Vazhvinul Vasantham..!
5/5
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Ithu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Mullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsPagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Maaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Kanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsNinaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Brindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Adhisaya Raagam... Rating: 0 out of 5 stars0 ratingsUppu Ilavarasi! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vazhvinul Vasantham..!
Related ebooks
Adhisaya Raagam... Rating: 0 out of 5 stars0 ratingsInbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Brindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Pallakku Payanam Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Kannodu Kaanpathellam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhaladum Manathu Rating: 3 out of 5 stars3/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Nesa Nadhikaraiyil Rating: 3 out of 5 stars3/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Unnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Vidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Pookolam Podavaa... Rating: 0 out of 5 stars0 ratingsPallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Panneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Senbaga Poovum, Saaralum... Rating: 2 out of 5 stars2/5Manasukkul Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsPon Maalai Mayakkam Rating: 4 out of 5 stars4/5Maya Malarvanam Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Devi Thavam Rating: 0 out of 5 stars0 ratingsNetru Mudhal Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsPaalaivanathil Pannir! Rating: 4 out of 5 stars4/5Sagiyendru Saranadainthen Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Uyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5
Reviews for Vazhvinul Vasantham..!
2 ratings0 reviews
Book preview
Vazhvinul Vasantham..! - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
வாழ்வினுள் வசந்தம்..!
Vazhvinul Vasantham..!
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jayathilakar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jayathilakar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
வாழ்வினுள் வசந்தம்..!
1
அபூர்வமாய் கிடைப்பதில் ஆர்வம் மிகுவது சகஜந்தான்... இது அபூர்வமாய் வாய்த்த தனிமை.
ஆக அதை ஆசையுடன் அனுபவிக்க ஆரம்பித்தாள் வாஸந்தி.
பள்ளி, கல்லூரி நாட்களில் அவளிருந்தது ஹாஸ்டலில். அங்கிருந்த கூட்டம், கலாட்டாவிற்குக் கேட்பானேன்?
அதை எல்லாம் ரசித்தாலும், அவ்வப்போது இவளே பங்கு பெற்றாலும்கூட சிறு பொழுதேனும் அமைதியும் தனிமையும் வாய்க்காதா என்றும் அவள் ஏங்கியதுண்டு.
ஆனால் அந்த ஏகாந்தம் ஏக்கமாய் தேடிய இவள் பிடிக்கு சிக்கவேயில்லை! விடுமுறைகளில் தன் தந்தை வாத்தியாராய் உத்தியோகம் பார்த்த கிராமத்திற்கு வாஸந்தி வர, அக்கம்பக்கத்தார் கிளர்ந்து எழுவார்கள்!
அடடே நம்ப வாத்தியார் வூட்டுப் பொண்ணு அதிகாலமே ஊரிலேருந்து வந்தாச்சு... தெரியுமில்ல?
'ஏம்பூ அங்கள படிப்பு சாஸ்தியோ...?'
'சாப்பாடு சுகமில்ல போல... குச்சா இளைச்சிருச்சே பிள்ளை? இப்படி முதலில் வந்து தோளைத் தடவி விசாரிப்பவர்கள், மறுமுறை பலகாரங்களுடன் படை எடுப்பார்கள்!
அப்பா மாற்றலாகிப் போகும் அத்தனை கிராமங்களும் அன்பில் ஒன்று போலவேத்தான் - தவிர தாயற்ற பெண் என்ற இளக்கமும் சேர, வாஸந்தியைத் தனியே விடுவதே கிடையாது.
'இப்படி வூட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தா எப்டி?' என்று தங்கள் வீட்டிற்கு கையோடு கூட்டிச் செல்வார்கள் - அல்லது அங்குள்ள இளம் வட்ட குட்டிகள் பல்லாங்குழி, தாயம், பரமபதம் ஆட இங்கே வந்து விடுவது.
அங்கு நேரம், நிமிஷங்கள் எல்லாம் பொக்கிஷங்களல்ல - போக்க வேண்டியவை! அதுவும் டவுன் பெண்ணோடு பேசி, ஆடி போக்கிவிட்டால் - அது போதுமான பெருமை!
பெருமிதமான விசேஷம்!
அப்பா, நா வாசிக்க, நிறைய புத்தகங்களை இரவல் வாங்கிட்டு வந்திருக்கேம்ப்பா. ஒரே மணி நேரத்துல சமையலை முடிச்சுட்டு ஆற அமர வாசிக்கணும்னு இங்கே கொண்டு வந்தேன்...
என்றிவள் கெஞ்ச,
'ஆகட்டும்ப்பா' என்பவர், பிறகு பாய்ந்து வரும் பெண்கள் கூட்டத்தைக் கண்டதும் ஒதுங்கி விடுவார்.
என்னப்பா நீங்க? சொல்லலாம்ல - வாசிக்கணும்னு?
அவங்க மனசு சங்கடப்படும்டா... ராத்திரி நேரமா வாசியேன்.
நாள் முழுக்க மாறி மாறி வீடு வருபவர்களை உபசரித்து, பேசி, உடன் விளையாடி, காபி தரும் அவள் வீடு காலியானதும், ஒழித்து படுத்தால் கண்கள் சொக்கி விடும்!
கல்லூரி படிப்பு முடிந்து, வேலை தேடி வாஸந்தி அலைந்தபோதும் கூட உறவுக் குடும்பங்கள் இருந்த இடமாகவே போய் வர, அப்பா அனுமதிப்பார்.
'அம்மா இல்லாத பெண்ணாச்சேடா - அப்பா நான் அதிஜாக்ரதையாய் இருக்கணுமில்லையா?'
அபூர்வமாகவே அவர் அம்மாவைப் பற்றி பேசுவார் - சும்மாவே அதிகம் பேசாத சுபாவி அவர்... அம்மாவைப் பற்றி இவள் பேச்செடுத்தால் மெளனியாகிப் போவார்.
வீடும் வரும், அல்லது தான் போய் தங்கும் உறவினரிடம் தன் தாய் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டதுதான்-
'உங்கம்மா கட்டியவருக்கேத்த புண்ணியவதி - வார்த்தையை விட அதிகங் குறுஞ்சிரிப்புதான் - எளிய வீட்டுப் பொண்ணுன்னாலும் வளப்பமாயிருப்பா - ஆனா ரெண்டாம் பிரசவத்தும் போது தாய் வீட்டில மகளைக் கூப்பிட்டுக்கலை. அந்த சம்சாரி வீட்டிலேயும் நாலும் பொண்ணுங்க... எத்தனை பிரசவத்தத்தாம் பாக்கன்ற அலுப்பு - உங்கப்பா அப்ப இருந்ததும் கிராமத்து ஸ்கூல்ல தான். அங்க வைத்திய வசதி போதாம... பிரசவிக்க முடியாம உங்கம்மா இறந்தாச்சு...'
கண்களில் நீர் கோர்க்க கேட்டிருப்பாள் -
'அதுல உங்கப்பா மேலும் சுருண்டுட்டாரு.. ஒப்பாரி வைக்க உறவெல்லாம் வர, 'இந்த நாடகமெல்லாம் வேணாம் - கர்ப்பவதிக்கு கடைசி மாசமேனும் கூட இருக்க உறவிலே தலை நரைச்ச ஒருத்தரும் வரலியே?' என்று கண்டிச்சு பேசினதோட சரி... ஒதுங்கிட்டாரு... பிறகும் உதவ, வந்து உரச உறவுகளுக்கும் ஏது சமயம்? காலம் அப்படி அரக்கப் பரக்கல்ல பாயுது?'
வாஸந்தியும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது.
நான்கு நாட்களுக்கு மேல் விடுப்பு கேட்டால்
'புது ஆளை அமர்த்திக்கறேன் – போய்யா' என்று முதலாளிகள் முறுக்கிக் கொள்ளும் காலமிது. நல்ல வேலை அமைய இவளுந்தான் ஓடி சாடுகிறாள்...
'உங்கப்பாவைப் போல அரசாங்க உத்யோகம்ன்னா தேவலை...' என்றனர். ஆனால் அப்பா தன் வேலையை அலட்சியமாய் எண்ணியதில்லை. துல்லியமாய் வைத்திருப்பார் - கிராமத்து வாழ்வும், மக்களும் அவருக்குப் பழகி, பிடித்தும்போக, டவுன் பள்ளிக்கான மாற்றல்களைக் கூட நிராகரித்தவர் -
அது கிராமத்து பள்ளிக்கு மாற்றல் என்றாலே அலறிய மற்ற ஆசிரிய பெருமக்களுக்கு வசதியாய் போக, பண்ட மாற்று போல தங்கமணி வாத்தியாருடன் மாற்றல் மாற்றம் செய்து கொண்டனர்!
ஆனாலும் அப்பா, மகளை டவுனின் சிறந்த பள்ளியிலேயே சேர்த்து படிப்பித்தார்.
'நீ எங்கூடவே இருந்தா சந்தோஷந்தாம்மா வாஸூ - ஆனா நாளைய பின்ன 'என் வாழ்வைப் பாழ் பண்ணிட்டீங்களேப்பா'ன்னு நீ விரல் நீட்டிறக் கூடாதில் லடா?' - விளக்குவார்.
'நா அப்படி சொல்வேனாப்பா?'
'ல்ல - உனக்கு அப்படித் தோணுனாக்கூட ஒரு அப்பனுக்கு அது தோல்விதானடா? நாஞ் சரி, உனக்கும் பட்டணத்து வாசம், வசதியை நா ஏம் மறுக்கணும்...? தவிர...'
சிறு கூச்சத்துடன் நிறுத்தியவரை மகள் கெஞ்சுவாள்.
சொல்லுங்கப்பா...
"நல்ல செயலான குடும்பத்துப் பிள்ளையத்தான் உனக்குப் பாக்கணும்மா. சூட்டும் கோட்டுமாய் நாகரீகமான படிச்ச, பண்பான மாப்பிள்ளை அமையணும்... அதுக்குத் தோதாய் நீயும் இருந்தாவில்ல?'
உங்களுக்குக் கிராமம் பிடிக்குமேப்பா...
அவசரமாய் குறுக்கிடுவார் -
அதெல்லாம் என்னோட போகட்டும்பா - உனக்கு பட்டணத்து பிள்ளைதான் - ஸூட்டு போட்ட ராஜகுமாரன்.
நாசுக்கும் நாகரீகமுமாய் தன் மகள் வளர்ந்து நிற்பதில் அப்பாவின் பெருமை - அவரது முகத்திலே தகதகப்பாய் தெரியும். விடுமுறைகளில் வீட்டிலிருக்கும் மகளைத் தேடி ஊரார் வந்து குவியதிலும் பெருமிதம்தான்.
ஆனால் வாஸந்திதான் தனக்கான நேரம் கிடைக்காமல் தவிப்பாள். தவிர முன்னறையில் அப்பாவின் ட்யூஷன் வேறு.
கரிகால சோழன் கல்லணையை எந்த ஆண்டு கட்டினான் என்பதைப் பிள்ளைகள் இருபது முறை கத்திச் சொல்ல, இரவில் இவளது கனவிலே கல்லணையும். சோழனும் தோன்றி விடுவார்கள்!
*****
ஒரு வழியாய் அந்தத் தனியார் நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைக்க, வாஸந்திக்கு திருப்தி என்றாலும், அலுவலகத்தின் அருகிலேயே இருந்த அப்பெண்கள் விடுதியில் மூன்று பேராய் தங்கும் அறையை கிடைத்த தில் சிறு குறைதான். ஆனால் விளம்பரங்களை உருவாக்கும் அந்நிறுவனத்தில் -