Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paraparapu Poogambam
Paraparapu Poogambam
Paraparapu Poogambam
Ebook71 pages24 minutes

Paraparapu Poogambam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateOct 21, 2016
ISBN6580111001573
Paraparapu Poogambam

Read more from Arnika Nasser

Related to Paraparapu Poogambam

Related ebooks

Related categories

Reviews for Paraparapu Poogambam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paraparapu Poogambam - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    பரபரப்பு பூகம்பம்

    Paraparapu Poogambam

    Author :

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books
    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    பரபரப்பு பூகம்பம்

    முன்கதை

    3.4.1919, ஜாலியன்வாலாபாக், மாலை மணி 4.30

    அன்று பைசாகி பண்டிகை.

    தமிழருக்கு பொங்கல் பண்டிகை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பஞ்சாபியருக்கு பைசாகி பண்டிகை.

    பண்டிகை நாளிலும் ஆங்கிலேயர் தடை செய்திருந்த கறுப்புநிற தலைப்பாகையை அணிந்திருந்தனர் சீக்கியர்கள்.

    பொற்கோயிலில் ஏகமாய் கூட்டம்.

    சில பிடிவாத சீக்கியர்கள் குரு கிரந்த் சாகிப்பின் வரிகளை வாசித்துக் கொண்டிருந்தனர்.

    ‘கடவுள் தகுதியில்லாத மனிதரையும் மன்னிக்கிறார்

    அனைவரையும் தனக்குள் அரவணைக்கிறார்

    குருவின் படகைச் சுற்றி பெர்ரி நடுகிறார்?’

    தீவிரவாத சீக்கியரோ பாய் பகவன் சிங்கின் கவிதைகளை உரக்க உச்சரித்தனர்.

    "வெள்ளையரைக் கொல்வோம்; அந்த சூழ்ச்சிக்கார அந்த ஐரோபியர்களை கொல்வோம்!

    கொன்று அவர்களது எலும்பும் மிஞ்சாமல் பார்த்துக் கொள்வோம். நாடு முழுவதும் வேட்டையாடுவோம்!

    தேவாலயங்களுக்கு தீ வைப்போம். ஐரோப்பிய பெண்களையும் விடமாட்டோம்!

    ஒரு சிறு இரக்கம் கூட அவர்களுக்கு காட்டக்கூடாது. அவர்களுக்கு நாம் புகட்டும் பாடம் பல தலைமுறைகளுக்கு மறக்கக் கூடாது

    ஆறுகளை வெள்ளையரின் பிணங்களால் நிறைப்போம் தேவைப்பட்டால் இங்கிலாந்துக்கு பயணம் செய்து கொலைகள் தொடர்வோம்!"

    மிக வன்முறையான கவிதை வரிகள்.

    இந்திய பத்திரிகையாளரின் கழுத்தை நசுக்க ஆங்கில அரசு ரெளலட் சட்டம் கொண்டுவந்திருந்தது. யாரையும் எந்த விசாரணையும் இல்லாமல் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் சிறையில் வைக்க அனுமதிக்கும் கறுப்புச் சட்டம் அது

    இந்தச் சட்டத்தை எதிர்த்து பல சீக்கியத் தலைவர்களும் மகாத்மா காந்திஜியும் சிறை சென்றிருந்தனர்.

    ரெளலட் சட்டத்தை வாபஸ் பெறச் சொல்லியும் கைதான தலைவர்களை விடுவிக்கச் சொல்லியும் நாடு முழுவதும் மெளனப் புரட்சி.

    பஞ்சாப்பில் மிகை.

    பொற்கோயிலிலிருந்து சாரை சாரையாய் மக்கள் ஜாலியன் வாலாபாக் பூங்கா நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.

    பஞ்சாப் கவர்னர் டயரிடம், பிரிகேடியர் ஜெனரல் எட்வர்ட் ஹாரி டையர் வாதிட்டுக் கொண்டிருந்தான்.

    மாட்சிமை பொருந்திய கவர்னர் அவர்களே! ஜாலியன் வாலாபாக்கில் தீவிரவாத சீக்கியர்கள் கூடுவதாய் தகவல். அனுமதியுங்கள். சுட்டுத் தள்ளிவிடுகிறேன்!

    ஏற்கனவே மக்கள் கொதிப்படைந்துள்ள இச்சூழ்நிலையில் நீங்கள் உணர்ச்சிவசப்படுதல் தவறு!

    எனக்கு சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் சாதுர்யம் நிறைய உண்டு கவர்னர் அவர்களே!

    டையர் ஆவேசமாக வெளியே வந்தான்.

    100 இந்திய சிப்பாய்கள். 50 ஆங்கிலேய சிப்பாய்கள். கலோனல் ஸ்மித்

    ரெவ்ரன்ட் மெக்கன்ஸி.

    டையர் கூவினான்.

    புறப்படுங்கள் சிங்கங்களே! சிறு நரிகளை அடக்கி விடுவோம்!

    ஜாலியன் வாலாபாக் பூங்கா ஒரு செவ்வகப் பகுதி.

    ஒரே ஒரு வாசல்தான்.

    மூன்று பக்க மதில் சுவர்களும் 15 அடிகளுக்கு மேலே.

    மொத்தம் இருபதாயிரம் சீக்கியர்கள் கூடியிருந்தனர்.

    குழந்தைகளும் தாய்மார்களும் கூட காணப்பட்டனர்.

    ஆனால்

    Enjoying the preview?
    Page 1 of 1