Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhikul Oru Ulagam
Vizhikul Oru Ulagam
Vizhikul Oru Ulagam
Ebook128 pages59 minutes

Vizhikul Oru Ulagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580100600029
Vizhikul Oru Ulagam

Read more from Devibala

Related to Vizhikul Oru Ulagam

Related ebooks

Reviews for Vizhikul Oru Ulagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhikul Oru Ulagam - Devibala

    http://www.pustaka.co.in

    விழிக்குள் ஒரு உலகம்

    Vizhikkul Oru Ulagam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books
    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    "இ

    ரு! ஒனக்கு திருஷ்டி கழிச்சுப் போடறேன்! அப்படியே உக்காரு!"

    கை நிறையப் பரிசுக் கோப்பைகளுடன் வந்திருந்த சாரிகா, பாட்டியைப் பெருமையுடன் பார்த்தாள்.

    பாட்டி வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வந்து திருஷ்டி கழித்தாள் சாரிகாவுக்கு.

    எல்லாப் போட்டிகள்லேயும் நான்தான் ஃபர்ஸ்ட் பாட்டி!

    என் கண்ணு! உங்கம்மாதான் எதையும் பார்க்கக் குடுத்து வைக்கலை! உங்கப்பாவுக்கும் அதிர்ஷ்டம் இல்லை. ரெண்டு பேரும் உன்னை எங்கிட்டத் தந்துட்டுப் போய்ச் சேர்ந்துட்டாங்களே!

    பாட்டி கண் கலங்கினாள்.

    ஏன் பாட்டி அழற? எனக்கு விவரம் தெரிஞ்ச முதல் எல்லாமே நீ தான், உன்னை விடவா ஒருத்தர் உசத்தி?

    என் கண்ணு!

    பாட்டி அவளைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

    சரி… சரி…! போய் ட்ரஸ் மாத்தி, முகம் கழுவிட்டு வா! டிபன் எடுத்து வைக்கறேன், பசி பொறுக்காது ஒனக்கு!

    ஏன் பாட்டி, மாமாகிட்டேயிருந்து லெட்டர் வந்து ரொம்ப நாள் ஆனமாதிரி இல்லை?

    ஒரு வாரமாச்சு!

    இந்த மாமா சுத்த மோசம்! டில்லிக்குப் போன புதுசுல வாரத்துக்கு ரெண்டு லெட்டர் தவறாம வரும். ரெண்டு வருஷத்துல அது குறைஞ்சு இப்ப வாரத்துக்கு ஒண்ணு போடறதே கஷ்டமா இருக்கு. வரட்டும் பேசிக்கிறேன்!

    அவன் வந்து எட்டு மாசமாச்சு!

    உடனே புறப்படுன்னு நீ தந்த மாதிரி தந்தி தரட்டுமா பாட்டி?

    எதுக்குடி? பயந்து நடுங்கிப் போயிடுவான். அதெல்லாம் வேண்டாம். வட நாட்டில் வேலை பாக்கறான். என்ன பிரச்னையோ?

    மாற்றல் வாங்கிட்டு வந்து சேர வேண்டியது தானே?

    அவன் கையிலேயா இருக்கு, கேட்டதும் கிடைக்க?

    உன் புள்ளையைச் சொன்னா, பொறுக்காதே ஒனக்கு!

    இந்த வருஷத்தோட படிப்பு முடியுது ஒனக்கு! முடிஞ்சதும் உன்னை அவனுக்குக் கட்டி வச்சிரணும், நீயும் டில்லி போய்ச் சேரு! எனக்கு நிம்மதி!

    நான் உன்னை என்ன செஞ்சேன் பாட்டி?

    உன் கொட்டம் தாங்கலை வரவர!

    பாட்டி! அடுத்த வருஷமே நான் கல்யாணம் செஞ்சுக்கணுமா?

    வேண்டாமா பின்ன?

    இப்பவே பண்ணி வைச்சிரு பாட்டி!

    "அடி ராட்சஸி! அத்தனை அவசரமா ஒனக்கு? உன் மாமன் வரட்டும் சொல்றேன்!’

    பாட்டி கை ஓங்க, சிரித்தபடி ஓடினாள் சாரிகா.

    படிப்பு, விளையாட்டு, கவிதை, இசை என சாரிகா எதையும் விட்டு வைப்பதில்லை. வீட்டில் சமையல் வேலைகளிலும் பாட்டிக்கு உதவுவாள். கல்லூரியில் அஷ்டாவதானி! மாணவர்களும் படிக்கும் கல்லூரி அது. சாரிகாவைப் பார்த்து பெருமூச்சு விடாத பையன்கள் இல்லை. காதல் கடிதம் தந்தவர்களின் பட்டியல் ஒன்று பெரிதாக உண்டு.

    பேராசிரியர் ஒருவரே தன் விருப்பத்தை சாரிகாவிடம் தெரிவித்த கதைகூட அங்கே உண்டு.

    சாரிகா சகலத்துக்கும் ஒரு சிரிப்பை பதிலாகத் தந்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பாள்.

    யாரிடமும் கோபப்பட மாட்டாள்.

    ஆனால் பிடிவாதக்காரி. ஒன்றை நினைத்தால், அதைச் சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதம்.

    புருஷன் வைத்துவிட்டுப் போன ஒரு சொந்தவீடும் வங்கியில் போதுமான பணமும் இருந்ததால் அன்னபூரணி பாட்டிக்குப் பிள்ளையைப் படிக்க வைப்பதில் கஷ்டமில்லை.

    எம்.பி.ஏ. முடித்த மணிகாந்த் டில்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகச் சேர்ந்து விட்டான்.

    சென்னைக்கு மாற்றலுக்கு இடைவிடாத முயற்சிகள். அவன் வந்ததும், சாரிகாவை அவனுக்குக் கல்யாணம் செய்துவிட பாட்டி தயாராக இருந்தாள்.

    காலையில் சாரிகா தயாராகிக் கொண்டிருந்தாள்.

    நேரமாகலையா சாரிகா?

    வந்துட்டேன் பாட்டி! டிபன்பாக்ஸ் ரெடியா? இப்ப எனக்கு சாப்பிட நேரமில்லை. நான் புறப்பட்டாச்சு!

    ஒனக்கு இந்தக் கடைசி நிமிஷ அவசரம்தான் எப்பவும். காலைல கொஞ்சம் சீக்கிரமா எழுந்தா, இந்த அரிபரி இருக்குமா?

    புலம்பாதே பாட்டி!

    புத்தகங்களை எடுத்துக் கொண்டு சாரிகா ஹாலுக்கு வர, வாசலில் அந்த சீலோ கார் வந்து நின்றது.

    பாட்டி! யாருன்னு பாரு?

    பாட்டி வாசலுக்கு வந்தாள். காரை விட்டு இறங்கிய அந்த ஸபாரி ஆசாமி, கண்ணாடியை ஏற்றிவிட்டபடி படியேறி வந்தார்.

    சாரிகா வீடு இதுதானே?

    ஆமாம்! நீங்க யாரு?

    நான் உள்ளே வந்து பேசலாமா?

    தாராளமா! வாங்க!

    அவர் உள்ளே வந்தார். மேலும் கீழுமாகப் பார்த்தார்.

    ஒக்காருங்க!

    தேங்க் யூ! உட்கார்ந்தார்.

    அம்மா! நான் சாரிகா படிக்கற காலேஜ் ட்ரஸ்டிகள்ல ஒருத்தன். என் பேரு மகாலிங்கம்! கல்யாணி கன்சாலிடேட்ஸ்னு கேள்விப்பட்டதுண்டா நீங்க?

    தெரியலை!

    பல நிறுவனங்களைக் கொண்ட க்ரூப் கம்பெனி அது! அதோட சேர்மன் நான். பல கோடிகளுக்கு அதிபதி!

    அவரே பேசட்டும் என பாட்டி மௌனமாக இருந்தாள்.

    நீங்களும் ஒக்காருங்கம்மா!

    இருக்கட்டும்!

    "நீங்க சாரிகாவுக்கு அம்மாவா?

    இல்லை! பாட்டி!

    சாரிகா வெளியே வந்தாள். பாட்டி எனக்கு நேரமாச்சு! நான் போயிட்டு வர்றேன்!

    ஒரு நிமிஷம் நில்லம்மா! என் கார்ல உன்னை நானே காலேஜ்ல ட்ராப் பண்றேன். நான் பேசும் போது நீயும் இருந்த நல்லதுன்னு நினைக்கறேன்!

    சாரிகா நின்றாள்.

    நேத்து காலேஜ் பங்ஷன்லதான் உங்க பேத்தியை நான் முதன் முதலா பார்த்தேன்மா. அசந்து போயிட்டேன். இத்தனை புத்திசாலியா, அழகா ஒரு பெண் நம்ம காலேஜ்ல இருக்காளான்னு ஆச்சர்யப்பட்டேன்!

    பாட்டி சாரிகாவைப் பார்த்தாள்.

    எனவே, நான் இனிமேலும் நேரத்தை வீணாக்க விரும்பலை! விஷயத்துக்கு வர்றேன்!

    சற்று இடைவெளி விட்டார்.

    என் ஒரே பிள்ளை கீர்த்தி அடுத்த வாரம் லண்டன்லேருந்து பிஸினஸ் மானேஜ்மெண்ட் முடிச்சிட்டுத் திரும்பறான். திரும்பினதும் இங்கே பல பொறுப்புகளை ஏத்துக்கப் போறான். அவனுக்கு அழகா, புத்திசாலியா ஒரு வாழ்க்கைத் துணை வேணும். அது சாரிகா தான்னு நேத்தே நான் முடிவு பண்ணிட்டேன்."

    சாரிகா சடாரென அவர் பக்கம் திரும்பினாள்.

    "இரும்மா! இப்படி அதிரடியா நான் வந்து பேசறது உங்க ரெண்டு பேருக்கும் ஆச்சர்யமா அல்லது அதிர்ச்சியாக்கூட இருக்கலாம். பட், அது என் சுபாவம்! நூன் மனசுல ஒண்ணை நினைச்சுட்டா, அதை உடனடியா செயல்படுத்தியே ஆகணும். இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1