ம. கா. சிவஞானம். அவருக்கும், இந்தத் தொடருக்குப் பிரமாதமான வரவேற்பளித்த எண்ணற்ற வாசகர்கள், வாசகிகளுக்கும் என் நன்றி.

    என்றும் அன்புடன்,

    என். சொக்கன்,

    பெங்களூரு.

    ஆசிரியர் தினம், 2011

    1. ஜப்பான்: விருந்தோம்பல்

    கேப்ஸ்யூல் அறை!

    பெயரைக் கேட்டால் விநோதமாக இருக்கிறது. ஆனால் ஜப்பானில் ஊர் விட்டு ஊர் செல்லும் பலருக்கு, இந்த கேப்ஸ்யூல் அறைகள்தான் போக்கிடம்.

    நிஜமாகவே, கொஞ்சம் பெரிய சைஸ் கேப்ஸ்யூல்போலக் குட்டியூண்டு அறைகள்தான். மூன்றடிக்கு ஆறடி அகலத்தில் ஒரு சின்னக் கட்டில் போட்டு, ஓரத்தில் டிவி வைத்திருப்பார்கள், மூன்றடி உயரத்தில் ஒரு சின்ன விளக்கு.

    அவ்வளவுதான். அவ்வளவேதான். இந்தக் கேப்ஸ்யூலுக்குள் நீங்கள் உட்காரலாம், படுக்கலாம், டிவி பார்க்கலாம், காலாறக் கொஞ்சம் நடக்கலாம் என்றால்கூட முடியாது.

    குட்டியூண்டு தேசமான ஜப்பானில் மிகப் பெரிய பிரச்னை, இடம். வேறு எதை வேண்டுமானாலும் அவர்களால் காசு கொடுத்து வாங்கிவிடமுடியும், இடம்மட்டும் கிடைக்காது. ஆகவேதான், அவர்கள் தங்களுடைய விருந்தினர்களை இப்படித் துளியூண்டு கேப்ஸ்யூல் அறைகளுக்குள் அடைத்துவைக்கவேண்டிய கட்டாயம்.

    ஆனால், நிலத்தில் இல்லாத இடம், ஜப்பானியர்களின் மனத்தில் இருக்கிறது. அவர்களுடைய விருந்தோம்பல், உலகப் புகழ் பெற்றது!

    ஜப்பானுக்குப் பயணம் வருகிற எந்த வெளிநாட்டுக்காரரும், சற்றே கனத்த மனத்துடன்தான் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வார். அந்த அளவுக்கு, விருந்தினர்களைத் தங்களுடைய அன்பால், கவனிப்பால் குளிப்பாட்டக்கூடிய நேசம் ஜப்பானியர்களுடையது.

    தங்கள் வீடுகளுக்கு யார் வந்தாலும், அவர்களை முகம் மலர வரவேற்பது ஜப்பானின் தேசிய குணம். அந்த விநாடியிலிருந்து, அந்த வீட்டுச் சொந்தக்காரர்களுக்குமட்டுமில்லை, அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் நாம் விருந்தினர்களாகிவிடுகிறோம். நம்மைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர்கள் மனமார ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.

    வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் ஜப்பானியர்கள் மிகவும் பணிவாகதான் பேசுவார்கள். அவர்கள் என்ன கேட்டாலும் மறுக்கமாட்டார்கள். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாவது, அவர்கள் கேட்கும் விஷயத்தைச் செய்து தந்துவிடவேண்டும். பல சமயங்களில், நாம் கேட்காத விஷயங்களும்கூடக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

    'விருந்தினர்களைத் தனியே விடுவது ஜப்பானியர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது' என்கிறார் சமீபத்தில் ஜப்பான் சென்று திரும்பிய இந்தியர் ஷஃபி அஹமது, 'எந்நேரமும் நம்முடைய பக்கத்திலேயே இருந்து வேண்டிய உதவிகளைச் செய்து தரவேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புவார்கள்'

    இதனால், நாம் எங்காவது வேலை விஷயமாக, அல்லது சும்மா சுற்றிப் பார்ப்பதற்காக வெளியே கிளம்பினால்கூட, நம்மைத் தனியாக விட்டுவிடமாட்டார்கள். அந்த வீட்டில் இருக்கும் ஒரு பையனோ, பெண்ணோ நமக்கு வழிகாட்டுவதற்கு, வேறு உதவிகளுக்காக என்று கூடவே புறப்பட்டுவிடுவார்கள்.

    'என்னுடன் வந்த ஜப்பானிய நண்பர், என்னைச் செலவு செய் ய அனுமதிக்கவே இல்லை', என்கிறார் ஷஃபி அஹமது, 'நான் பர்ஸைத் திறப்பதற்குள், என்னை முந்திக்கொண்டு எல்லாவற்றுக்கும் அவரேதான் பணம் கொடுத்தார்'

    'இது என்னடா தர்ம சங்கடம்' என்று நாம் நினைத்தாலும், அவர்களுக்குப் புரியாது. ஜப்பானியர்களைப் பொறுத்தவரை, விருந்தினர்கள் கண்ணாடிப் பாத்திரம்மாதிரி. கவனமாகக் கையாளவேண்டும், பத்திரமாக உங்களைக் காப்பாற்றி, வழியனுப்பிவைக்கவேண்டியது அவர்களுடைய பொறுப்பு.

    நாம் வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் என்றால், 'உங்களுடைய நாட்டைப்பற்றிச் சொல்லுங்கள்' என்று ஜப்பானியர்கள் கண்டிப்பாக விசாரிப்பார்கள். நாம் ஊர்க்கதையை அவிழ்த்துவிட்டால், கண் கொட்டாமல் கவனித்துக் கேட்பார்கள்.

    இதற்குக் காரணம், அவர்களுக்கு இந்தியாமீது உள்ள அக்கறையோ, ஆர்வமோ இல்லை. யாருக்கும் தங்களுடைய சொந்த நாட்டைப்பற்றிப் பேசுவதற்குப் பிடிக்கும், அந்தச் சந்தோஷத்தை விருந்தினருக்கு வழங்குவதற்காகதான், ஜப்பானியர்கள் நம்முடைய ஊர்க்கதையைச் சொல்லக் கேட்கிறார்கள்!

    கடந்த 2002ம் ஆண்டு, கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்றன. அவற்றில் கலந்துகொள்வதற்காக பல நாடுகளைச் சேர்ந்த அணிகள் ஜப்பானுக்கு வந்திருந்தார்கள்.

    'ஜப்பானில் பலருக்கு, கால்பந்து என்றால் வட்டமா, சதுரமா என்பதுகூடத் தெரியாது. ஆனால் நம் ஊருக்கு வந்த விருந்தினர்களைச் சந்தோஷமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுமட்டும் தெரியும்' என்கிறார் எய்லி ஹ்ஸு (Eily Hsu). அயர்லாந்துக் கால்பந்து அணியின் மொழிபெயர்ப்பாளராக ஜப்பான் சென்றிருந்தவர் இவர்.

    'நாங்கள் சென்ற ஒவ்வொரு ஊரிலும், ஜப்பானியர்கள் எங்களுக்கு வழங்கிய வரவேற்பைப் பார்த்து மலைத்துப்போனோம், சில ஊர்களில், எங்களுடைய (அயர்லாந்து) தேசிய கீதத்தை அப்படியே மனப்பாடம் செய்து, மழலை மொழியில் பாடிக் காண்பித்து அசத்திவிட்டார்கள்'

    விருந்துச் சாப்பாடு என்று வந்துவிட்டால், ஜப்பானியர்கள் நாற்பது ஐட்டங்களுக்குக் குறைவாகச் சமைக்கமாட்டார்கள். அவர்களுடைய உணவுமுறை நமக்குப் பழக்கமில்லை என்பதால், ஒவ்வொரு பண்டமாகக் கொஞ்சம் கொஞ்சம் பரிமாறி, 'இதைச் சாப்பிடுங்கள்' என்று உபசரிப்பார்கள். அந்தப் பண்டத்தைச் சாப்பிடும்போது நம்முடைய முகபாவம் எப்படி மாறுகிறது என்பதைக் கவனித்து, அதற்கேற்ப இன்னும் பரிமாறுவார்கள்.

    அடுத்தடுத்து, கேக், இனிப்புகள், நூடுல்ஸ், அரிசி, காய்கறிகள், சுஷி மீன், மாமிசம், மிட்டாய்கள் என ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருக்கும். தட்டு காலியாக, காலியாக மேலும் நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். விருந்தினர் நொந்து நூடுல்ஸாகி, 'ஐயா, சாமி, போதும்' என்று ஆனந்தக் கண்ணீருடன் கதறும்வரை விடமாட்டார்கள்!

    'வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் கிளம்பிச் செல்லும்போது, வெறுமனே, 'டாட்டா, பை பை' சொல்லி வழியனுப்புகிற பழக்கம் ஜப்பானில் கிடையாது' என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த

    Enjoying the preview?
    Page 1 of 1