Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaanamal Pona Aagayam
Kaanamal Pona Aagayam
Kaanamal Pona Aagayam
Ebook225 pages1 hour

Kaanamal Pona Aagayam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.[1][2]

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Languageதமிழ்
Release dateJul 29, 2016
ISBN6580100401370
Kaanamal Pona Aagayam

Read more from Rajesh Kumar

Related to Kaanamal Pona Aagayam

Related ebooks

Reviews for Kaanamal Pona Aagayam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaanamal Pona Aagayam - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    காணாமல் போன ஆகாயம்

    Kaanamal Pona Aagayam

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For other books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    காணாமல் போன ஆகாயம்

    -ராஜேஷ்குமார்

    1

    அழகான அந்தி வான நிறத்தில் இருந்த ரம்யா - ஆறடி உயரத்தில் அம்சமாய் இருந்த கணவன் கோபிநாத்தை செல்லமாய் கோபித்துக் கொண்டாள்.

    இடம் படுக்கை அறை. நேரம் 10.40 மணி. அறைக்குள் மெலிதான பச்சை நிற ஜீரோ வாட்ஸ் விளக்கின் கசியல்.

    என்னங்க? என்னோட பர்த்டேயை சிம்பிளா கொண்டிடாடினா போதாதா…? பணத்தை எதுக்காக அநாவசியமா செலவழிக்கணும்?

    ஐஸ்க்ரீம் உடம்போடு தளதளத்த ரம்யாவை - வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டே கோபிநாத் புன்னகைத்தான்.

    என்னோட அழகான பெண்டாட்டியோட இருபத்தி மூணாவது பிறந்த நாளை அமர்க்களமா கொண்டாடணும்னு எனக்கு ஆசை இருக்காதா…? நம்ம கல்யாணம் முடிந்ததுமே வர்ற முதல் பிறந்த நாள் இது. ஹோட்டல் ‘மௌரியா’வில் பார்த்டே பார்ட்டியை அரேஞ்ச் பண்ணப்போறேன்.

    ரொம்ப செலவாகுமே?

    கேட்டுப் பார்த்தேன்.

    எவ்வளவு சார்ஜ்?

    பர் ஹெட் ஹண்ட்ரெட் ருபீஸ்.

    எவ்வளவு பேர்களை கூப்பிடப்போறோம்?

    சுமார் நூறு பேர்.

    அய்யோடா… பத்தாயிரம் ரூபாய் பணால்.

    ஆகட்டுமே…! ரம்யாவின் ‘மெத்’ கன்னத்தை செல்லமாய்த் தட்டினான் கோபிநாத்.

    சரி… யார் யாரை கூப்பிடப் போறீங்க?

    நம்ம கம்பெனி கீ போஸ்ட்களில் மொத்தம் பத்து பேர் இருக்காங்க… அவங்களை தம்பதி சமேதா இன்வைட் பண்றோம்.

    ஓ.கே… அப்புறம்?

    உன்னோட லேடீஸ் கிளப் பட்டாளம்.

    தென்…?

    என்னோட இன்னர் சர்க்கிள் ஃபிரண்ட்ஸ்.

    நூறு பேர்க்கு மேலே தாண்டும் போலிருக்கே…?

    மொதல்ல லிஸ்ட்டைப் போடுவோம்… அப்புறம் சென்ஸார் பண்ணுவோம்… முக்கியமான நூறு பேரை பொறுக்குவோம்…

    என்னங்க… - கோபிநாத் வெற்று மார்பு முடிகளை தன் நெயிபாலீஷ் பூசப்பட்ட நீளமான விரல்களால் கோதிக்கொண்டே கூப்பிட்டாள் ரம்யா.

    சொல்லு…

    நா… ஒண்ணு கேட்டா கோபிச்சுக்க மாட்டீங்களே?

    மாட்டேன்… சொல்லு…

    எம்மேல எப்பவும்… இதே மாதிரியான பிரியத்தோடுதான் இருப்பீங்களா?

    "டோண்ட் பி ரப்பிஷ்… நீ அறுபது வயசு கிழவியானாலும் சரி… நான் உம்மேல வெச்சிருக்கிற பிரியம் என்னைக்குமே குறையாது. மாறாது.

    பார்க்கலாமா?

    லாம்… சொல்லிக்கொண்டே ரம்யாவின் தோள்களைப் பற்றி தன் பக்கமாய் அவளை இழுக்க முயன்றான் கோபிநாத்.

    அதே விநாடி -

    பக்கத்து டீபாயின் மேலிருந்த டெலிபோன் தன் தொண்டையைத் திறந்து கதற ஆரம்பித்தது. ரம்யா புரண்டு படுத்து கைளை நீட்டி ரிஸீவரை எடுத்தாள். காது மடலை உரச விட்டாள்.

    ஹலோ…

    ………

    லைன்ல இருங்க… அவரை பேசச் சொல்றேன் - சொல்லி விட்டு ரிஸீவரை கோபிநாத்திடம் நீட்டினாள் ரம்யா.

    போன்ல யார் ரம்யா?

    உங்க கம்பெனி எப்.எம். உங்ககிட்டே என்னமோ அவசரமா பேசணுமாம்…

    ரிஸீவரை எரிச்சலோடு வாங்கி காதுக்குக் கொடுத்தான் கோபிநாத்.

    ஹலோ…

    ஸார்… நான் எப்.எம். பேசறேன்.

    சொல்லுங்க…

    பாம்பேலிருந்து ஜீவன்லால் டெலக்ஸ் வந்தது ஸார்…

    என்ன விஷயம்?

    ரா மெட்டீரியல்ஸ் வர்ற வாரத்திலிருந்து ஹண்ட்ரெட் பர்சென்ட் ரெய்ஸ் ஆகப் போகிறதாம்… தேவையான ஆர்டர்க்கு டெலக்ஸ் குடுக்கச் சொன்னாங்க.

    இதையெல்லாம் எதுக்காக என்கிட்டே போன் பண்ணிச் சொல்றீங்க? பர்ச்சேஸ் மானோஜர்னு ஒருத்தர் எதுக்காக நம்ம கம்பெனியில் இருக்கார்…? அவர்க்கு போன் பண்ணி சொல்ல வேண்டியதுதானே…?

    அவர் வீட்டுக்கு போன் பண்ணி பார்த்தேன் ஸார்…! அவர் வீட்லே இல்லை…

    அவர் வீட்ல இல்லைன்னா உடனே எனக்கு போன் பண்ணிடறதா? ராத்திரி நேரங்கள்ல ஆபீஸ் விஷயமா… என்கூட டெலிபோனிலோ நேரிலோ தொடர்பு கொள்ளக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?

    ஸாரி… ஸார்…

    வாட்… நான்சென்ஸ் ஸாரி…! ரிஸீவரை ஏகப்பட்ட எரிச்சலோடு சாத்தினான் கோபிநாத். கோபத்தில் முகம் குங்குமமாய் ஜ்வலித்தது.

    ரம்யா புன்னகைத்தாள். அடேங்கப்பா… என்ன கோபம்…? எப்.எம். ஆபீஸ் விஷயத்தைத்தானே பேசினார். அவரோடு சொந்த விஷயத்தையா பேசினார்?

    எதுவா இருந்தா என்ன? மனுஷனுக்கு தூங்கப் போற நேரத்திலாவது நிம்மதி வேண்டாம்…? பெண்டாட்டியை கொஞ்சப் போற நேரத்துல போன்கால் வந்தா… எரிச்சல் வருமா வராதா…? இனிமே ரிஸீவரை எடுத்து கீழே வெச்சுடப் போறேன்…

    உங்களுக்கு பெண்டாட்டி பக்தி முத்திப் போச்சு…

    இருக்கட்டுமே லைட்டை அணைத்த கையோடு - ரம்யாவையும் அணைத்துக் கொண்டு படுக்கையில் உருண்டான் கோபிநாத். ரம்யா அவனோடு இழைந்து கொண்டே கேட்டாள். சரி… பர்த்டே ப்ரோக்ராம் எப்படி…?

    பர்த்டேக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கு… நாளைக்கு கார்டு பிரிண்ட் பண்ணத் தர்றேன். ரெண்டு நாள்ல டிஸ்ட்ரிப்யூஷனை முடிச்சுடலாம்…

    எனக்கு பர்த்டே பிரஸண்டேஷன் என்ன தரப்போறீங்க?

    உனக்கு என்ன வேணும்?

    எது கேட்டாலும் வாங்கி குடுப்பீங்களா?

    ம்.

    கட்டாயம் வாங்கிக் குடுப்பீங்களா?

    ம்.

    எனக்கு பதினாலுமாடி எல்.ஐ.சி. கட்டிடம் வேணும். வாங்கித் தர்றீங்களா…?

    ப்பூ… அவ்வளவுதானா… நாளைக்கே… வீட்டு புரோக்கர் யாரையாவது எல்.ஐ.சி. சேர்jமன்கிட்டே அனுப்பி - விலை கேட்டுட்டு வரச் சொல்றேன். கோபிநாத் சிரிக்காமல் சொல்ல - ரம்யா தலைணையை வயிற்றுக்கு கட்டிக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

    ஹோட்டல் மௌரியா. இரவு எட்டு மணி.

    காம்பௌண்ட் சுவர் எதிரே கலர் கொடிகள் தாழப்பறந்து கொண்டிருந்த அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கார் பார்க்கிங் பூராவும் மாருதிகள், டால்பின்கள், டாட்ஸன்கள், இரண்டாயிரம் ஸ்டாண்டர்டுகள்.

    உள்ளே ‘அபிநயா கான்ப்ரன்ஸ்’ ஹால் வாசலில் கோபிநாத் ஃபுல்சூட்டிலும், ரம்யா பட்டுப்புடவையிலும் நின்று வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.

    வாங்க ராமகிருஷ்ணன் வாங்க… நீங்க மட்டும் வர்றீங்க… உங்க ஒய்பை கூட்டிட்டு வரலையா…? கோபிநாத் கேட்க - அந்த ஐம்பது வயது ராமகிருஷ்ணன் கடைவாயில் கட்டியிருந்த தங்கப் பல் தெரிய சிரித்தார்.

    அவ எதுக்கு அநாவசியமாய் கோபிநாத்? கழுதைக்கு ப்ளட் பிஷர். நாலடி சேர்ந்த மாதிரி நடக்க முடியாது. அப்படியே சமாளிச்சு நடந்து வந்தாலும் - கழுதைக்கு… சுகர் கம்ப்ளையண்ட்… துளி இனிப்பு வாயில வெக்கமுடியாது. எதுக்கும் உபயோகமில்லாத அந்தக் கழுதையை எதுக்காக கூட்டிட்டு வரணும்?

    வாஸ்தவந்தான்… உள்ளே போங்க…

    பார்ட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம்?

    சரியா எட்டரை மணிக்கு…

    வெஜ்ஜா…? நான் வெஜ்ஜா…?

    ரெண்டுமே இருக்கு…

    குட்… ராமகிருஷ்ணன் உள்ளே போனார். கோபிநாத் ரம்யாவிடம் திரும்பினாள். ரம்யா…! நீ வர்றவங்களை வரவேற்று உள்ளே அனுப்பி வை. நான் பஃப்பே பார்ட்டி ஏற்பாடுகளை பார்த்துட்டு வர்றேன். ஐஸ்க்ரீம்ல ரெண்டு அயிட்டம் கொண்டு வரச் சொல்லிருந்தேன்…

    ஏற்பாடுகளை கவனிச்சுட்டு வாங்க… நான் இங்கேயே இருக்கேன்.

    ரம்யா சொல்ல –

    கோபிநாத் நகர்ந்தான்.

    வாங்க மிஸஸ் லலிதா அசோகன்… ஒரு கூடை கொண்டைக்காரியையும் - அவளுடைய கெச்சலான புருஷனையும் வரவேற்று உள்ளே அனுப்பிவிட்டு - முகத்தில் அரும்பின வியர்வையில் - ரோஸ் பூச்சு அழிந்து விடாமலிருக்க - கையிலிருந்த கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டு - நின்றாள். அதே விநாடி.

    அம்மா…

    குரல் கேட்டு திரும்பினாள்.

    ஒரு பேரர் நின்றிருந்தான்.

    என்ன…?

    உங்களை கேட்டு… போன் வந்திருக்கும்மா…

    என்னைக் கேட்டா…?

    ஆமாம்மா…

    போன் எங்கேயிருக்கு?

    ரிசப்ஷன்ல…

    வர்றேன்… போ… அவனை அனுப்பி விட்டு - ஹாலில் கோபிநாத்தை தேடினாள். அவன் பஃப்பே பார்ட்டி அயிட்டம்களில்- தீவிரம் காட்டிக் கொண்டிருக்க - ரம்யா தனக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த -– ஒரு பெண்ணைக் கூப்பிட்டாள்.

    மிஸஸ் சாருமதி… சாருமதி…

    அந்த சாருமதி அவளை ஏறிட்டாள். என்ன ரம்யா…?

    ரம்யா சொன்னாள். எனக்கு போன் வந்திருக்காம்… நான் போய்ட்டு வந்துடறேன். என்னோட ஹஸ்பெண்ட் வந்து கேட்டார்னா சொல்லிடு…

    ஷ்யூர்… ஷ்யூர்… நீ போய்ட்டு… வா… சாருமதி தலையை ஆட்ட ரம்யா புடவைத் தலைப்பை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு - லிப்ட்டை நோக்கி வேகமாய் போனாள்.

    பத்து நிமிஷம் கழித்து வரவேற்பு வாசலுக்கு வந்த கோபிநாத் - ரம்யாவைக் காணாமல் முகத்தில் குழப்பம் காட்டினான். யாருடனோ பேசிக் கொண்டிருந்த சாருமதி குரல் கொடுத்தாள்.

    மிஸ்டர் கோபிநாத்… யுவர் ஒய்ப் ஹேஸ் கான் டூ அட்டெண்ட் த போன்… உங்ககிட்டே சொல்லச் சொன்னாள்.

    ‘ரம்யாவுக்கு டெலிபோனா? யாராக இருக்கும்?’

    ஆச்சர்யப்பட்டுக் கொண்டே வந்தவர்களை வரவேற்று உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார் கோபிநாத்.

    நிமிஷங்கள் நழுவியது.

    நேரம் 8.15.

    8.20.

    8.25.

    ‘டெலிபோனில் இந்நேரமா பேசிக் கொண்டிருக்கிறாள் ரம்யா…?’

    கோபிநாத் மனசுக்குள் லேசாய் கோபம் கனன்றது. நேரம் எட்டரையைத் தொட்டபோது - பொறுமையை இழந்து - லிப்ட்டை நோக்கிப் போனான். லிப்டில் ஊஞ்சலாடி இரண்டு ஃப்ளோர்களைக் கடந்து ரிசப்ஷன் - ஹாலைத் தொட்டான். பார்வையைத் துரத்தினான்.

    ‘ரிசப்ஷன் கௌண்டரில் ரம்யாவைக் காணோம்.’

    வேகவேகமாய் - கௌண்டரை நெருங்கி டை அணிந்த லெட்ஜரைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை கேட்டான்.

    என்னோட ஒய்ப் மிஸஸ் ரம்யா போன் அட்டெண்ட் பண்ண வந்தாளா?

    அவன் வரலையே! என்றான்.

    2

    கோபிநாத் லேசாய் வியர்த்தான். கண்களில் சின்னதாய் ஒரு திடுக்கிடல் தெரிய - மறுபடியும் அந்த ரிசப்னிஷ்ட் இளைஞனிடம் கேட்டான்.

    அரைமணி நேரத்துக்கு முந்தியே என்னோட மிஸஸ் போன் பண்ண வந்தாளே…?

    ஸாரி டு ஸே திஸ் ஸார்… உங்க மிஸஸைக் கேட்டு ஒரு போன்கால் வந்தது உண்மை. இண்டர்காம் சர்வீஸில் கொஞ்சம் ஃபால்ட் இருந்ததனாலே பேரரை அனுப்பி… அவங்களை கூட்டிட்டு வரச் சொன்னோம். அவங்களும் வரலை. போன்காலும் கட்டாயிடுச்சு.

    எந்தப் பேரரை அனுப்பினீங்க?

    ஒன் மிணிட் - என்று பார்வையை உயர்த்தி - அந்த ரிசப்ஷன் ஹாலை பார்வையிட்ட இளைஞன் - கொஞ்சம் தொலைவில் - ஒரு கண்ணாடி ஷோகேஸ் அருகே நின்றிருந்த பேரரை கையசைத்துக் கூப்பிட்டான். பேரர் வேகுவேகமாய் வந்து கௌண்டரை நெருங்க, அந்த இளைஞன் கேட்டான். மாதவா! மிஸஸ் ரம்யாவுக்கு போன் வந்த விபரத்தைச் சொன்னது நீதானே…?

    ஆமா…ஸார்

    அவங்க என்ன சொன்னாங்க…?

    வர்றேன்… போ…ன்னு சொன்னாங்க… வந்துட்டேன்.

    ரம்யா போன் பண்ண வந்ததை நீ பார்த்தியா?

    பார்கலை ஸார்.

    ரிசப்னிஷ்ட் கோபிநாத்தை ஏறிட்டான்.

    உங்க மிஸஸ் டாய்லெட்டுக்கு போயிருக்கலாம்… வெயிட் பண்ணிப் பாருங்க ஸார்… நத்திங் டு வொர்ரி…

    கோபிநாத் மறுபடியும் பார்ட்டி நடக்கிற ஹாலுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1