Marma Maaligai
()
About this ebook
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Read more from Kottayam Pushpanath
Mohiniyin Kaadhal Rating: 4 out of 5 stars4/5Sakasa Mohini Rating: 0 out of 5 stars0 ratingsMohini Koyil Rating: 5 out of 5 stars5/5Naaga Salangai Rating: 5 out of 5 stars5/5Mohini Silai Rating: 3 out of 5 stars3/5Kaadhal Mandhiram Rating: 0 out of 5 stars0 ratingsMohini Rating: 5 out of 5 stars5/5Deva Mohini Rating: 4 out of 5 stars4/5Pei Bungalow Rating: 4 out of 5 stars4/5Mohiniyattam Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Devathai Rating: 0 out of 5 stars0 ratingsBrahmaratshas Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Muzhakkam Rating: 4 out of 5 stars4/5Vennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsMaya Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMohini Illam Rating: 0 out of 5 stars0 ratingsIrave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Aabathanavargal Rating: 0 out of 5 stars0 ratingsThaandavam Rating: 5 out of 5 stars5/5Onbathavathu Ward Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Mohini Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsPathilukku Pathil Rating: 3 out of 5 stars3/5Vaa! Arugil Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsDeva Narthagi Rating: 5 out of 5 stars5/5Irandavathu Murai Rating: 0 out of 5 stars0 ratingsNalliravu Malligai Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Illatha Manithan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Marma Maaligai
Related ebooks
Koodalazhahi - Part 1 Rating: 5 out of 5 stars5/5Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Pon Magal Vanthal Rating: 5 out of 5 stars5/5Rajapudhana Ilavarasi Rating: 3 out of 5 stars3/5Thulli Varukuthu Vel Rating: 0 out of 5 stars0 ratingsNandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Athimalai Devan - Part 2 Rating: 2 out of 5 stars2/5Padagu Veedu Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsRanga Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsAthirshtakkaatru Rating: 5 out of 5 stars5/5Thevar Koyil Roja! Rating: 0 out of 5 stars0 ratingsPallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsPathilukku Pathil Rating: 3 out of 5 stars3/5Aranmanai Devathai Rating: 0 out of 5 stars0 ratingsMacedonia Maaveeran Rating: 0 out of 5 stars0 ratingsAanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 1 Rating: 5 out of 5 stars5/5Athimalai Devan - Part 3 Rating: 5 out of 5 stars5/5Suthanthira Vengai Rating: 5 out of 5 stars5/5Ainthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Krishnadaasi Rating: 5 out of 5 stars5/5Nithilavalli Rating: 0 out of 5 stars0 ratingsSethupandhanam Rating: 5 out of 5 stars5/5Pei Bungalow Rating: 4 out of 5 stars4/5Aakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsThittivaasal Marmam Rating: 5 out of 5 stars5/5Mangalathevan Magal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Marma Maaligai
0 ratings0 reviews
Book preview
Marma Maaligai - Kottayam Pushpanath
http://www.pustaka.co.in
மர்ம மாளிகை
Marma Maaligai
Author:
கோட்டயம் புஷ்பநாத்
Kottayam Pushpanath
Translated by:
சிவன்
Sivan
For other books
http://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
சில வார்த்தைகள்...
மாந்திரீக நாவல்கள் மூலமாகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர் திரு. கோட்டயம் புஷ்பநாத். ஆனால், மலையாள மொழியில் அவர் பன்முகம் கொண்ட எழுத்தாளர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக திகில், மர்மம் மற்றும் துப்பறியும் கதைகளை எழுதிப் புகழ் பெற்றவர். மலையாள மொழியில் தற்போது க்ரைம், ஆக்ஷன், மர்மம், துப்பறியும் கதைகள் என்று எழுதும் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் பலர் இவரைக் குருநாதராக மதிக்கிறார்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்களில் ஐம்பது சதவிகிதத்தினரை நான் சந்தித்திருக்கிறேன்.
கோட்டயம் புஷ்பநாத் அவர்கள் எழுதாத ஜனரஞ்சகப் பத்திரிகைகளே மலையாள மொழியில் இல்லையென்று சொல்லலாம். அது மட்டுமின்றி, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக மலையாளத்தில் எழுதிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
93ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்பு அனுமதிக்காக மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு. தகழி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது சாவி வார இதழில் கோட்டயம் புஷ்பநாத் எழுதி, நான் மொழிபெயர்த்த ‘மோகினி' நாவலின் பைண்ட் செய்யப்பட்ட தொகுப்பு என்னிடம் இருந்தது. அதில் தன் கையெழுத்துப் போட்ட தகழி கூறினார்: நிறைய நாவல்களை எழுதியிருக்கிற கவனத்துக்கு உரிய எழுத்தாளர். நல்லவர்!
என்று. நான் வியப்பு அடைந்தேன்.
கோட்டயம் புஷ்பநாத் ஜனரஞ்சகக் கதைகளை எழுதுவதில் புகழ் பெற்றிருந்தாலும் அவர் விரும்பிப் படிப்பது பெரும்பாலும் மலையாள மொழியின் இலக்கியத் தரமான புத்தகங்களைத்தான். ஜனரஞ்சகப் பாணியில் - வியாபார நோக்கில் எழுதினாலும் தனது கதைகளில் விரசத்தைப் புகுத்தாத எழுத்தாளர் திரு. புஷ்பநாத். அவரது எல்லா நாவல்களிலும் இந்தத் தன்மையைக் காணலாம். பாலுணர்வை மையமாக்கி எழுதும் எழுத்தாளர்களின் பட்டியலில், கோட்டயம் புஷ்பநாத்தின் பெயர் இடம் பெற்றதில்லை. நான் குறிப்பிட்டதற்குச் சிறந்த உதாரணம் இந்த ‘மர்ம மாளிகை.’
சுவாரஸ்யத்துக்காகச் சேர்க்கப்படும் பாலுணர்வு விஷயங்கள் இல்லாமலேயே, திடுக்கிடும் திருப்பங்கள் மற்றும் சம்பவங்களின் மூலமாக அவர் கதையைக் கொண்டு செல்வதில் தேர்ந்தவர்.
தமிழுக்காகவென்றே அவர் எழுதிய ஒரு சில நாவல்களில், வெளியீட்டாளர்களின் விருப்பத்தை ஒட்டி பாலுணர்வு கலந்த சம்பவங்கள் இடம்பெற வேண்டும் என்று நான் கூறியபோது, மறுக்காமல் அப்படிச் செய்திருக்கிறார். அதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.
பாலுணர்வு விஷயங்களை அதிகம் கலக்காமல் எழுதியதாலேயே, கோட்டயம் புஷ்பநாத்தின் நாவல்களை பெண் வாசகிகள் உட்படப் பெரும்பாலோர் கேரளத்தில் இன்றும் விரும்பிப் படிக்கின்றனர்.
இந்த மர்மமாளிகை தொடராக வெளிவராமல் நேரடியாகப் புத்தகமாகும் நாவல். நாவலை மொழிபெயர்க்க அனுமதி அளித்த திரு. கேட்டயம் புஷ்பநாத், சிறந்த முறையில் வெளியிடும் கலா நிலையம் திரு. பூரீனிவாசன், வாங்கி வாசித்து ஆதரிக்கும் வாசகப் பெருமக்கள், புத்தகக் கட்டமைப்பில் பங்கு கொண்ட தொழிலாளத் தோழர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகிறது.
தோழமையுடன்
சிவன்
சென்னை 600 078
மர்ம மாளிகை
1
அந்த இடத்தைப் பத்தித்தான் சொன்னேன்!
அந்த மனிதர் நண்பரிடம் சொன்னார்.
ஸஹ்யாத்திரி மலைத் தொடரின் வடக்குப் பகுதியிலுள்ள மலைச்சரிவுக்கு அவர்கள் வந்து சேர்ந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. எந்த விதமான நோக்கமும் இன்றி சும்மா சுற்றிப் பார்ப்பதற்காக வந்தார்கள் அவர்கள் இருவரும். ஒருவர் சரித்திர ஆராய்ச்சியாளர். மற்றவர் விஞ்ஞானி சமீபத்தில் மாத இதழ் ஒன்றில் வெளியாகியிருந்த ஒரு செய்தியின் அடிப்படையில் அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர்.
செய்தி இதுதான்!
மலைகளின் அடிவாரத்தில் நாகரிகத்தில் பண்படாத காட்டு மனிதர்கள் வாழ்கின்றனர். அவர்களுடன், தென்பகுதியிலிருந்து வந்த மனிதர்கள் சிலரும் வசிக்கின்றனர். அங்கு ஏராளமான நிலம் இருக்கிறது. எனவே, அங்கிருக்கும் ஒவ்வொருவரின் வீடும் மிகுந்த இடைவெளியுடன் காணப்படுகின்றன. அந்த மலையடி வாரத்தை ஒட்டி வட்டமாகச் செல்லும் அகலம் குறைந்த பாதையில் மாட்டுவண்டிகள் செல்கின்றன. இரவு நேரத்தில் அந்த வழியாகப் பயணம் செய்பவர்கள் மிகவும் குறைவு. வெகுகாலமாக அந்த இடத்தைப் பற்றிச் சொல்லப்பட்டுவரும் நம்பமுடியாத கதைகள் அவர்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. அவை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் கதைகளும்கூட. மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்திருந்த சுற்றுப்பட்டுக் கிராமவாசிகள் அவற்றையெல்லாம் 'உண்மை’யென்று கண்ணை மூடி நம்புகின்றனர்.
இருநூறு வருடங்களுக்கு முன் 'ஸால்வின்’ என்ற வெள்ளைக்காரர் ஒருவர் அந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இடத்தில் பிரம்மாண்டமான பங்களா ஒன்றைக் கட்டினார்.
அந்த பங்களாவுக்குத் தேவையான பொருட்களைக் கிழக்குப் பகுதியிலிருந்து கொண்டு வந்தார். மலையின் பக்கப் பகுதிகளைச் சமப்படுத்தி, வாகனங்கள் கடந்துவரத் தக்க வகையில் அவர்தான் முதன் முதலாகப் பாதை அமைத்தார். கட்டட வேலை முழுமை அடைந்ததும் அந்தப் பாதையை வெள்ளைக்காரர் சரிவரப் பராமரிக்காமல் விட்டுவிட்டார். வேறு எவரும் அந்தப் பாதையைப் பயன்படுத்தச் சந்தர்ப்பமும் இல்லாமல் போனது.
இதன் பின்னணியிலிருந்த ரகசியத்தைப் பற்றி ஏராளமான கதைகள், வதந்திகள் உலவுகின்றன.
ஸால்வின் துரைக்கு மனைவி ஒருத்தி இருந்ததாகவும் சொல்கிறார்கள். அவள் வெள்ளைக்காரிதான் என்றும், இல்லை நம் ஊர்க்காரிதான் என்றும் ஆட்கள் கட்சி கட்டிக்கொண்டு விவாதிக்கவும் செய்கின்றனர். ஆனால், இளந்தலைமுறையினர் இதைப் பற்றியெல்லாம் அதிகமாகப் பேசிக் கொள்வது இல்லை. ஏறத்தாழ அவர்கள் அதையெல்லாம் மறந்துவிட்டது மாதிரித்தான். அந்த மலையடிவாரப் பகுதியில் தங்கப் புதையல் இருப்பதாகவும் அதைக் கண்டுபிடிப்பதற்காக துரை வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் செய்திக்கு ஆதாரமாக அந்த மலைச்சரிவின் பல பகுதிகளில் பெரிய பெரிய குழிகள் இன்றும் உள்ளன. அந்தக் குழிகளிலிருந்தெல்லாம் தங்கம் எடுக்கப்பட்டு விட்டதாகவும் அந்தப் பகுதியிலுள்ளவர்கள் நம்புகின்றனர். ஆனால், கிணறு போல் மிகவும் ஆழமாக இருந்த அந்தக் குழிகளுக்குள் இறங்க எவருக்குமே தைரியம் ஏற்படவில்லை. அதற்குள் தங்கப் புதையலைப் பாதுகாத்த பூதங்கள் குடியிருக்கலாமென்று நம்பிப் பயந்தனர். இன்னும் சொல்லப் போனால், தங்கப் புதையலை எடுத்துவிட்ட குழிகள் வேறு. பூதங்கள் ஒருவேளை கோபத்துடன் இருக்கலாம்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால் அங்கு ஒரு சம்பவம் நடந்தது.
அது அங்கிருந்த மொத்தப் பேரையும் நடுங்க வைத்தது.
அத்துடன் எப்படிப்பட்டவரும் நம்ப முடியாத கதைகளுக்குக் கூட உயிர் கிடைத்தன. அதுவரை 'கட்டுக்கதைகள்' என்று நினைக்கப்பட்டவை உண்மைதான் என்று நம்புமளவு பேசப்பட்டன. இளைஞர்கள் மத்தியில் பெரியவர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். அதற்குக் காரணம் அவற்றை அந்தப் பெரியவர்களே அவிழ்த்துவிட்டதுதான்.
சம்பவம் இதுதான்.
அது ஒரு வெள்ளிக்கிழமை,
கிராமத்தில் வெகுநாளாக வசித்து வரும் டேவிட் என்கிற விவசாயி (இவர் முன்னொரு காலத்தில் ரயில்வேயில் டிரைவராக இருந்தார். வேலையிலிருந்து ரிட்டயர்டு ஆனதும் குடும்பத்துடன் இந்தக் கிராமத்துக்குக் குடிபெயர்ந்தார். நகரில் அவருக்கென்று ஐந்து சென்ட் நிலமிருந்தது. அது அவர் அப்பா வழிச்சொத்து. அதையும் விற்று விட்டு கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். டேவிட் ஆங்கிலோ இந்தியர். ஜெயின் என்கிற மகள் ஒருத்தியும், மனைவியும்தான் அவரது குடும்பம்) இரவு நேரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்தவராக இருந்ததால் டேவிட் எப்படிப்பட்ட நள்ளிரவிலும் நடந்து வருவது வழக்கம். அன்றுவரை அவர் அதைப் பயப்படக்கூடிய ஒரு விஷயமாக நினைக்கவில்லை. அதனால் அவரே ஓர் ‘ஆவி மாதிரித்தான்’ என்று ஊரார் நினைத்தனர்.
துரை வசித்த பங்களாவை நெருங்கியதும் டேவிட் நின்றார். காரணம், மழை அதற்குள் வலுத்துவிட்டதுதான். கடப்பாரையின் கனத்தில் மழைத்துகள் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. சத்தமாக நடக்கவே முடியவில்லை. மழை விடுவதுவரை அந்தக் கட்டடத்தில் ஒதுங்கி நிற்கலாம் என்று நினைத்தார். மழைவிட்ட பிறகு வீட்டுக்குப் போகலாம்.
துரை தங்கியிருந்த பங்களாவை டேவிட் ஒருதடவை பார்த்தார். அங்கு ஒரே இருட்டாக இருந்தது. அந்த இடத்தில் ஒரு பங்களா இருக்கிறது என்பதே தெரியவில்லை. மின்னல் வெட்டியபோதுதான் பங்களா தட்டுப்பட்டது.
மறுபடியும் ஒரு மின்னல் வெட்டியது.
மின்னலின் கிளைகள் பாம்புகளைப் போல் மலை உச்சியில் ஆழ்ந்து இறங்கிக் கொண்டிருந்தன. அத்துடன் பூமியே அதிர்வது போன்ற இடிமுழக்கம். மலைச் சிகரங்கள் பெயர்ந்து தலையில் விழுந்துவிடுமோ என்றுகூட டேவிட் ஒருகணம் பயந்தார்.
அந்த மின்னலின் வெளிச்சத்தில் அவர் பங்களாவை முழுமையாகப் பார்த்தார். அதன் இருப்பிடத்தையும் தெரிந்து கொண்டார். எப்படியும் அந்த வீட்டுக்குள் நுழைவது என்று முடிவு செய்தார். டேவிட்டை அந்த அளவுக்கு ஊக்கப்படுத்தியது மற்றொரு விஷயம். அங்கிருந்து குறைந்தது பத்து கிலோ மீட்டராவது நடந்தால்தான் அவரது வீட்டை அடைய முடியும். மழையும் சுலபத்தில் நிற்பதாகத் தெரியவில்லை. ஆகவே அவருக்கு இருந்த ஒரே வழி அதுதான்.
அதே நேரம் அந்தக் கட்டடத்தைப் பற்றியும், அந்தப் பகுதியைப் பற்றியும் அவர் ஏராளமான கதைகள் கேள்விப் பட்டிருந்தார். அந்த நேரத்தில் அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அவர் மனத்தில் வரிசைக்கிரமமின்றித் தெளிவடையவும் செய்தன.
ஸால்வின் துரை, துரைசானியம்மாவைக் கல்யாணம் செய்வதற்கு முன் அந்த பங்களாவில் எவ்வளவோ விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஆயிரத்தோரு அரபுக் கதைகளில் இடம் பெறும் ஷாரியர் சக்ரவர்த்தியைப் போன்ற ஒரு மனிதராகவே ஸால்வின் துரையை அங்கிருப்பவர்கள் விவரித்திருந்தனர்.
ஸால்வின் தன் வாழ்வின் இளமைப் பருவத்திலேயே அங்கு வந்துவிட்டாராம். அப்போது அவருக்கு சுமார் முப்பத்து ஐந்து வயது இருக்கலாம். திடகாத்திரமான உடம்பு. எப்படிப் பட்டவரையும் கவர்ந்துவிடும் கண்கள். அத்துடன் அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக ஒரு கூட்டமும் இருந்தது. அவர்கள் எல்லோரும் துரை கொண்டு வந்திருந்த நோட்டுக் கற்றைகளின் வெளிச்சத்தில் பார்வையை இழந்திருந்தனர்.
ஒவ்வொரு நாளும் அவருக்கு முதலிரவாகவே இருந்தது. எவ்வளவு தொலைவிலிருந்தாலும் அழகான பெண்களைக் கடத்திக் கொண்டுவந்து, துரைக்குக் காணிக்கையாக்குவது அந்த அடியாட்களின் முக்கிய வேலையாக இருந்தது. அந்த விஷயத்துக்குச் செலவு செய்வதில் துரை கொஞ்சம்கூடத் தயங்கியதில்லை. இப்படி துரையின் பசிதீர்க்கக் கொண்டு வரப்படும் பெண்கள் அதன்பிறகு என்ன ஆனார்கள் என்று எவருக்கும் தெரியவே இல்லை. கொண்டு வந்தவர்களேகூட மறுபடி அவர்களைப் பார்த்ததில்லை என்று பேசிக் கொள்கிறார்கள்.
துரை, அவர்களையெல்லாம் என்ன செய்தார் என்பது இன்றும்கூட விடை கிடைக்காத ஒரு கேள்விதான்.
துரை, அவர்களைக் கொலை செய்திருப்பாரா?
அவர் காப்பாற்றி வந்த மகத்தான ரகசியம் எதுவோ ஒன்று வெளியே போகாமல் இருப்பதற்காக அந்தப் பெண்களைக் கொன்று எரித்திருப்பாரோ?
எத்தனையோ பேர், எப்படியோவெல்லாம் பேசிக் கொண்டாலும் இன்றுவரை சரியான விடையோ விளக்கமோ கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
ஒருதடவை