Vaasamilaa Malaridhu
By Devibala
4.5/5
()
About this ebook
Reviews for Vaasamilaa Malaridhu
2 ratings1 review
- Rating: 4 out of 5 stars4/5the love explained and the lectures character all different also nandhini character
1 person found this helpful
Book preview
Vaasamilaa Malaridhu - Devibala
http://www.pustaka.co.in
வாசமில்லா மலரிது
Vaasamilla Malaridhu
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
1
"கா
ஞ்சனாவுக்கு இன்னிக்குக் காதல் கடிதம் தரப்போறேண்டா."
மரக்கட்டைக்கா?
ஆமாம்.
அதைவிட குட்டிசுவத்துல போய் முட்டிக்கோ.அவ மனுஷியா, இல்லை ரோபோட்டானு சந்தேகமா இருக்கு.இதுவரைக்கும் நாலஞ்சுபேர் பலவிதமா அவகிட்ட முயற்சி செஞ்சாச்சு.இப்ப உன் தலைவிதி.ம்! கஷ்ட காலம் யாரை விட்டது?
ரமணி ஏராளமான காகிதங்களை வீணாக்கி, ஒரு மணி நேரத்தில் ஒரு காதல் கடிதம் தயாரித்தான்.
சரியா இருக்கா பாருடா முரளி.
ஸ்டாம்ப் போட்டு, நோட்டரி பப்ளிக்கிட்ட ஒரு கையெழுத்தும் வாங்கிடு.
மற்றவர்கள் சிரித்தார்கள்.
மணியடித்தது நீளமாக.
வேண்டா வெறுப்பாக எழுந்து போனார்கள், அந்த நாலுபேரும்.அது ஆங்கில இலக்கிய வகுப்பு.ஆண்களும், பெண்களும் இணைந்து படிக்கும் கலைக் கல்லூரி.
பி.ஏ. இலக்கியம்.மூன்றாவது வருடம்.
இந்த மூன்று வருடங்களாக அந்தக் கல்லூரியின் கனவுக் கன்னி காஞ்சனா.
அழகென்றால் அப்படி ஒரு அழகு அவளுக்கு.அதனால் மாணவர்கள் அவளை சைட் அடிப்பதும், காதல் கடிதம் தருவதும், பின்தொடர்ந்து வீடுவரை வருவதுமாக ஒரு பட்டாளமே அவள் பின்னால் இயங்கிக்கொண்டு இருக்கிறது.
படிப்பிலும் பிரமாத கெட்டிக்காரி காஞ்சனா.முதல் மாணவி அவள்தான் வகுப்பில்.
யாருடனும் சேரமாட்டாள்.சக பெண் தோழிகளிடம் இருந்துகூட விலகித்தான் இருப்பாள்.அவர்கள் மத்தியில் அவளுக்கு ‘சிடுமூஞ்சி’ பட்டம்.மாணவர்கள் அவளை மட்டுமே காதலிப்பதால் பொறாமை, எரிச்சல், கோபம் எல்லாம்.
எந்த ஒரு போட்டியிலும் கல்லூரியில் கலந்துகொள்ளமாட்டாள்.விழாக்களை தவிர்த்துவிடுவாள்.யார் வீட்டுக்கும் கெஞ்சி அழைத்தாலும் போகமாட்டாள்.
அவள் சிரித்து யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை.கல்லூரியில் முதல்வர் வரை அவளது இந்த கல் போன்ற இறுக்கம் பிரசித்தம்.காரணம் யாருக்கும் தெரியாது.ஆனால் அவளிடம் ஒரு மெலிதான அச்சம் சகலருக்கும் உண்டு.
வகுப்பு ஆரம்பிக்க சில நொடிகளே இருந்தன.
‘இன்னிக்குப் புது புரொபசர் வரப் போறார்டா.’
சொல்லி முடித்ததும் ஒருவன் நீளமாக விசிலடித்தான்.
‘வந்ததும் அந்த ஆள் மிரண்டு ஓடணும்.பாடம் நடத்த விடக்கூடாது.செய்யலாமா?’
ஒருவன் கேட்க, மற்றவர்கள் அதை ஆமோதித்தார்கள்.
ரமணிக்கு காஞ்சனாவிடம் காதல் கடிதத்தை எப்படி சேர்ப்பது என்ற கவலை.
புதுப் பேராசிரியர் நுழைந்தார், உள்ளே.
நீளமான விசில், காகித அம்புகள், கொஞ்சம் கெட்ட வார்த்தைகள் என வரவேற்பு பலமாக இருந்தது.
அவர் சிரித்தபடி உள்ளே நுழைந்தார்.
வரப் போவது வயதானவர் என்று நினைத்த மாணவர்கள் சன்னமாக அதிர்ந்தார்கள்.ஏறத்தாழ தங்களைவிட நாலைந்து வயது மூத்தவராக இருக்கக் கூடும்.அழகான இளைஞர்.வசீகரமான சிரிப்புடன் மேடையில் அவர் ஏற, ஒரு நொடி அந்த இளைஞரை சகலரும் ரசித்தார்கள், காஞ்சனாவைத் தவிர.
‘இன்னிக்கு பாடம் இல்லை.’
‘அப்ப நாளைக்கு?’
‘நீங்களா கேக்கற வரைக்கும் நான் பாடம் நடத்தப் போறதில்லை.’
‘நாங்க கேக்கவே மாட்டோம்.’
‘சந்தோஷம்.’
‘உனக்கெதுக்கு சம்பளம்? வெளியே போ.’
‘உன் பேரென்ன?’
‘சித்தார்த்.’
‘புத்தனா நீ? நம்ம காலேஜ் வாசல்ல போதிமரம் ஒண்ணு இருக்கு.போய் உட்காரு.’
அவர்களே பேசட்டும் என்று மெலிதான ஒரு சிரிப்புடன் மவுனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தான் சித்தார்த்.
அலைகள் ஓய பதினைந்து நிமிடங்கள் ஆனது.
‘இப்ப நான் பேசலாமா?’
"கூவு நைனா.’
பலத்த சிரிப்பு.அலை அலையாய் எழுந்தது.
‘இன்னா கூவறது தலைவரே? ஒங்களாண்ட பேஜாராக்கீதே.இன்னாபா.’
அவர்கள் பாஷையில் சித்தார்த் பேச விசில் பறந்தது.சற்று நேரத்தில் அவர்களுக்கு ஈடு கொடுக்கத் தொடங்கிவிட்டான்.மணியடித்தது.
வகுப்பு முடிந்த விஷயமே யாருக்கும் தெரியாத அளவுக்கு நேரம் ஓடிவிட்டது.
நன்றி சொல்லி சித்தார்த் வெளியேற, மாணவர்களும் வெளிப்பட்டார்கள்.
‘டேய் ஜாலியா இருக்கார்டா புது புரொபசர்.இத்தனை குஷியா வேற யாரும் இல்லை இந்தக் காலேஜ்ல.’
‘இவரை விடக்கூடாது.சமீபத்துலதான் படிப்பை முடிச்சிருக்கார்.அதான் மாணவர்களோட உணர்ச்சிகளும், உற்சாகமும் அவரை விட்டு விலகலை.’
‘நேரா அவர் கேபின்ல போய் பார்த்து ஒரு சாரி சொல்லி, பரஸ்பர அறிமுகம் செஞ்சுக்கணும்.’
அந்த வகுப்பின் சண்டியர், முக்கியமான போராட்டங்களில் கலந்துகொள்ளும் பிரதிநிதி, ‘ரவுடி’ எனப் பரவலாகப் பேசப்படும் எட்வின் நடுவில் இருக்க, மற்றவர்கள் அவனைச் சூழ்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அடுத்த வகுப்புக்கு இடம் மாற, மைதானத்தில் காஞ்சனா மட்டும் நடந்துகொண்டு இருந்தாள்.
ரமணி பின்னால் ஓடி வந்தான்.
‘காஞ்சனா.’
காதில விழுந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் காஞ்சனா நடந்தாள்.
ஓடி வந்து முன்னால் அவளை வழிமறித்தான்.
‘இந்த லெட்டரைப் படி காஞ்சனா!’
அவள் கையில் திணித்தான் ரமணி.
அதைப் பொடிப் பொடியாகக் கிழித்து மைதானத்தில் போட்டுவிட்டு சலனமில்லாமல் தொடர்ந்து அவள் நடக்க, காகிதத் துண்டுகள் சிதறிப் பறக்க ஆரம்பித்தன.
ரமணிக்கு இது புது அனுபவம்.பலபேரின் பழைய கதைத்தான் இது.
அடுத்த வகுப்பும் முடிந்து உணவு இடைவேளை வர, கேண்டீனில் ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்து காஞ்சனா சாப்பிடத் தொடங்கினாள்.
மாணவிகள் வந்து அவளைச் சூழ்ந்துகொண்டார்கள்.
‘காஞ்சனா!’
நிமிர்ந்தாள்.
‘பாய்ஸ் எல்லாம் புது லெக்சரர் சித்தார்த்கிட்டப் போய் அறிமுகம் செஞ்சுகிட்டாங்க.எல்லாருக்கும் சாக்லெட் குடுத்து வரவேற்பு தந்திருக்கார்.பசங்க புகழ்ந்து தள்ளறாங்க.ஒரே நாள்ல சிநேகிதராயிட்டார்.நாமும் எல்லாருமா அவரை சந்திச்சு பழக்கப்படுத்திக்கணும்.குரூப்பா போறோம் நீயும் வா!’
காஞ்சனா பேசவில்லை.
அவ வரமாட்டாடீ யார் வந்தா என்ன? போனா என்ன? அவளுக்கு எல்லாம் ஒண்ணுதான்.
"வாழ்க்கைல கல்லூரி நாட்கள் எல்லாருக்கும் வாய்க்காது.சுமைகள், பொறுப்புகள் எதுவுமே இல்லாத சந்தோஷக் கனவுகள் நிறைஞ்ச நேரங்கள்.இதை அந்த அளவுக்கு