Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oodathey Karuppu
Oodathey Karuppu
Oodathey Karuppu
Ebook83 pages48 minutes

Oodathey Karuppu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100700128
Oodathey Karuppu

Read more from Indira Soundarajan

Related to Oodathey Karuppu

Related ebooks

Related categories

Reviews for Oodathey Karuppu

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o d S t o r y y

Book preview

Oodathey Karuppu - Indira Soundarajan

http://www.pustaka.co.in

ஓடாதே, கருப்பு!

Odathey, Karupu!

Author :

இந்திரா செளந்தர்ராஜன்

Indira Soundarrajan

For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

1

ழை பெய்து கொண்டிருந்தது. கேரளம் பார்த்திராத மிக அதிக பட்ச மழை! மலைநாடே கரைந்து கடலில் போய் கலந்து விடுமோ என்று நினைக்கத் தூண்டும் மழை.

எங்குபார்த்தாலும் நீர்க்காடாக இருக்கிறது. புழாக்கள் நிரம்பி வழிந்து கடலைத் தேடும் ஆவேசத்தில் இருக்க, கொச்சுப் படகில் தனியாளாக அமர்ந்து தூண்டில் போட்டு குரவை மீன்களாக பிடிக்கப் பார்ப்போர் எல்லாம் தம் தம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு ஏக்கத்துடன் கொட்டும் மழையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் வயநாட்டு சம்பாகினி மலைப்பகுதி அந்த ருத்ரமழையால் மொத்தமாய் பாதிக்கப்பட்டு இருந்தது! பலாவும் மிளகும் பார்க்குமிடமெங்கும் தெரியும் மலை அது. எங்கும் விளையாத மனோரஞ்சித மலர்ச்செடிகள் அடிக்கு ஒன்றாக விளைந்திருக்கும் மலையும் கூட.

மலர்களில் இந்த மனோரஞ்சிதத்துக்கு மட்டும் விசே, அந்தஸ்து உண்டு. தொட்டால் விரல் மணக்கும். பறித்துப்போடும் பூக்குடலையில் கூட மணம் அகலாது பலநாள் கிடக்கும்.

அதிலும் ஆயிரக்கணக்கில் மனோரஞ்சிதம் பறித்து அதை பூக்குடலையில் போட்டு ஈரத்துணி போட்டு மூடி வைக்க அந்த பிராந்தியமே மயக்கத்தில் இருக்கும். இந்த மலர்களுக்கு நாகம் மயங்குகின்ற மாதிரி யாரும் மயங்க மாட்டார்கள். விரிந்த படத்தை சுருக்காமல் அப்படியே மலர்ச் செடிமேல் போர்வை போல் படுத்துக் கிடக்கும். இதனாலேயே சம்பாகினி மலைப்பரப்பில் பாம்பு இருப்பது தெரியாமல் அந்த மலர்ச் செடி மேல் கை வைத்து விட்டு அதன் கடிபட்டு இறந்து போகின்றனர் பல பேர்.

பலருக்கு சம்பாகினி என்றாலே ஒரு வகை பயம் கட்டும். அழகிய வளமான மலைப் பகுதிதான். பலா, வாழை கொழித்துக் குவிக்கும் பூமிதான். ஆனாலும் பயம் கட்டும்.

காரணம் பாம்புகள் மட்டுமல்ல. சுதாமன் நம்பூதிரியும் கூட!

ஆம்! சுதாமன் நம்பூதிரியின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது சம்பாகினி மலையே….

நம்பூதிரி ஒரு வரப் பிரசாதி. எத்தனை வயதாகிறது என்றே கண்டுபிடிக்க முடியாத தோற்றப் பொலிவு கொண்டவன் சுதாமன் நம்பூதிரி.

கட்டுமஸ்தான தேகம். துளிகூட நரைக்காத தோளில் புரளும் கூந்தல். அதை வளைத்துக் கட்டியிருக்கும் விதத்தில் தலைமேல் ஒரு மலை இருப்பது போல் தெரியும்.

நெற்றியில் முதிர்ந்த சந்தன கட்டையின் அரைத்த ஈரச் சந்தனப்பொட்டு. பொட்டின் நடுவில் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும் விதத்தில் துளிசெந்தூரம்.

நெற்றி வகிட்டுப் பரப்பில் தீய்ந்து கிடக்கும் மந்திர மை. தலைக்கட்டில் தவறாமல் இருக்கும் ஒற்றை மனோரஞ்சித மலர்.

நம்பூதிரி பக்கம் வரும்போதே வாசம் கமகமக்கும். நல்ல ஆகிருதியான உயரம். அதில்திறந்த மார்பில் புரளும் ருத்ராட்ச மாலைகளும், கருப்புக் கயிறுகளும் ஏகம்.

இடுப்புக்கு கீழே முழங்கால் வரையில் கச்சத்தை மடித்துக் கட்டியிருக்கும் விதத்திலும், ஜாதிப்பலகை செருப்பை போட்டு அவன் நடக்கும் விதத்திலும் அப்படி ஒரு கம்பீரம் பார்க்கலாம்.

நம்பூதிரி வருகிறான் என்றால் சம்பாகினி மலை வாசிகள் பேசமறந்து ஒதுங்கி வழிவிடுவார்கள். சிலர் நின்ற இடத்திலேயே கீழே விழுந்து வணங்கத் தொடங்கிவிடுவார்கள்.

அது பயமா? மரியாதையா? என்பது பட்டிமன்றக் கேள்வி.

எல்லாம் சரி…. இன்று இத்தனை மழைக்கும் நம்பூதிரிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றீர்களா?

நிறைய இருக்கிறது. அதோ தனது தென்னங்குடியில் அமர்ந்து பெய்யும் மழைக் கொட்டாரத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான் நம்பூதிரி.

அருகிலேயே தரை விளக்கு. குருத்தெலும்பால்தரையில் கையகலக்குழி தோண்டி மந்திரித்த எண்ணெய் விட்டு ஏற்றியவிளக்கு. இடைவிடாமல் ஒரு

Enjoying the preview?
Page 1 of 1