Ezhavathu Jenmam
4/5
()
About this ebook
பி.எஸ்ஸி படித்து வேலை கிடைக்காத பார்த்தசாரதி என்ற பாச்சு தன் மாமாவுடன் சேர்ந்து கரண்டி பிடிக்கிறான். கௌரவம் பார்க்கவில்லை. கௌரவம் பார்த்தால் வயிறும் நிறையுமா? சமையல் வேலைக்குச் சென்ற இடத்தில் பத்மகிரியைச் சந்திக்க நேர்கிறது. அந்த சந்திப்பு அவன் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. நாமும் பிரத்யங்கராபுரம் சென்று பார்க்க வேண்டும் என்ற உணர்வை எழுப்பும். இந்த நாவலில் மோடிவித்தை, பீதாம்பர ஜாலம் என்று நிறைய வருகிறது. அது உண்மையோ, பொய்யோ நமக்கு கவலை இல்லை. கதை எழுதுவதில் ஆசிரியர் அந்த வித்தைகளை காட்டி நம்மை கதையோடு கட்டிப் போட்டு விடுகிறார்.
Read more from Indira Soundarajan
Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Sivam Rating: 4 out of 5 stars4/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Ore Oru Vaarthai Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5
Related to Ezhavathu Jenmam
Related ebooks
Ragasiyam Parama(n) Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Ettu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Manathukkuthan Karpu Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsAthirshtakkaatru Rating: 5 out of 5 stars5/5Thirakkathey Aabathu Rating: 5 out of 5 stars5/5Neela Neela Oodi Vaa Rating: 5 out of 5 stars5/5Aanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Rudhra Veenai - Part 2 Rating: 4 out of 5 stars4/5Aairam Jannal Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Sorna Regai Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Pon Magal Vanthal Rating: 5 out of 5 stars5/5Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Naga Vanam Rating: 5 out of 5 stars5/5Ainthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Vairam Vairam Vairam Rating: 5 out of 5 stars5/5Aindhu Vazhi Moondru Vaasal Rating: 3 out of 5 stars3/5Yaathumaki Nindral Rating: 5 out of 5 stars5/5Adhu Mattum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsInnum Sila Tajmahalgal Rating: 5 out of 5 stars5/5Nooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ezhavathu Jenmam
9 ratings0 reviews
Book preview
Ezhavathu Jenmam - Indira Soundarajan
http://www.pustaka.co.in
ஏழாவது ஜென்மம்
Ezhavathu Jenmam
Author :
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarrajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
1
ஆ
காயத்தைப் பார்க்க அழகாக இருந்தது. அதிலும் அதிகாலை ஆகாயமல்லவா? கிழக்கின் அடிப்பாகத்தில் மஞ்சள் வெளிச்சத்தின் கொப்பளிப்பும், விடியும் வேளையிலும் விடியாத நிலவின் கண்ணடிப்பும் பார்க்க ரம்யமாக இருந்தன.
எப்பொழுதும் அந்த காலைப் பொழுதில் ஒரு ஏழெட்டு நாரைகள் மேற்கிலிருந்து கிழக்காக ராணுவத்தில் பயிற்சி பெற்றது போல ஒரே நேர்கோட்டில் நூல் பிடித்த மாதிரி பறந்த படி செல்லும்.
எங்கே போகிறதோ?
எதற்கு போகிறதோ?
அவற்றை பார்த்தபடி மொட்டை மாடியில் படுத்துக் கொண்டிருக்கிறான் பாச்சு என்னும் பார்த்தசாரதி.
கையில் ஒரு டப்பா டிஜிட்டல் வாட்ச் கட்டியிருந்தான். பார்த்தான் மணி ஆறைக் கடந்து பத்து நிமிடமாகி விட்டிருந்தது.
"எழுந்து காரை பெயர்ந்த மாடிச் சுவரின் விளிம்பைத் தொட்டபடி போல் நின்று கொண்டு வெளியில் பார்த்தான். மேற்கு மாம்பலத்தின் ஓர் அழுக்கு வீதி தெரிந்தது.
ஏழெட்டு மணிக்குமேல் தான் தெருவுக்கு சுறுசுறுப்பு வரும். அப்புறமாய் ஒன்பது பத்துமணி வரை ஜே.ஜே. தான்.
எள் போட்டு எள் எடுக்க முடியாது.
எல்லோருமே ஆலாய்ப் பறப்பார்கள்.
ஆளுக்கொரு வேலை - ஒண்ணாந் தேதியானால் சம்பளம்! வயிறு இருக்கிறதே...?"
பாச்சுவுக்கும் வேலை தான் வேண்டும். இந்த கூட்டத்தோடு கூட்டமாக லஞ்ச் பாக்ஸ் சுமந்தபடி என்றைக்கு வேலைக்கு போவோம்?
தெரியவில்லை அவனுக்கு.
அவன் நின்று கொண்டிருக்கும் மாடிக்கு கீழே ஒரு ஆயிர ரூபாய் குடித்தன வீடு ஒன்று இருக்கிறது. அதில்தான் இருக்கிறார் அவன் மாமா ஆராவமுதன். ஒரே மாமாதான். அம்மாவின் தம்பி.
லூகாஸ் டி.வி.எஸ். கான்டீனில் பதினைந்து வருஷம் சர்வீஸ் போட்டு முடித்துவிட்டு இப்போது கல்யாணச் சமையல்காரராக இருப்பவர்.
ஆரா... பட்டணத்துல என் பிள்ளைக்கு ஒரு நல்ல வேலை பண்ணி வையேன்
எங்கக்கா... பேசாம என்னோட அனுப்பு சமையல் கத்துத் தரேன் அடுப்புல வெந்தாலும் அஞ்சாயிரம் பத்தாயிரம் வாங்கலாம் அதிலையும் தை, மாசி, பங்குனியில் பிடிச்ச கரண்டிய கீழே வைக்க முடியாது. சரியா இருக்கும்.
இல்லடா ஆரா... அவன் பி.எஸ்.சி. படிச்சிருக்கான்டா கரண்டி பிடிக்கச் சொல்றியே...?
என்ன பெரிய பி.எஸ்.சி, எம்.எஸ்.சியே மசால் வடைக்கு மாவாட்டிண்டுருக்கச்சே... நீ அனுப்பு. என்னோட கொஞ்ச நாள் இருக்கட்டும். நடுவுல போற இடத்துல பெரிய மனுஷர்களை அறிமுகப்படுத்தி வேற வேலைல சேர்த்து உட்டுட்றேன்.
இப்படி ஒரு சுபயோக சுபதினத்தில் அம்மாவும் மாமாவும் பேசிக் கொள்ளப் போய் அவனை சென்னை கவ்விப் பிடித்தது.
ஸ்ரீரங்கத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ஏறி மாமாவுடன் சென்னை வந்து சேர்ந்தான்.
இந்த காலை நேரம் ஸ்ரீரங்கத்தில் எப்படி இருக்கும் தெரியுமா?
நினைத்துப் பாக்கிறான்.
சூரியன் நெற்றியைக் காட்டுவதற்குள்ளாகவே காவேரியில் ஒரு ரவுண்டு குளியலை மாமிகள் முடித்திருப்பார்கள்.
ஈரத்தலையும், பிழிந்த புடவையுமாய் பாதுகாஸ்தோத்ரம் முணு முணுத்துக் கொண்டு வடக்குச் சித்திரை வீதியின் கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் எதிரில் தலைக்கு மேலே நரசிம்மாஸ்வாமி, இடது கோடியில் ரங்கநாயகி தாயார்.
போனால், மஞ்சள் குங்குமம் தருவார் பட்டர்.
ரங்கநாயகி கண்ணை மூடிக் கொண்டு ஆள் பார்த்து கருணை செய்கின்றவளாட்டம் உட்கார்ந்திருப்பாள். ஏனோ பாச்சுவுக்கு அவள் அவன் கேட்ட பல உத்யோகங்களை வாங்கித் தரவேயில்லை.
உனக்கு கரண்டிதான் என்று அனுப்பிவிட்டாள்.
அதை எல்லாம் நினைக்க நெஞ்சு கனத்துப் போகிறது.
பாச்சு அலுப்பிலும் சலிப்பிலும் இருக்கும் போது மாமா ஆராவமுதன் குரல் கேட்டது.
பாச்சு... பாச்சு... இன்னுமா எழுந்துருக்கலை?
எழுந்துட்டேன் மாமா... இதோ வரேன்...
குரலை முன்னே அனுப்பி விட்டு பின்னாலே அவன் படி இறங்கிச் செல்ல ஆரம்பித்தான்.
நெற்றி தெரிய உதித்த சூரியனும் மூக்கு மட்டத்திற்கு உயர்ந்திருந்தான்.
வீட்டுக் கூடத்தில் மாமா உட்கார்ந்து மளிகை லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தார்.
பாச்சுவை பார்க்கவும், பாச்சு அந்த டைரியை எடு...
என்று கூடத்து பிறையைக் காட்டினார். அதில் கண்டகச்சடா டயரியும் அதில் ஒன்று எடுத்து வைத்து நீட்டினான்.
அதில் பக்கங்களை புரட்டிப் பார்த்து விரலை எல்லாம் விட்டு எண்ணி முடித்துவிட்டு இன்னிக்கு ஜம்பு லிங்கய்யா வீட்டுல ஸ்ரார்த்த சமையல்...
என்று முணுமுணுத்தார் இதற்குள் பாச்சு பேஸ்ட்டை பிதுக்கி ஒண்ணரை வருஷமாய் அவன் பல்லை துலக்கியதில் பரட்டையாகி தேய்ந்துவிட்ட டூத் பிரஷ் மேல் பரத்தி மூடியிருந்தான்.
பின் வாயினுள் பிரஷ்ஷை விட்டு வயலின் வாசிக்கத் தொடங்கினான்.
பாச்சு... சட்டுன்னு குளிச்சுட்டு வா... இன்னிக்கு ஸ்ரார்த்த காரியம் மதியம் ஒரு மணி இரண்டு மணியோட ஜோலி முடிஞ்சிடம் ஒரு பெரிய நோட்டும் கிடைக்கும்.
என்ற படி டைரியை மூடினார் மாமா.
சப்தம் உள்வரை கேட்டிருக்க வேண்டும். உள்ளே இருந்து மாமி பூமா எட்டிப்பார்த்தாள்.
தீபாவளி வரப்போறது ஞாபகம் இருக்கட்டும்
என்றாள். அப்படியே பல் துலக்கிவிட்டு வரும் பாச்சு