Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagiya Penney
Azhagiya Penney
Azhagiya Penney
Ebook108 pages50 minutes

Azhagiya Penney

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100900153
Azhagiya Penney

Read more from Pattukottai Prabakar

Related to Azhagiya Penney

Related ebooks

Reviews for Azhagiya Penney

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagiya Penney - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    அழகிய பெண்ணே!

    Azhagiya Penney!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    வனுக்கு அந்த மருத்துவமனையை மிகவும் பிடித்திருந்தது.

    சில கட்டிடங்கள் கம்பீரமாக, அழகாக நிமிர்ந்து நிற்கும். ஆனால் மனதிற்கு ஒரு ஒட்டுதல் ஏற்படாது. சில கட்டிடங்கள் மிக எளிமையாக இருக்கும். ஆனால் பார்த்ததுமே ஒரு நெருக்கம் மனதில் ஏற்படும்.

    எல்லாக் கட்டிடங்களிலுமே அதே சிமெண்ட், அதே செங்கல், அதே பெயிண்ட்தான் என்றாலும்கூட இந்த ஈர்க்கும் தன்மையிலான வித்தியாசம் அவனைப் பலமுறை சிந்திக்க வைத்திருக்கிறது.

    அந்த தனியார் மருத்துவமனை நகர அவசரங்களில் இருந்து, சந்தடிகளில் இருந்து சற்று விலகி அமைந்திருந்ததே முதல் சிறப்பம்சம். அடுத்து..முக்கிய கட்டிடத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும் அழகான தோட்டம்.

    ஏதோ ஊட்டி தாவரவியல் பூங்காவிற்குள் நுழைந்து விட்டதைப் போல பூமிக்கு சீராக வெட்டப்பட்ட பச்சைத் தலைமுடியாய் புல்வெளி, விதவிதமான செடிகள், மரங்கள், நிழல்கள், குளிர்ச்சி, பறவைகள், உறுத்தாத அவற்றின் குரல்கள், செயற்கை நீரூற்றுகளில் வற்றாமல் உழைக்கும் தண்ணீர், அங்கங்கே அமர்ந்துகொள்ள சிமெண்ட்டிலான பெஞ்சுகள்.

    முதல்முறையாக பிரவேசிப்பவர்கள், தவறுதலாக ஒரு பூங்காவிற்குள் நுழைந்து விட்டோமோ என்று தயங்கி விட்டு மீண்டும் ஒருமுறை ‘பிரியா மருத்துவமனை’ எனும் பெயர் பலகையைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே நுழைகிறார்கள்.

    மருத்துவமனைக்கு என்று ஒரு தனியான வாசனை இருக்குமே. அது இங்கு கிடையவே கிடையாது.

    நாளைக்கு அக்டோபர் இரண்டாம் தேதி என்றால் இன்றைக்கு காந்தித் தாத்தாவை குருவிகளின் அபிஷேகங்களில் இருந்து மீட்டு சுத்தம் செய்து பளபளவென்று துடைத்து முதல்வர் வந்து மாலை போடத் தோதாக வைத்திருப்பார்களே, அந்த மாதிரி… இந்த ஆஸ்பத்திரியில் காலையும், மாலையும் கூட்டித் துடைத்து சுத்தம் செய்தால்….

    ஒரு வெற்றிலைக் காம்போ, உபயோகித்த தீக்குச்சியோ, துண்டுக் காகிதக் குப்பையோ இங்கே கிடையாது.

    இங்கே வருபவர்களுக்கும் இந்த சூழலைப் பார்த்தால் சத்தம் போட்டுப் பேசத் தோன்றாது. சுவர்களில் சுண்ணாம்பு தடவத் தோன்றாது. சிகரெட்டைப் பற்ற வைக்கத் தோன்றாது. தும்மலைக்கூட அடக்கிக்கொள்ளத் தோன்றும்.

    இந்த மருத்துவமனையில் மொத்தம் ஏழு டாக்டர்கள். தவிர பல துறை நிபுணர்கள் வந்து போவதுண்டு. முப்பத்தி இரண்டு நர்சுகள். பனிரெண்டு வார்டு பையன்கள். எட்டு ஆயாக்கள். மூன்று வாட்ச்மேன்கள்.

    பொதுவார்டுகள் மட்டும் ஏழு உள்ளன. தனித்தனி அறைகள் அறுபதுக்கும் மேல். மூன்று அறுவை சிகிச்சை அறைகள். மருத்துவமனையின் எல்லைக்குள்யேயே இதே நிர்வாகத்தின் கீழே இயங்கும் மருந்துக் கடையும் உண்டு.

    இவ்வளவு துல்லியமாக இந்த மருத்துவமனை பற்றி தகவல்கள் அவன் தெரிந்து வைத்துள்ளதை வைத்து அவனை ஒரு டாக்டராக நினைத்துவிட வேண்டாம்.

    பதினைந்து தினங்களாக அறை எண் பதினெட்டில் தங்கி சிகிச்சை பெற்று வரும் அவன், ஆனந்த்.

    வயது-இருபத்தி ஏழு. மிகவும் திடகாத்திரமானவன்-பதினைந்து நாட்களுக்கு முன்வரையில், இவன் சென்ற மோட்டார்பைக்கில் ஒரு ஆட்டோக்காரன் வந்து மோதாத வரைக்கும்.

    வலது கையிலும், வலது தொடையிலும் எலும்பு முறிந்து. ஏராளமான இரத்தம் வெளியேறி, சந்தேகம்தான் என்கிற நிலையில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டு… அபாயக் கட்டம் தாண்டிவிட்டவன்.

    அறையின் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு கையில் பழங்கள் நிறைந்த பிளாஸ்டிக் கூடையுடன் உள்ளே வந்தான் சேது.

    என்ன சேது, இன்றைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே? என்றான் ஆனந்த்.

    சேது கூடையை சிறிய மேசை மேல் வைத்துவிட்டு மர நாற்காலியை அவன் அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

    ஆபிசிலேர்ந்து ரூமுக்குப் போகாமல் நேரா இங்கே வந்துட்டேன். எப்படி இருக்கு உனக்கு? கட்டு மாத்தினாங்களா?

    நாளைக்குத்தான் மாத்தறாங்க.

    சேது தன் பாக்கெட்டில் இருந்து ஒரு தபால் கவரை எடுத்தான்.

    ஊரில் இருந்து உங்கப்பா எழுதியிருக்காரு ஆனந்த்.

    பிரி….. பிரிச்சி வாய்விட்டுப் படிச்சுக் காமி…

    சேது கிழித்து உள்ளிருந்த காகிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்தான்.

    "அன்புள்ள ஆனந்துக்கு அப்பா எழுதிக் கொண்டது. இங்கு யாவரும் நலம். நீ அங்கு நலமா? சில வாரங்களாகவே உன்னிடமிருந்து கடிதம் எதுவும் இல்லை. வாரம் ஒருமுறை. கண்டிப்பாக நீ கடிதம் எழுதிவிடுவாய். ஏன் எழுதவில்லை? அலுவலகத்தில் வேலை அதிகம் என்று நினைக்கிறேன். உனக்கு இந்த வருடத்தில் திருமணம் முடிக்க வேண்டுமென நானும், உன் அம்மாவும் மிகவும் விரும்புகிறோம். உனது ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டியதில், கல்யாண வேளை நெருங்கி விட்டதாகச் சொன்னார். நமது தஞ்சாவூர் மாமா மூலமாக இரண்டு மூன்று பெண்களின் ஜாதகங்கள் வந்தன. பொருத்தம் பார்த்ததில் அவற்றில் இரண்டு ஜாதகங்கள் உன் ஜாதகத்தோடு பொருந்தியுள்ளது. ஒரு பெண் கும்பகோணத்திலும், ஒரு பெண் நீடாமங்கலத்திலும் உள்ளது. அடுத்த வார இறுதியில் நீ விடுமுறை போட்டுவிட்டு வந்தால் நாம் சென்று இரண்டு பெண்களையும் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இந்தக் கடிதம் கண்டதும் நீ உடனே பதில் எழுதவும். உன் பதில் பார்த்து,

    Enjoying the preview?
    Page 1 of 1