Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannikka Vendum Mannavaney
Mannikka Vendum Mannavaney
Mannikka Vendum Mannavaney
Ebook83 pages40 minutes

Mannikka Vendum Mannavaney

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"மன்னிக்கவேண்டும் மன்னவனே" இது 1980களில் வெளிவந்தது. எத்தனைதான் வறுமையில் இருந்தாலும் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப் பட்டவளுக்கும் மனசு என்று ஒன்றிருக்கிறது தானே. . . அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

- அனுராதா ரமணன்

Languageதமிழ்
Release dateOct 4, 2016
ISBN6580110001543
Mannikka Vendum Mannavaney

Read more from Anuradha Ramanan

Related to Mannikka Vendum Mannavaney

Related ebooks

Reviews for Mannikka Vendum Mannavaney

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannikka Vendum Mannavaney - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    மன்னிக்க வேண்டும் மன்னவனே

    Mannikka Vendum Mannavaney

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    மன்னிக்க வேண்டும் மன்னவனே

    1

    வழக்கமில்லாத வழக்கமாய்... இந்த அலங்காரமும், அனாவசிய லஜ்ஜையும் தன் வயசுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாததாய்த் தோன்றியது வசுமதிக்கு.

    இந்த அலங்காரங்கள் இல்லாவிட்டால் இவள் அழகாய் இருக்க மாட்டாளா என்ன.

    இவளின் சிவப்புத் தோலும் நிமிர்ந்த மார்பும், செதுக்கினாற் போன்ற முகமும், குறுகிய இடையிலிருந்து பாம்புப் படம் போல விரிந்த முதுகும், தம்பூராவின் குடத்தைப் போன்ற கடைசல் பிடித்த இடுப்பிற்குக் கீழ்ப் பகுதியும்.

    முப்பது வயது என்றால் யாராவது நம்புவார்களோ...

    இந்த அழகுக்குப் பவுடரும், ஸ்நோவும் எதற்கு? நீண்டு விரிந்த விழிகளுக்கு மை தீட்டலும், புருவம் எழுத வேண்டிய அவசியமும்தான் எதற்கு?

    இத்தனை நாளும் இதற்கெல்லாம் எந்தவித அவசியமும் இல்லாமல்தான் இருந்தது. பத்துதினங்களுக்கு முன்வரையில்.

    உனக்கு நகையே வேண்டாம்டி...

    'அம்மா அடிக்கடி தன் மகளைப் புகழ்வது போலப் புகழ்ந்து, மறைமுகமாய்த் தனது இயலாமையைச் சொல்லிக் கொள்வாள்...

    இன்று அம்மா இல்லாவிட்டாலும், தாய்க்குத் தாயாய் அவளை வளர்த்த, அண்ணன் மனைவி அலமு இருக்கிறாள்.

    "உன்னை வெறும் கோடாலி , முடிச்சும், குங்குமப் பொட்டுமா நிக்கவச்சுப் பொண் பார்த்தாலும், வர்றவன் கொத்திண்டு போயிடுவான் வசு.

    அப்படிச் சொன்னவள்தான், ராகவன் இவளைப் பெண் பார்க்கவந்த பொழுது இதையும் சொன்னாள்.

    எதுக்கும் கொஞ்சம் பவுடர் போட்டு, பளிச்சுனு சாந்துப் பொட்டு வச்சுக்க. பின்னலைத் தளரப் பின்னி, நிறைய மல்லிப் பூவை வச்சுக்க. உனக்கு, இந்த காலத்துப் பொண்ணுங்களைப் போல டிரஸ் பண்ணிக்கத் தெரியலைன்னா நம்ம ராஜியைக் கேளு. சொல்லித் தருவா.

    ராஜி - அலமுவின் மூத்த பெண். பதினைந்து வயசு, காலையில் எழுந்தது முதல் இரவு வரையில் முகத்தில் ஏதாவது ஒரு க்ரீமைக் குழைத்து, மாற்றி மாற்றிப் பூசிக் கொண்டே இருப்பாள். கன்னத்தில் சின்னதாய் ஒரு பரு வந்தாலும் ஏகமாய் கவலைப் படுவாள். காலையும் மாலையும் வேளைக்கொரு பாவாடை தாவணி மாற்றுவதில் விருப்பம் காட்டுவாள்.

    எல்லாவற்றையும் விட- கோடி வீட்டுப் பஞ்சாமியின் மகன் பரத்தின் சைக்கிள் மணியோசை கேட்டால் அநாவசியமாய் முகம் சிவந்து போவாள்.

    அவளின் வெட்கத்துக்கும், ஆசைக்கும், சபலத்துக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கலாம். வயசு. பதினைந்து வயசுக்கே உரிய பால் மனசு...

    வசுமதிக்கு என்ன ஆயிற்று...

    பத்து நாட்களுக்கு முன்னால்தான் ராகவன் இவளைப் பெண் பார்த்துவிட்டுப் போனான்...

    முப்பது வயசுப் பெண்ணை- 'பெண் பார்ப்பது' என்கிற சம்பிரதாயம் கேவலமானது இல்லையோ...

    அதுவும் ராகவனைப் போல ஒரு தாரத்தை இழந்து. இன்னொரு தாரத்தைத் தேடுபவனுக்கு...

    அவன் அங்கு வந்திருந்த ஒரு மணி நேரத்துக்கும், குனிந்த தலை நிமிராமல் படு சமர்த்தாகத்தான் உட்கார்ந்திருந்தான்.

    பெண்ணை எங்கே பார்த்தான்...

    இவனுக்காக இத்தனை அலங்காரங்களும் தேவைதானா என்று கூட வசுமதிக்குத் தோன்றியது...

    அப்பப்பா என்ன சிரமம்.

    இழுத்துப் பிடிக்கும் ரவிக்கை... க்ரீமும், பவுடரும் சேர்ந்து முகத்தில் குழம்பிக் கிடந்தது. நெற்றியில் இட்டிருந்த சிவப்புச் சாந்துத் திலகம். வியர்வையில் இளகி வழிகிறதோ என்கிற சந்தேகம் அடிக்கடி எழுந்தது.

    இத்தனை மெல்லிய புடவையை இதுவரையில் அவள் கட்டியதே இல்லை. அதுவேறு ஒரு பக்கம் ஹிம்சையாய்...

    அடிக்கடி மேல் புடவையைச் சரி செய்து கொண்டாள். கைக்குட்டைட்யால் முகத்து வியர்வையை அழுந்தத் துடைத்ததில், சற்று முன் ராஜி, மிக கவனமெடுத்துக் கொண்டு தீட்டி விட்டிருந்த மையெல்லாம் கன்னத்தில் படர்ந்தது.

    போதாக் குறைக்கு, நெஞ்சம் வேறு துரித கதியில் அடித்துக் கொண்டது.

    'இது என்ன அவஸ்தை...

    அவள் தவித்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1