Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karkala Kanavu
Karkala Kanavu
Karkala Kanavu
Ebook110 pages1 hour

Karkala Kanavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580110001650
Karkala Kanavu

Read more from Anuradha Ramanan

Related to Karkala Kanavu

Related ebooks

Reviews for Karkala Kanavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karkala Kanavu - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    கார்கால கனவு

    Kaarkala Kanavu

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    கார்கால கனவு

    1

    தன்னால படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் தானே கவனிக்கறதுக்குப் பதிலாத்தான் கடவுள், தாயைப் படைச்சிருக்கான். தாயும், தன் மகனோட ஆயுசு முழுக்க வர முடியாதுங்கறதுக்காகத்தான் மனைவியப் படைச்சிருக்கான். என்னைப் பொறுத்தவரைக்கும் தாயும், பெஞ்சாதியும்’ தெய்வத்துக்கு சமம்...

    முதல் நாள் அரண்மனைக் கிளி சினிமாவில் ராஜ்கிரண் இந்த வசனத்தைப் பேசிய போது, ஈரம் படர்ந்த விழிகளை, கைக்குட்டையால் ஒற்றிக் கொண்டவள்தான் மதுமிதா.

    தியேட்டரை விட்டு வெளியே வந்ததும், அந்த மனசு காணாமல் போனதுதான் விந்தை.

    பிரணவன், தலையில் கை வைத்தபடி உட்கார்ந்திருக்கிறான்.

    ராஜ்கிரணுக்கு அனுபவம் போதாது. இதோ மதுமிதா மாதிரி ஒரு பொண்டாட்டி வாய்த்திருந்தால் தெரியும்.

    ஒரு நாளா- இரண்டு நாளா. திருமணமாகி ஏழு வருடமாகி விட்டது. ஐந்து வயசில் கண்ணனும், மூன்று வயசில் சுஜாவும் இருக்க மதுமிதா- ஒன்றரை வயசுக் குழந்தையைப் போல அடம் பிடிக்கிறாள்.

    பிரணவனின் அவஸ்தையைக் கண்டு, பெற்ற தாய் எத்தனையோ கண்ணீர் சிந்தியிருக்கிறாள்.

    இருக்காதா பின்னே...

    இந்தத் திருமணப் பேச்சு அடிப்பட்ட போதே - அவள் தலை தலையாக அடித்துக் கொண்டாள்.

    அது ரொம்பப் பெரிய எடம். பொண்ணைப் பார்த்தா ஜாதிக் குதிரை மாதிரி இருக்கு. என் மகன் சாது. ஏதோ வாயில நுழையாத படிப்பெல்லாம் படிச்சிட்டானே தவிர - மனசளவுல ரொம்பக் கோழை. பொம்பிளைங்கள நிமிர்ந்து பார்த்து நாலு வார்த்தை பேசினதில்லை. நம்ம ஊர்ப் பக்கத்துல எட்டாங்கிளாஸ், பத்தாங்கிளாஸ் படிச்சிட்டு, வயிறு நிறையச் சாப்பிட்டு, வீடு கொள்ளாத வேலையச் செய்யற பொண்ணுங்க எத்தனை பேர் இருக்காங்க. அதுல ஒண்ணைப் பார்த்து...

    பிரணவனுக்கு அப்பா இல்லை, ஒரளவு சொத்துப் பத்தை வைத்து விட்டு, அவனுக்கு விவரம் தெரிவதற்கு முன்பே கண் மூடி விட்டார். வளர்த்ததே அம்மாவும், தாய் மாமனும்தான்.

    மாமனுக்கு மருமகன் மீது ஆசை அதிகம். இந்த மட்டும் பய அதிருஷ்டசாலி. பெரிய தொழிலதிபர் தன் ஒரே பொண்ணை, நம்ம வீட்டுப் பையனுக்குத்தான் தருவேன்னு ஒத்தைக் காலுல நிக்கறார். பொண்ணும் படிச்சவ. பார்க்க மொழு மொழுன்னு பொம்மை மாதிரி இருக்கா…"

    வேளை என்று வந்து விட்டால்- விளக்குமாறுகூடக் குத்து விளக்கு மாதிரிதான் தோற்றமளிக்கும் போல…

    மதுமிதா அழகிதான். புத்திசாலிதான். அவர்கள் குலத்தில் இல்லாது- குடும்பத்தில் இல்லாது- கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவள்தான். இவள் தந்தை பரசுராம்- தனது கோடிக்கணக்கான சொத்தில் சரிபாதியை எழுதி வைத்திருக்கிறார். மற்றொரு பாதி ஒரே மகனுக்கு...

    இப்படி எல்லாவற்றையுமே ஒளிக்காமல், மறைக்காமல் பேசிய அவர், மகளின் பிடிவாத குணத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். வாய்- ரப்பர் வாய் என்பதையும்- இது வரையில் அது யாரையும் விட்டு வைத்ததில்லை என்பதையும் சொல்லியிருக்கலாம்.

    தனது வியாபார புத்தியை- மட்டச் சரக்கை மலிவு விலையில் தள்ளிவிடும் சாமர்த்தியத்தை, மகள் திருமண விஷயத்திலும் காட்டி விட்டார்.

    இதில் கொடுமை என்னவென்றால்- பிரணவன் நூற்றுக்கு நூறு பெண்டாட்டியிடம் பிரியமாகவே நடந்து கொண்டும் அவளது கோபத்துக்கு ஆளாவதுதான்…

    அதுவும் மூன்று வருடங்களாய் மதுமிதாவிற்கு எப்பொழுது கோபம் வரும்; எதற்காக வரும் என்றே சொல்ல முடியாமல் போனதுதான்…

    திருமணமான சில நாட்களிலேயே அவள், எல்லாப் பணக்கார வீட்டுப் பெண்களையும் போல, கணவனையும் அழைத்துக் கொண்டு போய்ப் பிறந்த வீட்டோடு தங்கிவிட முயற்சித்தாள்.

    பிரணவன்- தன் மாமனார் அளவு இல்லை என்றாலும் நடுவாந்திரமாய் ஒரு மைதா, ரவை தொழிற்சாலை வைத்திருக்கிறான். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிற அளவுக்குத் தரமான பருப்பு வகைகளை மொத்தமாய் வாங்கிச் சுத்தம் செய்து பணம் சம்பாதிக்கிறான்.. ரைஸ் மில் இருக்கிறது...

    போதும் என்று நினைத்தால் போதும்...

    ஆனால் மதுமிதாவுக்குப் போதவில்லை…

    அப்பாவின் அரண்மனை வீட்டிற்கும்- இந்த இரண்டு கிரவுண்டு பங்களாவுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களை எண்ணத் தொடங்கினாள்.

    இரண்டு கார் வைத்திருக்கிற கணவனை விட, பத்து கார் வைத்திருக்கும் அப்பாதான் உயர்வாகத் தெரிந்தார்.

    அடிக்கடி அங்கே போய்க் கண்ணைக் கசக்கியதால் பரசுராம், மாப்பிள்ளையை அப்படியே தன் பக்கம் நகர்த்திக் கொள்ள முயற்சித்தார்.

    "மாப்பிள்ளை... இனிமே உங்க ஃபாக்டரி வேற, நம்ம ஃபாக்டரி வேறயா... மதுவுக்கு அவ அம்மாவை விட்டுப் பிரிஞ்சு இருந்ததே இல்லை... பேசாம நீங்களும் நம்ம வீட்டோட... வேணுமானா நம்ம காம்பவுண்டுக்குள்ளேயே ஒரு பங்களா கட்டித் தரச் சொல்லிடறேன்…’

    ஏன், நீங்களும் அத்தையும்தான் எங்ககூட வந்து இருந்துடுங்களேன் மாமா...

    பிரணவன் வெகு சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனாலும் மதுமிதா, அப்பாவிடம் அந்த வார்த்தையில் நையாண்டி கலந்திருப்பதாகச் சொல்லி விசிறி விட்டாள்.

    என்னமோ தானே உழைச்சு முன்னுக்கு வந்தவர்... சாதுன்னு சொன்னீங்களே... இப்பப் பார்த்தீங்களா.. எத்தனை கிண்டல்னு. இவர் தனியா இருந்தாக்கூட திருத்திடலாம்பா... கூடவே அந்தக் கிழவி இருக்கு பாரு... எமன்…

    எந்தக் காரணத்தைக் கொண்டும் மாமனார் வீட்டோடு தங்காமல், தன் தொழில், தன் வீடு, தன் குடும்பம் என்று பிரணவன் இருந்ததே மதுமிதாவின் எரிச்சலுக்குக் காரணமாய்...

    போதாக்குறைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு சுஜா பிறந்த போது ஏற்பட்ட அந்த இழப்பு வேறு மதுவின் தாழ்வு மனப்பான்மையை விசுவரூபமெடுக்க வைத்து விட்டது.

    குழந்தை கருவில் இருக்கும் போதே- கருப்பையின் இன்னொரு பகுதியில் கட்டி… குழந்தை நல்ல விதமாய் இருந்ததே பெரிய

    Enjoying the preview?
    Page 1 of 1