Aayiram Nilavey Vaa!
By Shrijo
3.5/5
()
About this ebook
Read more from Shrijo
Azhagiya Vizhigaliley! Rating: 5 out of 5 stars5/5Andhi Nera Thendral Kaatru! Rating: 4 out of 5 stars4/5Nenjirukkum Varaikkum! Rating: 1 out of 5 stars1/5Manathodu Mazhai Vaasam! Rating: 3 out of 5 stars3/5Nenjaankoottil Neeye Nirkkirai Rating: 0 out of 5 stars0 ratingsSanthana Thendral Rating: 4 out of 5 stars4/5Then Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Pani Vizhum Malarvanam! Rating: 4 out of 5 stars4/5Vaigai Nadhi Orathiley! Rating: 4 out of 5 stars4/5Shrijovin Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Malare! Rating: 3 out of 5 stars3/5Nenjirukkum Varai!!! Rating: 4 out of 5 stars4/5Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5
Related to Aayiram Nilavey Vaa!
Related ebooks
Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Then Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Kaadhalum Kutrame... Rating: 4 out of 5 stars4/5Minminigal Kann Simittum!! Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsSudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Neeyenge Ninaivugalange Rating: 2 out of 5 stars2/5Unnai Kandu Uyirthean Rating: 4 out of 5 stars4/5Uyir Unarum Va(li)zhiyo Kaadhal Rating: 3 out of 5 stars3/5Rajanodu Rani Vanthu Serum! Rating: 4 out of 5 stars4/5Ilakkanam Maarumo Rating: 4 out of 5 stars4/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai? Rating: 5 out of 5 stars5/5Sippi Vantha Muthu... Rating: 4 out of 5 stars4/5Mun Anthi Saral Nee... Rating: 5 out of 5 stars5/5Swasamadi Nee Enakku Rating: 4 out of 5 stars4/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsVettiveru Vaasam... Rating: 2 out of 5 stars2/5Vaarayo Vennilave! Rating: 5 out of 5 stars5/5Unaithean Ena Naan Ninaithean... Rating: 4 out of 5 stars4/5Unathuravil Naan Kalanthean... Rating: 5 out of 5 stars5/5Kaathirunthean Kaadhalane... Rating: 4 out of 5 stars4/5Sonthamadi Nee Enakku! Rating: 4 out of 5 stars4/5Vaasal Vantha Vanaville Rating: 5 out of 5 stars5/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Hello... Mister Yethirkatchi! Rating: 5 out of 5 stars5/5Nesa Kavithai Solladi Rating: 4 out of 5 stars4/5
Reviews for Aayiram Nilavey Vaa!
10 ratings0 reviews
Book preview
Aayiram Nilavey Vaa! - Shrijo
http://www.pustaka.co.in
ஆயிரம் நிலவே வா!
Aayiram Nilavey Vaa!
Author :
ஸ்ரீஜோ
Shrijo
For more books
http://www.pustaka.co.in/home/author/shrijo
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
ஆயிரம் நிலவே வா!
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் – 1
சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்!
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடும் கிண்கிணி ஆடும்!
என அந்த வீட்டில் சஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டு இருந்தது.
அந்த அதிகாலை வேலையில், அந்த வீட்டின் பெரியவர்கள் முக்கிய வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.
பெண்கள் சமையல் அறை பக்கமும், கூடத்து பக்கமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தனர்.
வேலையாட்கள் ஒரு பக்கம் வீட்டை ரெண்டாக்கிக் கொண்டு இருந்தனர்.
நடுக்கூடத்தில் போடப்பட்டு இருந்த மேடை, அங்கு யாருக்கோ திருமணம் என்று சொல்லாமல் சொல்லியது.
வெகு சில உறவினர்களே குழுமி இருந்தாலும், அங்கு திருமணத்திற்குரிய பரபரப்பு இல்லாமல் இல்லை.
அந்த சுபயோகம் கூடிய சுப தினத்தில், நல்ல நேரத்தில், முப்பது முக்கோடி தேவர்களின் ஆசியில், அக்னி சாட்சியாக, வெண்ணிலாவின் சங்கு கழுத்தில் ஆதவன் தன் இரும்புக்கரங்களினால் தாலி கட்டி, தன்னுடைய சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.
குழுமி இருந்த உறவினர்கள், பெரியோர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிகளை அட்சதை தூவி தெரிவித்தனர்.
அந்த திருமணத்தின் மகிழ்ச்சி முழுவதும், சில நிமிடங்களே நீடித்திருக்க, அடுத்த சில நிமிடங்களில், அந்த இல்லத்தின் நிலை முற்றிலும் மாறியது.
ஒட்டு மொத்த குடும்பமும் அந்த வீட்டின் ஆணிவேரை மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு விரைந்தனர்.
அந்த குடும்பத்தின் மூத்த குடிமக்கள், திருநாவுக்கரசு மற்றும் பார்வதி.
திருநாவுக்கரசு மற்றும் பார்வதிக்கு 3 மகன் 1 மகள். பார்வதி தனது தம்பி பெருமாளுக்கே தனது மூத்த மகள் மாதவியை மணமுடித்து வைத்தார்.
மூத்தவர் வரதராஜனுக்கு ஒரு மகன் நம் ஆதவன். இரண்டாம் மகன் குமாரசாமிக்கு ஒரு மகன் அஷோக். மூன்றாம் மகன் நந்தகோபனுக்கு ஒரு மகன் அரவிந்த். அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.
மாதவிக்கும் பெருமாளுக்கும் பிறந்தவள் தான் வெண்ணிலா. ஆதவனுக்கு அடுத்து தன் பெற்றோரை மழலைச் செல்வத்திற்கு பல வருடங்கள் ஏங்கவிட்டுப் பிறந்தவள். அதனாலும், ஒரே பெண் வாரிசு என்பதாலும் அனைவருக்கும் செல்லம்.
மருத்துவமனையில், சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்த, அரசு கண்ணீர் மல்க கடந்த சில வாரங்களாக நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகளை அசை போட்டார்.
ஒருநாள் காலை வேலை, அனைவரும் ஹாலில் கூட, வரதராஜன் பேச்சை ஆரம்பித்தார்.
மாமா, நாம புதுசா ஆரம்பிக்கற டிரான்ஸ்போர்ட் பிசினஸ யார் பேர்ல ஆரம்பிக்கலாம்.?
இதென்ன கேள்வி வரதா? வழக்கம் போல அக்கா பேர்ல ஆரம்பிக்க வேண்டியதுதான்.
இல்ல பெருமாளு. நாந்தான் பேரப்பிளைங்க பேர்ல ஆரம்பிக்க சொல்லி வரதன்ட்ட சொன்னேன்
என்று பார்வதி குறுக்கிட்டார்.
அக்கா சொன்னா சரி.
சரி யார் பேர்ல ஆரம்பிப்போம் பாரு?
என்று அரசு கேள்வி எழுப்பினார்.
இன்னைக்கு நம்ம ஜோசியர்கிட்ட, எல்லார் ஜாதகத்தையும் காட்டி கேட்டுட்டு வந்துடுவோங்க
என்று பார்வதி கூறினார்.
சரி புறப்படு
அப்ப சரி. நாங்க கிளம்பறோம்
என்று பெருமாளும், வரதனும் கிளம்பினர்.
குமாரசாமியும், நந்தகோபனும் இதற்கும் தங்களுக்கும் ஒரு சம்பந்தமுமே இல்லை என்பது போல அவர்கள் ஒருபக்கம் கிளம்பினர்.
பார்வதியும், அரசுவும் வீட்டில் உள்ள ஜாதகங்களை எடுத்துக்கொண்டு புதிய தொழில் துவங்க ஆலோசனை கேட்க அவர்களின் குடும்ப ஜோதிடரை அணுகினர். அன்று ஆரம்பித்தது வினை.
அத்தியாயம் – 2
வாங்கம்மா! வாங்கையா! நல்லா இருக்கீங்களா?
இருக்கோம் சாமி. நமக்கு புதுசா டிரான்ஸ்போர்ட் தொழில் ஆரம்பிக்கறோம். யார் பேர்ல ஆரம்பிக்கலாம் அப்படின்னு சொல்லுங்க?
பேஷா சொல்லிடறேன்
என்றவர் ஜாதகங்களை ஆராய்ந்தார். அவர் முகவாட்டம் சரி இல்லாதது போல அவர்களுக்கு தோன்றியது.
நம்ம வெண்ணிலா பேர்லயே பேஷா ஆரம்பிக்கலாம். ஆனா ஒரு சிக்கல்
என்ன சாமி?
என்று அரசு கேட்க,
நம்ம வெண்ணிலா ஜாதகப்படி அவளுக்கு கண்டம் இருக்கு. அதும் இல்லாம ஆயுள் குறைவா இருக்கு
என்ன சாமி இப்படி சொல்லறிங்க?
என்று அரசு கேட்க,
ஜாதகப்படி ஆயுள் குறைவாக இருப்பதாக அவர் கூற அங்கேயே பார்வதிக்கு பாதி உயிர் போய் விட்டது.
"இந்த விஷயம்