Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thayangaathey
Thayangaathey
Thayangaathey
Ebook103 pages53 minutes

Thayangaathey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545412
Thayangaathey

Read more from Pattukottai Prabakar

Related to Thayangaathey

Related ebooks

Reviews for Thayangaathey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thayangaathey - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    தயங்காதே

    Thayangaathey

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    ன்னும் விழித்துக் கொள்ளாமல் தூக்கக் கலக்கத்துடன் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தது 172 சதுரகிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்ட ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும் தமிழில் சென்னை என்றும் அழைக்கப்படுகிற தமிழகத்தின் தலைநகரம்.

    மின்சார தொலைபேசிக் கம்பிகள் சேகரித்து வைத்திருந்த பனித்துளிகளைத் திரட்டி முத்துக்கள் சிந்திக் கொண்டிருந்தன. கரைத்து வைத்த மாட்டுத் தீவனம் போல கலங்கலாக இருந்தது கிழக்கு வானம். இன்னும் சில நட்சத்திரங்கள் பிரியாவிடை பெற்றுக் கொண்டிருக்க கடற்கரையை நோக்கி மீனவப் படகுகள் திரும்பிக் கொண்டிருந்தன. புளி போட்டு பளபளப்பாக தேய்க்கப்பட்ட பாய்லர்களுக்கு குங்குமமிட்டு ஊதுபத்தி கொளுத்தி டீ வியாபாரம் துவங்கப்பட்டிருந்தது.

    எந்திரி ராஜாத்தி என்று நைட்டியில் குப்புறப்படுத்து தலையணையை அணைத்துக் கொண்டிருந்தவளை தட்டுவதற்கு வாகான இடத்தில் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள் அவள் அம்மா.

    ராஜாத்தி புரண்டு ஒற்றைக் கண்ணால் பார்த்து மம்மி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன். ப்ளீஸ்மா என்றாள்.

    மணி அஞ்சாகுது. நீ ஜாகிங் போக வேணாமா?

    இன்னிக்கு லீவு விட்டுடலாம்மா. ப்ளீஸ்மா…

    அதெல்லாம் முடியாது. மாப்பிள்ளை உன்னை கிண்டல் செஞ்சது மறந்து போச்சா? கல்யாணமேடையில் உட்கார்றதுக்குள்ளே அஞ்சி கிலோ எடை குறைச்சி காமிக்கிறேன்னு சபதம் செஞ்சது நீயா நானா?

    ராஜாத்தி விருட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டுஅதானே என்றாள்.

    அம்மா சிரித்துக் கொண்டு அறையை விட்டுப் போனாள்.

    ராஜாத்தியை தூங்கி எழுந்த முகத்தோடு வர்ணித்தால் நன்றாக இருக்காது. வேண்டாம். விட்டு விடலாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

    ராஜாத்தி பாத்ரூம் சென்று பல் விளக்கி உடை களைந்து ஒடுவதற்கான ஜாகிங் சூட் அணிந்தாள். கேன்வாஸ ஷீ அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

    வாசலில் அவள் அப்பா அவளின் சைக்கிளைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

    குட்மார்னிங் டாடி. நீங்க போய் என் சைக்கிளை துடைக்கலாமா?

    துடைச்சா என்ன? போய்ட்டு வா. இன்னிக்கு ஈவினிங் வெளில எந்த புரோக்ராமும் வச்சிக்காதே.

    ஏன் டாடி?

    பாரீஸ் வரைக்கும் போய் மேரேஜுக்கு இன்விடேஷன் கார்ட்ஸ் செலக்ட் பண்ணி வாங்கிட்டு வந்துடலாம்.

    போங்க டாடி இன்னும் ஒரு மாசமிருக்கே.

    ராஜாத்தி சைக்கிளை ஸ்டாண்ட் எடுத்து ஓட்டத் துவங்கினாள்.

    அந்த பங்களாவின் வாசலில் நியூஸ் பேப்பர்கள் கேரியரில் பிதுங்க சைக்கிளை நிறுத்தின ஆசாமி கிரில் கேட் வழியாக ஒரு பேப்பரை சுருட்டி உள்ளே வீச… ஒரு நாய் ஓடிவந்து பேப்பரைக் கவ்விக் கொண்டு உள்ளே ஓடியதைப் பார்த்துக் கொண்டே சைக்கிளை மிதித்தாள் ராஜாத்தி.

    சுவர்களில் நள்ளிரவில் ஒட்டப்பட்ட புதிய போஸ்டர்களில் நடிகர் நடிகைகள் அடுத்த நாள் நள்ளிரவு வரை தான் அங்கே சிரித்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்பதை அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

    ராஜாத்தி பெசண்ட் நகரின் கடற்கரையோர சாலையின் ஓரமாக சைக்கிளை நிறுத்திப் பூட்டிக் கொண்டாள். இருட்டு விலக நினைத்தாலும் அதைப் பிடிவாதமாக இழுத்து நிறுத்தியிருந்த பனி. ஆயின்மென்ட் போட்டுக் கொண்ட கண்களால் பார்ப்பது போல காட்சிகள் தெளிவற்று கலங்கியிருந்தன.

    சாந்தோம் பீச்சில் போல இங்கே அதிகாலையில் ஓடுபவர்களும் நடப்பவர்களும் எண்ணிக்கையில் குறைவு. ராஜாத்தி காலை ஐந்தரை மணிக்கு சைக்கிளில் வந்து ஆறரை மணி வரை மணல் வெளியில் மெதுவாக ஓடிவிட்டுத் திரும்புவாள். அந்த நேரத்தில் அவள் அதிகம் போனால் ஏழெட்டு பேர்களைத்தான் பார்த்திருக்கிறாள். இவள் புறப்படும் போது நிறைய பேர் வர ஆரம்பித்திருப்பார்கள். நிறைய பேர்கள் ஓடும் போது ஓடினால் கொஞ்சம் கூச்சமாக இருக்கும் அவளுக்கு.

    கவனிக்கப்படுவாள். ஒரு பெண் ஓடும் போது இயற்கையிலேயே கவர்ச்சி அதிகரிக்கிற உடலமைப்புகள். அதிலும் ராஜாத்தி சாதாரண பெண்களைவிட சற்று அதிக புஷ்டி. பள்ளி நாட்களில்இருந்தே அப்படித்தான்.

    கல்லூரியில் இவளுக்கு டபுள்டெக்கர் என்று தனி நாமகரணம் சூட்டியிருந்தார்கள். அலுவலகத்தில் பாரதி இவளை ஆண்ட்டி பன் (அங்கிள் பன்னுக்கு எதிர்பதமாம்) என்பாள்.

    பெண் பார்த்துப் பிடித்துப் போனதும் மாப்பிள்ளை ராஜேஸ்வரன் அவளைத் தனியாகசந்தித்துப் பேச வேண்டும் என்று சொன்ன போது…

    ராஜாத்திக்கு கை கால்கள் வெடவெடா.

    ராஜாத்தி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்முகம் ரொம்ப ஸாஃப்ட்டா அழகா இருக்கு. ஆனாஉடம்புதான் கொஞ்சம் பிடிப்பா இருக்கு. அதை காரணம் சொல்லி நிராகரிக்க எனக்கு விருப்பமில்லை. நினைச்சா முடியாதது இல்லை. உடம்பை குறைக்கிறது நம்ம கைல நிச்சயமா இருக்கு. முயற்சி பண்ணு. கல்யாணத்துக்கு அப்புறம் நான் உனக்கு நிறைய எக்ஸர்சைஸஸ் சொல்லித் தர்றேன் என்று அவன் சொன்னதும்.

    ராஜாத்திக்கு சந்தோஷம் ரோஷம் இரண்டும் சேர்ந்து வந்தது.

    "ஏதோ அலட்சியமா இருந்துட்டேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1