Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee En Poonchiragu
Nee En Poonchiragu
Nee En Poonchiragu
Ebook106 pages48 minutes

Nee En Poonchiragu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

'நீ என் பூஞ்சிறகு' - பாக்கெட் நாவல் பத்திரிகை உலகில், நாவல் மார்க்கெட் 'ஓகோ'வென இருந்த போது எழுதியது... இன்றும்... இன்றும் கூட இதிலுள்ள சில சம்பவங்களை என் ரசிகைகள் மறக்காமல் சொல்லும் போது, நான் நெகிழ்ந்தும் போவேன்.

"மேடம்,.. அந்த 'நீ என் பூஞ்சிறகு' ஒரு பிரதி கூடக் கிடைக்காதா என எத்தனையோ ரசிகைகள் என்னை நேரிலும், தொலைபேசியிலும் கேட்டிருக்கின்றனர்.

1980களில் எழுதிய நாவல் இது... இன்றைக்கும் பாக்கெட் நாவல் அசோகன் அவர்களுக்கு மிகப் பிடித்தமான நாவல் இது...

என் அருமை வாசகிகளுக்கு,

நீங்கள் கேட்ட, உங்களுக்குப் பிடித்தமான 'நீ என் பூஞ்சிறகு' இதோ... வாங்கிப் படியுங்கள்.

- அனுராதா ரமணன்

Languageதமிழ்
Release dateOct 4, 2016
ISBN6580110001566
Nee En Poonchiragu

Read more from Anuradha Ramanan

Related to Nee En Poonchiragu

Related ebooks

Reviews for Nee En Poonchiragu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee En Poonchiragu - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    நீ என் பூஞ்சிறகு

    Nee En Poonchiragu

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    நீ என் பூஞ்சிறகு

    1

    பத்ரீ ஆரத்தி ரெடியா...

    தங்கம்மா, வாசலில் வந்து நின்ற வண்டியைப் பார்த்துவிட்டு உட்புறம் திரும்பிக் குரல் கொடுக்க-

    நான் அப்பவே கரைச்சு வச்சுட்டேன்... இருங்கோ... எடுத்துண்டு வரேன்...

    பத்ரி உட்பக்கம் ஒடுகிறான்.

    அரை நிமிஷத்துக்கு முன்னால் வரையில் தங்கம்மா, தன் மகன் பாஸ்கரனைக் கரித்துக் கொட்டிக் கொண்டுதானிருந்தாள்.

    மொலுங்கு மொலுங்கா மூணு குழந்தைங்க இருக்கறப்ப, கல்யாணம் செஞ்சுட்டிருக்கானாம் கல்யாணம். இதை அப்பவே செஞ்சிருக்கணும்... எப்ப மூணாவது குழந்தையப் பெத்த ரெண்டாம் நாளே- பெண்டாட்டிக்காரி ‘பொசுக்’குனு போனாளோ... அன்னிலேயிருந்து இந்தப் பத்து வருஷமா இதுங்களை வளர்க்க நான் படாதபாடு பட்டுட்டேன்... இப்ப ஈறு பேனாகி, பேன்- பெருமாளான கதையா மூத்தவனுக்கு வயசு பதினாறு... அடுத்தவ பதினாலு- திரண்டு ஒரு வருஷமாறது... கடைசிப் பயலுக்குப் பத்து... இப்பத்தான் மனுஷனுக்குப் பிள்ளைய வளர்க்க ஒருத்தி வேணும்னு தோணியிருக்கு...

    இந்தாடி சாந்தா... அப்பன்காரன் வந்தவுடனே முதல்லே, எங்க அம்மா நகைங்களை எல்லாம் எடுத்துக் கொடுங்கோப்பா... எனக்கு வேணும்னு பளிச்சுன்னு கேளு…

    அடேய்... ராமு... வாடாப்பா... இத்தனை நாளும் இல்லாம உங்களுக்குச் சித்தி வரப்போறாடா... என்ன பாடு படுத்தப் போறாளோ... இத்தனை நாளும் ராஜா வீட்டுக் கன்னுக் குட்டிகளாட்டமா வளர்ந்தாச்சு... உன்னை நினைச்சாத்தான்டா எனக்கு வயித்துல புளியக் கரைக்கிறது...

    ராஜான்ன உடனே ஞாபகம் வர்றது. எங்கேடி பெரியவன்... அப்பா ராஜா... நீயும் வளர்ந்துட்டே... அடுத்தாப்பல சித்திக்குக் குழந்தைகள் பொறந்தா... சொத்துல அவளுக்கும் சரி சமமாப் பங்கு உண்டு. முன்னாடியே பாகம் போட்டுடச் சொல்லி நான் கேட்கப் போறேன். உங்க அப்பன்காரன் திட்டினான்- பாட்டி சொல்றதுல என்னப்பா தப்புன்னு பளிச்சுன்னு நீ கேட்கணும், ஆமா...

    பத்ரிக்குச் சிரிப்பு வந்தாலும், ஒரு பக்கம் நினைத்துப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.

    இத்தனை நாள் வரைக்கும் அந்த வீட்டில் தங்கம்மா வைத்தது தான் சட்டம். பத்ரி அந்த வீட்டுக்குச் சமையற்காரனாக, பாதுகாப்பாளனாக, இந்தக் குழந்தைகளின் விளையாட்டுத் தோழனாக வந்து பத்து வருடங்களாகின்றன….

    அப்பொழுதுதான் பாஸ்கரனின் முதல் மனைவி இறந்த புதுசு... கைக் குழந்தையை வைத்துக் கொண்டு சங்கில் பாலைப் புகட்டியும் விடாமல் அலறும் குழந்தையை எப்படித் தூங்கச் செய்வது என்று புரியாமலும், அதே சமயத்தில் முதல் இரண்டு பேரக் குழந்தைகளின் விஷமம் தாளாமலும் கத்துவாள் தங்கம்மா.

    சனியன்களா... நீங்களும் உங்க அம்மா போன இடத்துக்கே போய்ச் சேர வேண்டியதுதானே... என் கழுத்தை ஏன் அறுக்கறிங்க...

    பத்ரியின் மாமா - அவனை, அப்பொழுதுதான் பாஸ்கரனிடம் கொண்டு வந்து விட்டார்.

    உங்க நிலைமை எனக்குப் புரிகிறது... இவன் எங்க அக்கா பிள்ளை, அப்பா காலமாகி மூணு வருஷமாறது... படிப்பு ஏறல்லே... எட்டாங் கிளாஸோட நிப்பாட்டிட்டேன்... அம்மாவுக்கு ஒத்தாசை செஞ்சு செஞ்சு, அடுப்படிக் காரியங்கள் அத்துப்படி... குழந்தைகளையும் பார்த்துப்பான். சாப்பாடு போட்டு, ஏதோ உங்க பழைய வேஷ்டி சட்டையைக் கொடுங்கோ. வேலையில் திருப்தி இருந்தா பத்தோ இருபதோ- உங்க மனசுக்குத் தோணினதை மாசச் சம்பளமாகக் கொடுங்கோ… அவன் பேருல பாங்குல கணக்குத் திறந்து அதுல போட்டாலும் சரிதான். இதை நான் வற்புறுத்தலே... உங்க செளகரியம்.

    பாஸ்கரன், இவனை ஏற இறங்க ஒருமுறை பார்த்தான்...

    இவனுக்கு என்ன வயசு?

    ஐப்பசியோட பதினஞ்சு முடிஞ்சுடுத்து. இப்பப் பதினாறு நடக்கறது...

    இவனே குழந்தை. இவனால எப்படிச் சமைச்சு, குழந்தை களையும் பார்த்துக்க முடியும்?

    பத்ரி, ‘பட்’டெனப் பதிலளித்தான்.

    கைக் குழந்தையக்கூட நான் பார்த்துப்பேன் அண்ணா... நீங்க கவலையே படவேண்டாம். உங்க அம்மாவுக்கு மடிச் சமையல் பண்ணனும்னாலும் பண்ணுவேன்... குழந்தைகளுக்கு பட்சணம், சின்னக் குழந்தைக்குக் குளிப்பாட்டி மருந்து புகட்டறது... அத்தனையும் செய்வேன்...

    பாஸ்கரனின் முகத்தில் மெல்லிய சிரிப்பு.

    பேஷ்! இதையெல்லாம் எங்கேயிருந்து கத்துண்டே...

    எங்க அம்மாவோட, எத்தனை கல்யாணம், சீமந்தம், பிரசவக் காரியங்களுக்குச் செய்யப் போயிருக்கேன்? படிப்புதான் ஏறல்லேயே தவிர, மத்தபடி நான் ஆல்ரவுண்டர் அண்ணா...

    பாஸ்கரனுக்கு, பத்ரியைப் பிடித்துப் போய்விட்டது...

    அன்றுகூட தங்கம்மா இப்படித்தான் முணுமுணுத்தாள்.

    பீமசேனன் மாதிரி இருக்கான். நீயானா, பாதி நாள் டூர் போயிடுவே... என்னிக்காவது இவன் மென்னிய முறிச்சுட்டு, வீட்டுல இருக்கிறதையெல்லாம் சுருட்டிண்டுப் போகப் போறான் பாரு...

    உன்னோட கழுத்து அவனோட ரெண்டு கைக்குள்ள அடங்காது. பேசாம இரு. உனக்கு, சுயமாச் செஞ்சுக்கவும் துப்பில்லே. ஆளை வச்சாலும் ஆயிரம் குத்தம் கண்டு பிடிப்பே...

    பாஸ்கரன், ஒரே போடாகப் போட்டு அவளை அடக்கினான்.

    எப்பொழுதுமே- அந்த வீட்டில் பாஸ்கரனின் கைதான் ஓங்கியிருக்கும்... அவன் மனைவி அகிலா இருந்த இடம் தெரியாம லேயே இருந்து விட்டுப் போய்விட்டாள்.

    மகன் இல்லாதபோது, தங்கம்மா குரல் வீடு முழுக்க எதிரொலிக்கும்.

    ஆரம்பத்தில் டத்ரியைக் கண்டால் எரிந்து விழுந்த

    Enjoying the preview?
    Page 1 of 1