Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Best Of Yandamoori Veerendranath
Best Of Yandamoori Veerendranath
Best Of Yandamoori Veerendranath
Ebook269 pages1 hour

Best Of Yandamoori Veerendranath

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Yandamoori Veerendranath, is a famous Telugu novelist. He had written many social, fiction, super natural thriller stories and novels. Hailing from Andhra Pradesh state in India, he influenced younger generations with his socially relevant writings. In his writings he addresses many of the important social problems in India like poverty, prejudices, and superstitions, and encourages people to be socially responsible. He successfully bridges the idealistic and the popular styles of literature.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580101100862
Best Of Yandamoori Veerendranath

Read more from Yandamoori Veerendranath

Related to Best Of Yandamoori Veerendranath

Related ebooks

Reviews for Best Of Yandamoori Veerendranath

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Best Of Yandamoori Veerendranath - Yandamoori Veerendranath

    http://www.pustaka.co.in

    பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத்

    Best of Yandamoori Veerendranath

    Author:

    எண்டமூரி வீரேந்திரநாத்

    Yandamoori Veerendranath

    For more books

    http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பந்தயம்

    கிணற்றுத் தவளைகள்

    மன்னித்து விடு சுப்ரியா

    ஒரு சனிக்கிழமை இரவு

    அத்வைதம்

    மரக்கால்

    1

    பந்தயம்

    'இரவெல்லாம் பெய்த அடர்த்தியான பனியில் நனைந்து காலையில் இளம் வெயிலில் சோம்பல் முறிக்கும் மல்லிகைகளைப் பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் சிக்கல் என்னவென்றால் மல்லிகைப் பூக்கள் வெயில் காலத்தில் பூக்கும். பனி பெய்யும் குளிர்காலத்தில் பூக்காது. இந்த விஷயத்தில் கடவுளை 'டேஸ்ட் லெஸ் கிரியேச்சர்' என்று பலமுறை நான் திட்டியது உண்டு. ஆனால் உங்களைப் பார்த்தபிறகு, கடவுளுக்குக்கூட ரசனை இருக்கிறது என்றும், உங்களை உருவாக்கும்போது, தான் முன்னால் செய்த தவறை சரி செய்ய நினைத்து, ரொம்ப முயற்சி எடுத்து, பனியின் வெண்மையையும், மல்லிகையின் சுகுமாரத்தையும் கலவையாக்கி...'

    'மறுபடியும் இந்தத் தடவை யாரைக் கெடுக்கிறாய்?'

    தோளின் பின்னாலிருந்து சுவாமிநாதனின் குரல் கேட்டதும், விசு பேனாவை மேஜை மீது வைத்து விட்டான். இனி அவனிருக்கும் வரை எழுத ஓடாது.

    'புது பறவையா?' சுவாமிநாதன் கேட்டான்.

    விசு சிரித்தான். சுவாமிநாதனைப் பார்த்தால் அவனுக்கு சிரிப்பு வரும். இயலாமையை நல்லத்தனம் என்று நினைத்துக்கொண்டு திருப்திப்பட்டுக் கொள்பவர்கள்.

    சுவாமிநாதன் நல்லவன். சிகரெட் பிடிக்க மாட்டான். சீட்டாட மாட்டான். முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு பாடத்தை சிரத்தையாகக் கேட்பான். பெண்களின் நிழல் கூடப்பிடிக்காது அவனைப் கண்டால் விசுவுக்கு பாவமாக இருக்கும். வேடிக்கை என்னவென்றால் விசு என்றால் சுவாமிநாதனுக்கும் இரக்கம்தான்.

    'பெண்களுக்கே இல்லாத கொள்கைகளை நாம் கடைபிடித்து, மடியாக இருப்பதால் லாபம் என்ன?' என்பது விசுவின் வாதம்.

    'அப்படியாவது அது போன்ற சுகங்களை அனுபவிக்க வேண்டுமா?'

    'நீ இல்லாவிட்டால் மற்றொருவர் அந்த இடத்தை அடைவது நிச்சயம் எனும் போது நீயே ஏன் அனுபவிக்கக் கூடாது?'

    'அது ஒரு கண நேர சுகம்' சுவாமிநாதன் சொல்வான்.

    'இல்லை. த்ரில்' என்பான் விசு.

    'உணர்ச்சிகள் வேறு. அது காதலில் கிடைக்கலாம். ஆனால் 'த்ரில்'லுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.'

    இந்த வாக்குவாதம் எப்போதும் முடியாது. வாழ்க்கையைப் பற்றி இருவருக்கும் ஸ்திரமான அபிப்பிராயம் இருக்கிறது. அதனால் அங்கே பொறாமைக்கு இடமில்லை. இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், இரவு வேளையில் எந்தப் பெண்ணாவது வந்து கதவைத்தட்டினால், அவளை கௌரவமாக உள்ளே அழைத்துவிட்டு சுவாமிநாதன் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போய்விடுவான். மறுநாள் காலையில் விசுவிடம் எப்போதும் போல் பேசுவான். அதனால்தான் அவர்களின் நட்பு மூன்று வருடங்களாக எந்த இடையூறுமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

    ***

    கடைசி வருடத்தில் இருக்கும் போது சுவாமிநாதன் மாறிவிட்டான். இந்த மாறுதல் விசுவுக்கு சீக்கிரமே தெரிந்து விட்டது, ரூம் மேட் ஆகையால்.

    இதற்குமுன் தன்னுடைய தோற்றத்தைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாதவன், இப்பொழுது கண்ணாடி முன் ஐந்து நிமிடம் நிற்கிறான். முதலில் புரியவில்லை. ஆனால் விசுவுக்கு விரைவிலேயே தெரிந்து விட்டது, சுவாமிநாதன் காதலில்... விழுந்துவிட்டான் என்று.

    விசு ரொம்ப வற்புறுத்தி கேட்டபிறகு சுவாமி சொன்னான்.

    'பெண்ணின் பெயர் ஸ்வப்னா.'

    'பெயர் நன்றாக இருக்கிறது. கல்லூரியில் படிக்கிறாளா?'

    'பி.ஏ., கடைசி வருஷம்.'

    விசு ஒரு நிமிடம் நிதானித்துவிட்டு, பிறகு கேட்டான்.

    'எவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கு உங்களின் அறிமுகம்?'

    'நேற்று பேசினேன்.'

    விசு சிரிப்பை அடக்கிக்கொண்டான். 'இதென்ன காதல்?'

    சுவாமியின் முகம் சுண்டிவிட்டது. 'அனுபவம் இல்லையே?' என்றான்.

    விசுவுக்கு சவுக்கால் அடித்தாற்போல் இருந்தது. ஆனால் இந்த மாதிரி சிறிய விஷயங்களுக்குக் கெடும் நட்பு இல்லை அவர்களுடையது.

    'அந்தப் பெண்ணின் பொழுதுபோக்குகள் என்ன?' விசு கேட்டான்.

    'வீணை கற்றுக்கொள்கிறாள். அங்கேதான் அறிமுகம் ஏற்பட்டது.'

    'பொறாமைப் படாமல் விசு புன்முறுவல் செய்தான். எக்ஸலெண்ட்! அப்போ கல்யாணம்?'

    'அதற்குள்ளேயா? அந்தப் பெண்ணிடம் இன்னும் என் காதலைப்பற்றி சொல்லவே இல்லையே?'

    'அந்தப் பெண்ணின் அபிப்பிராயம் இருக்கட்டும். நீ உன்னைப் பற்றி சொல்லு.'

    சுவாமிநாதன் விசுவை வியப்புடன் பார்த்துவிட்டு, 'கல்யாணம் செய்து கொள்ளும் உத்தேசம் இல்லாவிட்டால் காதலிப்பது மட்டும் எதற்கு?' என்றான்.

    ***

    'எனக்கு இந்தக் காதலின் மேல் நம்பிக்கை இல்லை சுவாமி. அதற்கும் ஈர்ப்புக்கும் வித்தியாசம் இல்லை. கொஞ்சம் முயற்சி செய்தால், எந்தப் பெண்ணையும் காதல் வயப்படுத்தலாம். இதற்கு காதல் என்று பெயர் சூட்டுவது பேதமை.'

    சுவாமிநாதன் பேசவில்லை. தொலைவில் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். பார்க் வெளியில், சாலையில் மக்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

    'உனக்கு ஏற்பட்ட அனுபவங்களினாலும், மட்ட ரகமான சிநேகங்களினாலும் நீ இந்த அபிப்பிராயத்திற்கு வந்தால், நான் ஒன்றும் சொல்ல முடியாது' என்றான் சுவாமிநாதன். 'நீ முழுமனதுடன் காதலிப்பதற்கு தயாரான நிலையில்தான், எதிராளியிடமிருந்தும் நீ காதலை எதிர்பார்க்கலாம். நீ மட்டும் சிநேகத்தை ஒரு அனுபவத்திற்காக எடுத்துக்கொண்டு, அந்தப் பெண்ணை மட்டும் உண்மையாக காதலிக்கச் சொன்னால் எப்படி?'

    'எனக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை.'

    'அது உன் தலையெழுத்து. உனக்கு அறிமுகமான பெண்கள் எல்லோரும் அப்படிப்பட்டவர்கள்.'

    'உலகத்தில் எல்லாப் பெண்களுமே அப்படிப்பட்டவர்கள்தான்.'

    'அப்படியானால் உனக்கு ஏதேனும் ஒரு பெண்ணைக் காண்பித்தால் அவளைக் காதலிக்காமல் அனுபவிக்க முடியுமா?'

    'இரண்டு நிமிட வேலை' விசு சிரித்தான்.

    அந்த நேரத்தில் அவ்வழியாக போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காண்பித்து, 'அதோ... அந்தப் பெண்ணை எடுத்துக்கொள்வோம். அவளை எத்தனை நாட்களில் காதலில் இறக்க முடியும்?' சுவாமிநாதன் கேட்டான்.

    ரொம்ப சாதாரணமாக இருந்தாள் அந்தப் பெண். லோயர் மிடில் க்ளாஸீக்கும் கொஞ்சம் தாழ்வான தரத்தில், தாவணியும், பாவாடையும் அணிந்திருந்தாள். பாவாடை பழசாக இருந்தது. தாவணியில் கொஞ்சம் கிழிசல்.

    'இந்தப் பெண்ணை ட்ராப் (Trap) செய்ய எனக்கு பத்து நாட்கள் போதும்.' விசு அழுத்தமான குரலில் சொன்னான்.

    'அப்படியானால் சரி.' சுவாமி எழுந்தான். 'லீவ் முடிந்து நான் திரும்பி வரும்போது, அதாவது ஒரு மாதத்தில் அவளை ட்ராப் செய் பார்ப்போம்.'

    'பெட்?'

    'பெட்.'

    ***

    அந்தப் பெண்ணின் பெயர் சுப்பலஷ்மி என்று பிறகு தெரிந்தது. அதற்குக் கொஞ்சம்கூட முயற்சி தேவைப்படவில்லை.

    சுவாமியை பைக்கிலேயே விட்டு விட்டு அவன் அவளைப் பின் தொடர்ந்தபோது, கையில் இருந்த புத்தகம் பக்கம் பார்த்ததில் பெயர் தெரிந்தது எஸ், யு, பி, பி பிறகு எல்...

    அன்று அவளின் வீட்டைப் பார்த்து வைத்துக் கொண்டு மறுநாள் மாலை அந்தத் தெரு முனையில் நின்று கொண்டான்.

    கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாண்டியும் அவள் கண்ணிலேயே படவில்லை. இருட்டிவிட்டது. அவள் வீட்டிலிருந்து வெளியில் வரவில்லை. ஏமாற்றத்துடன் வீட்டிற்குள் வந்தான்.

    மறுநாளும் இப்படியே நடந்தது.

    அவனுக்கு சந்தேகம் வந்தது, அந்த வீடுதானோ இல்லையோ என்று. சிறிய ஓட்டு வீடு அது. எந்தக் கணமும் கூரை விழுந்து விடும் நிலையில் இருந்தது. அவனுக்கு தன் மேலேயே எரிச்சல் வந்தது. இப்படி தெருமுனையில் நிற்பது அவனுக்குப் புதிது. அதுவுமில்லாமால் ஒரு சாதாரண பெண்ணிற்காக இவ்வளவு நேரம் வீணாக்குவதாவது?

    அவன் ஸ்கூட்டர் சீட்டின் மீது உட்கார்ந்து கொண்டே சட்டைப் பையிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். அந்தத் தெருவைச் சேர்ந்த ஹீரோக்கள் போலும். இவனையே ஜாடையாக பார்த்துக் கொண்டு நான்கைந்து முறை நடந்தார்கள். அவனுக்குச் சிரிப்பு வந்தது. கொஞ்சம் அப்பாவியாக தென்பட்டால் போதும் அவர்கள் இவனை மடக்கிவிடுவார்கள். அவனுக்கு இதெல்லாம் த்ரில்லாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நேரத்தைப் பற்றி கவலையாக இருந்தது. இன்னும் இருபத்தி ஏழு நாட்கள் தான் இருந்தன, பந்தயம் முடிய.

    சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான். திண்ணைகளுக்கு நடுவில் இருந்த படிகளில் அவள் இறங்கிக்கொண்டு இருந்தாள். எங்கேயோ வெளியில் போவதற்குத் தயாராக இருந்தாள். அவன் அவள் வண்டியிலேயே நிதானமாகத் தொடர்ந்தான். கிட்டத்தட்ட அரைமணி நடந்து அவள் பஜார் ஜங்ஷனுக்கு வந்தாள். குனிந்த தலை நிமிராமல், அக்கம் பக்கம் பார்க்காமல் நேராக நடந்து போனாள். ஒரு ஜவுளிக்கடையில் நுழைந்தாள். விசு தன் சட்டைப் பையை பார்த்துக் கொண்டான். ஐம்பது ரூபாய் இருந்தது. உள்ளே போனான்.

    கடையில் அவள் பக்கத்திலிருந்து போகும் போது கவனமாகப் பார்த்தான். ஒட்டிய கன்னங்கள் கையில் கண்ணாடி வளையல்கள். அவன் வாழ்க்கையில் இதுவரையில் இப்படிப்பட்ட ஒரு பெண்ணிற்காக ஒரு மாதம் வீணாக்கியதில்லை. ஆனால் இந்தப் பெண்ணின் கண்களில் இனம் தெரியாத ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது.

    கடைசி சிப்பந்தி நாலடி தொலைவில், அவளுக்காக துணியை அளந்து கொண்டிருந்தான். அவள் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    'எக்ஸ்க்யூஸ்மி' என்றான் விசு.

    அவளின் தடுமாற்றம் பளிச்சென்று தெரிந்தது. சட்டென்று தலை நிமிர்ந்து பார்த்தாள்.

    'இவற்றில் எனக்கு எதை செலக்ட் செய்வது என்று புரியவில்லை. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா ப்ளீஸ்!'

    அவள் ஒரு நிமிடம் தயங்கி, அவனுடன் வந்தாள். பத்து புடவைகளை அவன் அவள் முன்னால் போட்டான். சிறிது நேரம் அவள் அவற்றை கவனமாகப் பார்த்து விட்டு 'அவங்க எந்த நிறத்தில் இருப்பாங்க?' என்று கேட்டாள்.

    'கிட்டத்தட்ட உங்களைப் போலவே, தொட்டால் கன்றிப் போகும் அளவுக்கு சுமாரமாக...'

    அவள் ஒரு நிமிடம் அவனை நிதானமாகப் பார்த்தாள். கில்டி கான்ஷியஸாக அவனுக்கு இருந்தது. தேவைக்கு அதிகமான அந்தப் புகழ்ச்சியை அவள் கண்டு கொண்டு விட்டாள் என்ற நினைப்பு.

    ஐந்து நிமிடங்களில் அவளின் செலக்ஷன் முடிந்தது. அந்த ஐந்து நிமிடமும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தலையை உயர்த்தி 'இது எப்படி இருக்கு?' என்று கேட்டாள். அவன் பேசவில்லை. அவன் தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பதை உணர்ந்து தலையைக் குனிந்து கொண்டாள். அப்படி உணர வேண்டும் என்பதுதான் அவனுடைய எண்ணமும்.

    'பிடிக்கவில்லையா?'

    ரோஜா வண்ணம். உண்மையிலேயே நன்றாக இருந்தது. அதையே சொன்னான்.

    'எவ்வளவு?' அவள் கடை ஆளைக்கேட்டாள்.

    'நாற்பத்தி இரண்டு.'

    அவள் விசுவைப்பார்த்து, 'அவ்வளவு பெறாது. முப்பத்து ஐந்து ரூபாய் கொடுக்கலாம்' என்றாள்.

    அவளின் அந்தத் தன்மை அவனுக்குப் பிடித்திருந்தது. பேரம் பேசுவது தம்முடைய கௌரவத்திற்குக் குறைவு என்று எண்ணும் இந்தக் காலத்தில் முன் பின் தெரியாதவனுக்காக அவள் அப்படி பேரம் பேசுவது அவனுக்கு சந்தோஷமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

    கடைசியில் முப்பத்தி ஏழுக்கு செட்டில் ஆனது. புடவை பாக்கெட்டை எடுத்துக்கொண்டு வெளியே வருகையில் அவன் 'வாங்க. காபி சாப்பிட்டு போகலாம்' என்றான்.

    அவள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாள்.

    'வேண்டாம். வேண்டாம்' என்றாள் தடுமாறியபடி.

    அவன் விடவில்லை. 'இன்னிக்கு நீங்க எனக்கு ஐந்து ரூபாய் ஸேவ் பண்ணிக் கொடுத்தீங்க. கட்டாயம் வரணும்' என்றான்.

    கொஞ்சம் வற்புறுத்திய பிறகு அவள் லேசாக தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தாள்.

    ஹோட்டலில் உட்கார்ந்த பிறகு கேட்டான்.

    'உங்கள் பெயர்?'

    'சுப்புலு'

    'சுப்புலஷ்மியா?'

    'இல்லை சுப்புலுதான்.' அவளுக்குத் தன் பெயரை சொல்லிக் கொள்வதில் ஹீனமொன்றும் தெரியவில்லை.

    'என்ன படிக்கிறீங்க?'

    'எட்டாவது பாஸ் செய்திருக்கிறேன். தையல் கற்று வருகிறேன். நீங்க?...' என்றாள்.

    தன்னைப் பற்றித் தெரிந்துகொள்ளும் அவளின் அந்த ஆர்வம் அவனுக்குப் பிடித்திருந்தது. சொன்னான். அந்தப் புடவை தன் தங்கைக்கு என்றும் சொன்னான்.

    காபி குடித்து முடித்த பிறகு அவள் படி இறங்கிக் கொண்டிருந்தபோது 'அட... பஸ் வந்துவிட்டது' என்று அவனைப்பார்த்து 'வரேன்' என்றாள்.

    'எப்போ? எங்கே?'

    அவள் சீரியஸாக பார்க்க நினைத்து, சிரித்துவிட்டாள். 'போய் வருகிறேன்' என்று சொல்லிக்கொண்டே பஸ்ஸை நோக்கிப் போய்விட்டாள்.

    அவன் அந்தப் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தான். போதும். இன்று சாதித்தது ஒன்றும் குறைச்சல் இல்லை என்று நினைத்துக்கொண்டான்.

    உண்மைதான். அவன் சாதித்தது குறைச்சல் ஒன்றும் இல்லை. யதேச்சையாக நிகழ்ந்தது இல்லை. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அவளைப் பார்த்த போது, அவனுடைய பிறந்த நாள் அன்றே வருவதும் விசித்திரம் இல்லை.

    அவன் ரொம்ப வற்புறுத்திய பிறகு அவள் டின்னருக்கு ஒப்புக்கொண்டாள்.

    'நீங்க சலம் இலக்கியத்தை படித்திருக்கீங்களா?'

    சாப்பிடும்போது அவளைக் கேட்டான்.

    அவளுடன் ஹோட்டலுக்கு வருவது அவனுக்கு சங்கடமாகத்தான் இருந்தது. அதாவது பெண்களுடன் சுற்றுவதை யாரேனும் பார்த்து விடுவார்களோ என்பதால் இல்லை. இதுபோல் எட்டாம் கிளாஸ் படித்த ஒரு பெண்ணுடன் சுற்றுவதை தன்னுடைய நண்பர்கள் யாரேனும் பார்த்தால் தன்மானப் பிரச்னை என்ற பயம்.

    'யாரு?' என்றாள்.

    'சலம்' என்றான். தன் மனதில் இருக்கும் விருப்பத்தைப் பற்றி சொல்ல அந்த எழுத்தாளரின் பெயரை பயன்படுத்துவது, அவருடைய உயர்ந்த இலக்கியத்தை இதுபோல் தாழ்வான வழியில் பயன்படுத்துவது... மிகவும் வருந்தத்தக்க நிலைமை.

    அவள் நிமிர்ந்து பார்த்தாள். 'ரொம்ப வருடங்களுக்கு முன் சலம் இலக்கியத்தை படித்தேன். சரியாக புரியவில்லை. அதாவது என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ளமுடியவில்லை.'

    'உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?'

    'ஹெர்மிங்க் ஹெஸ்ஸின் மொழிபெயர்ப்புகள் சிலவற்றைப் படித்தேன். சித்தார்த்தா, அரபிந்தோ...' அவள் சொல்லிக்கொண்டே போனாள். ரொம்ப சாதாரணமாகத் தென்படும் இந்தப் பெண்ணின் பின்னால்...

    அவன் எண்ணங்களை கட்டுப்படுத்திக்கொண்டே 'நாளை பிக்னிக் போவோம்' என்றான்.

    அவள் தலையை உயர்த்திவிட்டு 'தேவலையே' என்று புன்முறுவலித்தாள்.

    'ஏன்?'

    'அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.'

    அவன் வற்புறுத்தவில்லை. இன்னும் இருபத்தி நான்கு நாட்கள் இருக்கின்றன. அவசரமில்லை.

    இந்த இருபத்தி நான்கு நாட்களில் அவர்கள் மேலும் நெருங்கிவிட்டார்கள். ஆனால் அவையெல்லாம். வழக்கமாக பெண்களை ஈர்க்க அவன் பயன்படுத்தும் யுக்திகள். பெண்களை சிலிர்க்க வைக்கும் உணர்வுகள்...

    இனிமையான பேச்சுகள்... எல்லாம் கலந்த ஒரு நெருக்கம்.

    ***

    மறுநாள் சுவாமிநாதன் வரப்போகிறான். அந்த விஷயம் அவனுக்கு நினைவு இருக்கவில்லை. பேச்சுவாக்கில் அவள்தான் சொன்னாள். 'நாளை முதல் தேதி இல்லையா?'

    அப்பொழுது தான் அவனுக்கு நினைவு வந்தது. இன்னும் ஒரு நாள் தான். மறுநாள் சுவாமி வந்து விடுவான். ஒண்ணாம் தேதி

    'இன்று மாலை எங்கள் தோட்டத்திற்குப் போவோம்' என்றான்.

    'எங்கே இருக்கு?'

    'இங்கிருந்து எட்டு மைல் தொலைவில் இருக்கு மாலை அங்கே போய் வரலாம்.

    'சரி' என்றான்.

    அவன் உற்சாகமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினான். நண்பனிடம் கேட்டு கார் கொண்டு வந்தான். பழங்கள், பிளாஸ்கில் காபி மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தினான்.

    கார் தோட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருந்த போது கேட்டான். 'இரவு அங்கேயே தங்கி விடுவோம்'

    'அய்யோ!'

    'ஏன்? என்ன ஆச்சு?'

    'எனக்கு விருப்பம் இல்லை' என்றாள் அவள்.

    'இப்படி வருவது கூட எனக்கு விருப்பம் இல்லை.'

    'ஆனால் மாட்டேன் என்று சொன்னால் நீங்க வருத்தப்படுவீங்க என்றுதான் வந்தேன்.'

    கார் தோட்டத்து கெஸ்ட் ஹவுஸ் முன்னால் நின்றது. பழக்கூடை, பிளாஸ்க் முதலியவற்றை வேலையாளைக் கொண்டு உள்ளே வைக்க ஏற்பாடு செய்தான். சிகரெட் வாங்க பணம் கொடுத்து வேலைக்காரனை வெளியில் அனுப்பி விட்டான்.

    மாமரத்திலிருந்து வீசியகாற்று மனதிற்கு இதமாக இருந்தது. எங்கேயோ குயில் ஒன்று கூவியது.

    அவன் அவளை நெருங்கி தோள்களில் கைகளை பதித்து முத்தமிடப் போனான்.

    'வேண்டாம்.'

    'ஏன்?'

    'கல்யாணமான

    Enjoying the preview?
    Page 1 of 1