Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vetri Koottani
Vetri Koottani
Vetri Koottani
Ebook79 pages48 minutes

Vetri Koottani

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580111001614
Vetri Koottani

Read more from Arnika Nasser

Related to Vetri Koottani

Related ebooks

Reviews for Vetri Koottani

Rating: 2 out of 5 stars
2/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 2 out of 5 stars
    2/5
    I t s o k s t o r y

Book preview

Vetri Koottani - Arnika Nasser

http://www.pustaka.co.in

வெற்றிக் கூட்டணி

Vetri Koottani

Author :

ஆர்னிகா நாசர்

Arnika Nasser

For more books

http://www.pustaka.co.in/home/author/arnika-nasser

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

வெற்றிக் கூட்டணி

1

பெசன்ட் நகரில் அந்த ஆடம்பரமான பங்களா அமைந்திருந்தது. பங்களாவின் மூன்றாவது மொட்டை மாடியில் காளான் போல் டிஷ் ஆண்ட்டெனா பூத்திருந்தது. பங்களாவைச் சுற்றி பூஞ்செடிகள் மாநாடு. ரங்கோலிப் பொடி தூவப் பெற்ற பருவப் பெண்ணின் முகம் போல் காட்சியளித்தது பங்களா.

போர்டிகோவில் பெர்ராரி காரும் ஓபெல் ஆஸ்ட்ரா காரும் அணிவகுத்திருந்தன.

வரவேற்பறை வெல்வெட் குஷன் சோபாவில் அமர்ந்திருந்தார் கிருஷ்ணவர்த்தன், வயது 62. சுத்தத் தமிழன். ஆனால் கன்னடத்தில் போய் பிரபல நடிக ரானார். தொடர்ந்து 165 படங்கள். பின் மண்ணின் மைந்தர்கள் பிரச்சனை எழ நடிப்புக்கு டாட்டா காண்பித்து விட்டு சென்னை வந்து செட்டில் ஆனார்.

கிருஷ்ணவர்த்தனின் திருமணம் மிகவும் சுவாரசியமானது.

யாராலும் உருவ வேற்றுமை கண்டுபிடிக்க முடியாத முடியாத இரட்டைச் சகோதரிகள் லாவண்யா, தீட்சண்யா. பெங்களூர் தொழிலதிபரின் மகள்கள். இருவருமே கிருஷ்ணவர்த்தனை தீவிரமாக காதலித்தனர், வர்த்தனும் இருவரையும் காதலித்தார்.

கன்னடத் திரை உலகமே அசர -

ஒரே மனையில் இருவருக்கும் மங்கல நாண் பூட்டினார் வர்த்தன்.

சினிமா நடிகைகள் எத்தனையோ பேரை படுக்கையில் சந்தித்தாலும் வர்த்தன் இரட்டைச் சகோதரிகளை பின்னும் தொடர்ந்து நேசிக்கிறார்.

இரட்டை மனைவிகளுடன் ஒரு எழுதாத ஒப்பந்தம் செய்து கொண்டார் வர்த்தன்.

அது-

இரட்டையருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் இருவருமே. குழந்தையின் உண்மைத்தாய் யார் என்ற உண்மையை சாகும்வரை இருவருமே கூறக் கூடாது. இவள் லாவண்யா மகள், இவள் தீட்சண்யா மகள் என்ற பிரிவினை வந்துவிடக் கூடாது. மொத்தத்தில் பிறக்கப் போகும் குழந்தைகள் இரட்டைச் சகோதரியின் மகவுகள் அவ்வளவுதான்.

மல்லிகையும் விஜிலாவும் பிறத்தனர்.

லாவண்யாவும் தீட்சண்யாவும் கர்ப்பக் காலத்தில் கூட நடித்தனர். இவர்களது நடிப்பைக் கண்டு; வேலைக்காரர்கள் கூட குழம்பினர்.

இருவருக்குமே பிரசவம் காஷ்மீரில்தான் நடந்தது.

மல்லிகை, விஜிலாவின் சான்றிதழ்கள் சேப்டி லாக்கரில் பத்திரமாக தூங்கின.

மல்லிகை இளம் வயதில் உண்மையான அம்மாவை காட்டச் சொல்லி அடம்பிடித்திருக்கிறாள். ஆனால் மல்லிகைக்கு சிறு அடிபட்டாலும் இரு தாய்களின் கண்களிலும் இரத்தக் கண்ணீர். இரண்டு தாயிடமும் தாய்ப்பால் குடித்த உதடுகள் நாளடைவில் நதிமூலத்தை தேட மறந்தன.

மல்லிகைக்கும் விஜிலாவுக்கும் மாறுபட்ட முகங்கள் ஆனால் இருவரின் மீதும் வித்தியாசம் காட்டாத பாசமழை.

-ஃபைனான்ஸியல் எக்ஸ்பிரஸ் வாசித்துக் கொண்டிருந்த வர்த்தன் நிமிர்ந்தார்.

கோயி-லுக்குச் சென்று திரும்பியிருந்தனர் நான்கு பெண்களும்,

இரட்டைச் சகோதரிகள் அடர்பச்சை நிற பட்டுச் சேலையில்.

மல்லிகையும் விஜியாவும் ரோஸ் நிறமும் யானைத் தந்த நிறமும் கலந்த பட்டுச் சேலைகளில்,

மங்களகரமான காட்சி அமைப்பில் நெக்குருகினார் வர்த்தன்.

நான்கு தேவதைகள் எங்க போயிட்டு வருது?

மல்லிகைக்கு பிறந்ததாள். அம்மன் கோயிலுக்கு போயிட்டு வர்ரம்!

சூரியனித்தார் வர்த்தன்.

என் இனிய கன்னுக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

என்னை ஆசீர்வதிங்க டாடி! காலில்

Enjoying the preview?
Page 1 of 1