Genjiyin Kathai
By Sivan
()
About this ebook
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Read more from Sivan
Karamazov Sagotharargal Rating: 0 out of 5 stars0 ratingsHomer - Odessey Rating: 1 out of 5 stars1/5Izhantha Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsTom Sawyer Rating: 5 out of 5 stars5/5Aazhkadalin Adiyil… Rating: 0 out of 5 stars0 ratingsAal Kadathal Rating: 0 out of 5 stars0 ratingsEzhai Padum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsOoz Nagarin Mayavi Rating: 0 out of 5 stars0 ratingsBuddha Jathaga Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNana Rating: 0 out of 5 stars0 ratingsKalivarin Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsCasterbridge Nagara Mayor Rating: 0 out of 5 stars0 ratingsRobinson Crusoe Rating: 1 out of 5 stars1/5Ulagangalin Porattam Rating: 1 out of 5 stars1/5Hitchcock Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSiddharthan Rating: 0 out of 5 stars0 ratingsGeorge Eliot's Atrankaraiyora Aalai Rating: 0 out of 5 stars0 ratingsRobin Hood Rating: 0 out of 5 stars0 ratingsMobydick Rating: 3 out of 5 stars3/5Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsPrabu Maandi Cristo Rating: 0 out of 5 stars0 ratingsKannukku Theriyatha Manithan Rating: 0 out of 5 stars0 ratingsSiruvargalukkana Greekka Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsRobinson Kudumbam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Genjiyin Kathai
Related ebooks
Project AK Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathiyam Rating: 5 out of 5 stars5/5Jodi Sera Aasai Rating: 0 out of 5 stars0 ratingsMohini Rating: 3 out of 5 stars3/5Saalaparinthu... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Malarum Kaalam Rating: 2 out of 5 stars2/5Ore Kadal Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Meengal Urangum Kulam Rating: 0 out of 5 stars0 ratingsIruttu Araiyil Oru Karuppu Poonai Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Yugam Pirakattum! Rating: 5 out of 5 stars5/5Oru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsMenaka Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsVidiyal Vegu Thooramillai Rating: 0 out of 5 stars0 ratingsArabic Kadalukku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsTheethum Nandrum Rating: 0 out of 5 stars0 ratingsTitanic - Oru Kaadhalin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsMeetchi Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5Villan Engira Kadhanayagan Rating: 0 out of 5 stars0 ratingsOru Aathmavin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsArabic Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Mallika Rating: 0 out of 5 stars0 ratingsYali Rating: 0 out of 5 stars0 ratingsVidyasaagaram Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Malar Rating: 4 out of 5 stars4/5Kumbakonam Vakkil Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMaadu Kaathu Kondirukkirathu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Genjiyin Kathai
0 ratings0 reviews
Book preview
Genjiyin Kathai - Sivan
http://www.pustaka.co.in
கென்ஜியின் கதை
Genjiyin Kathai
Author: Murasaki Shikibu
முறாசாகி ஷிபுகி
Translated by: Sivan
சிவன்
For other books
http://www.pustaka.co.in/home/author/sivan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
கென்ஜியின் கதை
ஓர் அறிமுகம்
உலக இலக்கியத்தில் மிக முக்கிய இடம் பெற்றுள்ள சீன, ஜப்பானிய இலக்கியங்கள் மிகவும் குறைவாகவே தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலை நாடுகளுடன் நமக்குள்ள இலக்கிய நெருக்கம், அதே அளவுக்குக் கீழை நாடுகளுடன் இல்லை என்பதே உண்மை. யதார்த்தத்தில் பல வகைகளில் நமது இலக்கியங்களுடன் பொருந்திச் செல்பவை சீன, ஜப்பான் மற்றும் வியட்நாம் நாட்டு இலக்கியங்கள்!
பாரம்பரியம் மிக்க ஜப்பானின் புராதனமான நாவல் ‘கென்ஜியின் கதை'. உலகின் தொன்மையான, மகத்தான, பிரமாண்டமான நாவல் என்றும் இது போற்றப்படுகிறது. ‘கென்ஜியின் கதை' உருவாகி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆறு பகுதிகளாக, ஐம்பத்து நான்கு அத்தியாயங்களில் இதன் பரப்பு விரிந்து, பரவியிருக்கிறது. இவை முழுக்க வரலாற்று சம்பவங்கள் நிறைந்த கதைகளின் தொகுப்பு என்றும் கூறலாம். இதில் முதல் பகுதியின் சுருக்கம் மட்டுமே இந்தப் புத்தகம்.
ஜப்பானின் மிகவும் பழைமையான நூல் என்று எட்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட பத்தாயிரம் கவிதைகளின் தொகுப்பான 'மன்யோஷு' கருதப்படுகிறது. இது ஜப்பானிய காவியமாகவும் போற்றப்படுகிறது. ஆனால், இதைக் காட்டிலும் பழைமை வாய்ந்தது என்று 'கோகிஜி'யைக் குறிப்பிடுகிறார்கள். இந்த வார்த்தையின் பொருள் 'பழங்கதை' என்பது. இது, ஏறத்தாழ நமது மகாபாரதம் போன்ற கட்டமைப்புக் கொண்டது. அதன் பிறகு உருவான ‘நிஹோன் ஷோகி’, ஜப்பானிய வரலாறு, ஏறத்தாழ இந்த நூல்களுக்கு இணையாக ஜப்பானிய மக்களால் போற்றப்படுகிறது ‘கென்ஜியின் கதை!'
பதினோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த நூலை எழுதியவர் சீமாட்டி முறாசாகி ஷிபுகி. இவரே உலகின் முதல் பெண் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். ஜப்பானிய மொழியில் இதன் பெயர் ‘கென்ஜி மானோகேட்டரி’ இதன் பொருள் கென்ஜியின் கதை என்பது. இந்த நாவல் எழுதப்பட்ட பிறகு, சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டது ‘கொஞ்சாகு மானோகேட்டரி’ இதன் பொருள் 'தொன்மையான கதைகள் என்பது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கதைகள் பகுதி பகுதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன'.
கென்ஜியின் கதை என்ற இந்த நூலில் உள்ள ஐம்பத்து நான்கு அத்தியாயங்களில் சுமார் நாற்பத்தொன்று, கென்ஜி என்ற இளவரசனது சுவாரஸ்யமானதும், விசித்திரமானதுமான சாகசக் கதைகள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள பதின்மூன்று அத்தியாயங்களில் கென்ஜியுடன் தொடர்பு கொண்டிருந்த இரண்டு இளைஞர்களது காதல் அனுபவங்கள் இடம்பெற் றுள்ளன. கதை விவரிப்பு போலவே…. கதையுடன் பிணைந்து செல்லும் கவிதைகள் எளிமையும், சுவாரஸ்யமும், உட் பொருளும் செறிந்தவை. எனவே, அந்தக் கவிதைகளும் நாவலில் முக்கியமான இடம் பெறுகின்றன.
சக்ரவர்த்தியின் அரண்மனை, ஊழியர்கள், வீரர்கள் ஆகியோரை மையமாகக்கொண்டே இந்தக் கதைகள் நகர்கின்றன. பாத்திரப்படைப்பு, வர்ணனைகள் ஆகியவற்றின் யதார்த்தத் தன்மையும், கதைகளின் காவிய அழகும், ஆங்காங்கே வெளிப்படும் உணர்வு மோதல்களும் ஒன்றிணைந்து இதை உலகத் தரத்துக்கு உயர்த்துகின்றன.
1925ஆம் ஆண்டில் ஆர்தர் வாலி என்ற ஆங்கிலேயர் முதன் முதலாக இதன் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதன் பிறகே இந்த கதைகள் வெளியுலகுக்குத் தெரியவந்தன. ஆனால், 1976இல்தான் கென்ஜியின் கதை முழுமையாக ஆங்கிலத்தில் வெளியானது. அதன் பிறகே இதன் மகத்துவம் உலக வாசகர்களுக்குத் தெரிந்தது. ஜப்பானிய மொழியில் இதற்கென்றே முழுமையான கலைக்களஞ்சியமும் வெளியாகியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாகத் தற்போதும் கூட இந்தக் கதை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கதையை எழுதிய சீமாட்டி ஷிபுகி முறாசாகி கி.பி. 978 - இல் பிறந்தவர். 17ஆவது வயதில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே இவரது தாம்பத்திய வாழ்க்கை நீண்டது. 20ஆவது வயதில் கணவர் மரணம் அடைந்தார். அதன் பிறகு அரண்மனையின் தலைமை அமைச்சரான மிச்சிநாகியின் மகளும், மகாராணியுமான அகிகோவின் சேவகியாக வாழ்க்கையைத் தொடர்ந்தார் ஷிபுகி முறாசாகி. அந்தக் காலகட்டத்தில் 1001 - இல் இந்த நாவலை எழுதத் தொடங்கி, 1014 - இல் முடிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கணவர் இறந்த பிறகு வாழ்க்கை நடத்துவதற்காக அரண்மனையில் ஊழியம் புரியத் தொடங்கிய ஷிபுகி, 1020 - இல் இந்த நாவலை எழுதி முடித்திருக்கலாம் என்ற கருத்தும் ஜப்பானிய அறிஞர்களிடையே நிலவுகிறது. பிந்தைய கருத்துக்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது, இதில் இடம் பெற்றுள்ள ஒரு சில வரலாற்று சம்பவங்களைத்தான்.
ஃபுஜிரா வம்சத்தைச் சேர்ந்த தாமோதோகி என்பவர்தான் ஷிபுகியின் தந்தையார். குழந்தைப் பருவத்திலேய ஷிபுகியின் தம்பியான நொபுநோரியை ஜப்பானிய மொழி வல்லுநராக்க வேண்டும் என்பது தந்தையின் நோக்கமாக இருந்தது. ஆனால், தம்பியுடன் அமர்ந்து கல்வி கற்ற ஷிபுகி, தம்பியைக் காட்டிலும் மொழியறிவில் தேர்ச்சி பெற்று விளங்கினாராம். இதில் உள்ள ஒரு முரண்பாடு என்னவென்றால், அந்தக் காலகட்டத்தில் ஜப்பானில் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதில் எவரும் ஆர்வம் காட்டியது இல்லை.
'நீ மட்டும் ஒரு பையனாக இருந்தால் நான் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பேன் தெரியுமா?’ என்று ஷிபுகியின் தந்தை பெருமூச்செறிவாராம். இந்தத் தகவலை ஷிபுகியே தன்னைப் பற்றிய குறிப்பில் தெரியப்படுத்தி உள்ளார்.
சக்ரவர்த்தியின் மெய்க்காப்பாளர்களில் ஒருவரும், ஃபுஜிரா வம்சத்தைச் சேர்ந்த உறவினரும் இளைஞருமான ஒருவரே ஷிபுகியின் கணவராக அமைந்தார். இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். இளமையிலேயே கணவனை இழந்து, இரண்டு குழந்தைகளைப் பராமரிக்கும் பொருட்டு அரண்மனையிலேயே வசிக்க நேர்ந்த ஷிபுகி முறாசாகி, தான் கண்ட…. கேட்ட... அனுபவித்த அனுபவங்கள் எல்லாவற்றையும் இந்த நாவலை வடிக்கப் பயன்படுத்திக் கொண்டார் எனலாம்.
இளவரசன் கென்ஜியின் காதல் கதைகளின் தொகுப்பு மட்டும் அல்ல இது. அன்றைய காலகட்டத்தில் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களது வாழ்க்கை முறைகளையும், சமூக நிலையையும், பொருளாதார நிலையையும் விவரிக்கும் காலப்பெட்டகமாகவும் இது திகழ்கிறது. ஷிபுகி விவரித்துள்ள சம்பவங்களில் பெரும்பாலானவை, அவரது சமகால வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டவை. எனவே, அவர் அவற்றை நுட்பமாக கவனித்து, எழுதியுள்ளது, ஜப்பானிய வரலாற்றுக்கு அழுத்தமான பின்னணியைத் தருகிறது.
சதித் திட்டங்களும், ரகசிய ஆலோசனைகளும், பொறாமையும், போட்டியும், வைராக்கியமும், காதலும், காதல் தோல்விகளும், ஆணவமும், பழியுணர்வும் நிறைந்த மனித வாழ்க்கையும், மனித மனங்களும் இதில் தேர்ந்த நுட்பம் மற்றும் மேதைமைத் திறத்துடன் விவரிக்கப்பட்டுள்ளன. உலகின் முதல் நாவலாசிரியர் மட்டும் அல்ல; தான் இணையற்ற ஓர் எழுத்தாளரும் கூட என்பதை இதன் மூலம் விபுகி முறாசாகி நிரூபித்துள்ளார். மிக அதிகமாகச் சுருக்கி மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்திலேயே அந்தச் சுவையை நீங்கள் உணர முடியும்!
கதைகள் மற்றும் சம்பவங்களை இணைக்கும் கவிதைகள், ஷிபுகி கவிதை புனைவதிலும் வல்லவர் என்பதைப் பறை சாற்றுகின்றன. சிறந்த நாவல் ஒன்றையும், சிறந்த கவிதைத் தொகுப்பு ஒன்றையும் ஒரே நூலிலேயே வழங்கியுள்ளார். ஜப்பானிய மக்களின் வாழ்க்கை, அதை அவர்கள் அணுகிய விதம், ஆகியவற்றை மனத்தைக் கவரும் வகையில் காவிய நடையில் வெளிப்படுத்தியிருப்பதில் ஷிபுகி இன்றைக்கும் முதல் இடத்திலேயே நிற்கிறார். ஜப்பானிய மகத்தான காவியம் ஒன்றை தமிழக வாசகர்களுக்கு வழங்க முடிந்ததில் உண்மையிலேயே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
தோழமையுடன்
சிவன்
1
சக்ரவர்த்தியின் அந்தப்புரப் பெண்களிலேயே, அவர் அதிகம் நேசித்தது கிரிட்சுபோவைத்தான். அவளது குலப் பெருமை சற்றுக் குறைவான போதிலும், கவர்ச்சியானவள் அவள். அவளுடனான சக்ரவர்த்தியின் நெருக்கம், மற்ற சீமாட்டிகள் அனைவரிடமும் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் அவள் மீது மற்றவர்கள் பொறாமை கொண்டதிலும் அவளை கேலி செய்ததிலும் ஆச்சரியம் இல்லை!
அந்தப்புரப் பெண்கள் எவ்வளவுதான் முணுமுணுத்தாலும், சக்ரவர்த்திக்கு அவளுடனான அன்பு குறையவில்லை. குடி மக்களில் பலரும் சக்ரவர்த்தியிடம் இது தொடர்பான தங்களது மனக்குறையைத் தெரிவித்தனர். எனினும் கிரிட்சுபோவின் மீது அவருக்கு இருந்த அன்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் அந்த அரண்மனைக்குள் வெளிப் படையாக அவளை மட்டம் தட்டிப் பேசவோ, தொல்லைப் படுத்தவோ எவரும் முற்படவில்லை!
சக்ரவர்த்தியின் சபையில் அவருக்கு ஆலோசனை கூறுபவர்களில் ஒருவர் கிரிட்சுபோவின் அப்பா. அவர் இறந்து நீண்ட காலமாகிறது. அதனால் அவளின் அம்மாதான் அவளை வளர்த்து ஆளாக்கினாள். சூழ்நிலை பாதகமான போதிலும், அவளை கவனமாக வளர்த்துப் பராமரிக்க அந்தத் தாய் மிகுந்த சிரமப்பட்டாள், ‘துயர வேளைகளில் ஆறுதல் அளிக்கவோ... வழி நடத்தவோ, அரவணைக்கவோ எவரும் இல்லையே!’ என்ற ஆற்றாமை அந்தத் தாயை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் கிரிட்சுபோவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சக்ரவர்த்திக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! நாட்டின் நடைமுறையை ஒட்டி சக்ரவர்த்திக்குக் குழந்தை பிறந்தால், ஒரு சில வாரங்களுக்குப் பிறகே அவர் அதை காண முடியும். அதனால், அவர் ஆவலுடன் காத்திருந்தார். குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு சக்ரவர்த்தியிடம் குழந்தையைக் கொண்டு வந்து காட்டியபோது, அதன் அழகைக் கண்ட அவர் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்.
மன்னருக்கு வலப் பக்கம் அமரும் அமைச்சர் ஒருவரின் மகள் கோக்கிதென் சீமாட்டி. அவளுக்குப் பிறந்தவன் சக்ரவர்த்தியின் முதல் குழந்தையானதால், அவனே அடுத்த சக்ரவர்த்தியாவான் என்றே அது வரை எல்லாரும் நம்பினர். ஆனால், சுபோகிரிட்டுக்குப் பிறந்த குழந்தை மாதிரி கோக்கிதென் சீமாட்டியின் பையன் அவ்வளவு அழகானவன் இல்லை. எப்படி இருப்பினும் சுபோகிரிட்டின் குழந்தையை, சக்ரவர்த்தி தன் பெரும் செல்வமாகவே கருதினார்!
துரதிர்ஷ்டவசமாக அரண்மனையில் உள்ள மற்ற சீமாட்டிகள் போல, பெரிய இடத்தைச் சேர்ந்தவள் அல்ல கிரிட்சுபோ. அதனால் சக்ரவர்த்தி அவள் மீது அதிக அன்பு வைத்திருந் தாலும் முக்கியமான விசேஷங்களின்போது அவளைத் தன்னுடன், உட்கார வைப்பதே மிகுந்த தயக்கத்துடன்தான். எனினும் நெருங்கிய ஒரு சிநேகிதி மாதிரியே அவள், சக்ரவர்த்தியிடம் நடந்து கொண்டாள்.
இதனால் கோக்கிதென் சீமாட்டி மனம் குமைந்தாள். ‘அடுத்து பட்டத்துக்கு வரும் இளவரசனுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கிழக்குப் புற அரண்மனையில், கிரிட்சுபோவின் பையனைத் தங்க வைப்பார்களோ?’ என்று பயந்தாள் அவள். கிரிட்சுபோவுடன் நெருக்கமாக இருப்பதால், கோக்கிதென் சீமாட்டி, தன் மீது கோபம் கொள்வாளோ என்ற பயம் சக்ரவர்த்திக்கும் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் அரண்மனையில் உள்ள சீமாட்டிகளில் சிலர், கிரிட்சுபோவை மட்டம் தட்டத் தொடங்கினர். இதனால், தனக்குக் கிடைத்த மரியாதை மற்றும் பரிசுப் பொருள்கள் ஆகிய எல்லாமும் தன்னை அவமரியாதை செய்வதாக கிரிட்சுபோவுக்குத் தோன்றியது. அதனால் கவலை கொண்ட அவள் உடல் மெலிந்து, சோர்வடைந்தாள்.
பெரிய அரண்மனையின் ஓரத்திலிருந்த மாளிகையில் கிரிட்சுபோ வசித்தாள். அங்கிருந்து அவள் தினமும் சக்ரவர்த்தியின் தனியறைக்குப் போய் வருவது மற்ற சீமாட்டிகளுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது. அதனால், அவர்கள் கிரிட்சுபோவை பல வகையிலும் தொல்லைப் படுத்தினர். அதன் ஒரு கட்டமாக, நீண்ட நாட்களாக கொரோதைனில் வசிக்கும் பெரிய சீமாட்டியை… அங்கிருந்து கிளப்பி, கிரிட்சுபோவின் மாளிகைக்கு அருகில் தங்க வைத்தனர். இது, கிரிட்சுபோவுக்கு ஒரு புதிய எதிரியை சம்பாதித்துக் கொடுத்தது!
இளவரசனுக்கு மூன்று வயதானது. வருங்கால மன்னனான இளவரசனுக்கு உரிய மரியாதை மற்றும் ஆடம்பரத்துடன் கால்சட்டை அணிவிக்கும் சடங்கு நடைபெற்றது. அதையொட்டி பரிசுகளும் பட்டாடைகளும் வாரி இறைக்கப்பட்டன. பலரிடமிருந்தும் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், எல்லாரும் அழகான அந்த இளவரசனை வாழ்த்திப் பாடவும் போற்றவும் தவறவில்லை!
அந்த வருட வேனிற் காலத்தில், கிரிட்சுபோவின் உடல் நிலை மோசமானது. எனவே, தன் தாய் வீடு செல்ல சக்ரவர்த்தியிடம் அனுமதி கேட்டாள் அவள். "இன்னும் கொஞ்ச